
ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவது தொடர்பான விபரங்கள் வார இறுதி பத்திரிகைகளில்
ஊடகவியலாளர்களின் நலனுக்காக பல்வேறு விடயங்களை முன்னெடுக்கும் அரசின் திட்டத்திற்கமைய ஊடகவியலாளர்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் வழங்குவது தொடர்பான விபரங்கள் இவ்வார இறுதியில் தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் என ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தாரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்றுகாலை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.


