Featured Home (TOP)

Recent Comments

Sunday, June 21, 2015

Unknown

அமைச்சர் மன்சூர் அவர்களின் அயராத முயற்சியினால் சம்மாந்துறை சென்னல் சாஹிறா மகா வித்தியாலயத்தில் இருமாடிக் கட்டிடம்.


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை சென்னல் சாஹிறா மகா வித்தியாலயத்தில் இருமாடி வகுப்பறைக் கட்டிடத்துக்கான அடிக்கல்நடல்இ பாடசாலை சாதனையாளர்கள் கௌரவிப்புஇ மாணவத்தலைவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கல் போன்ற முப்பெரும் விழh நேற்று நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் எம்.ஐ.மீராமுகைதீன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவஇ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புஇ சமூக நலன்புரிச் சேவைகள்இகிராமிய மின்சார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதீதியாக கலந்த கொண்டார்.

கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஸ்.சஹூதுல் நஜீம்இ பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன்இ பொறியியலாளர் ஏ.அறுண்இ உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.ஆப்தீன்இ வீ.ரீ.சகாதேவராஜாஇ அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி யூ.எல்.பஸீர்இ இணைப்பதிகாரி ஏ.எம்.தபீக் உட்பட அதிபர்கள்இ ஆசிரியர்கள்இ மாணவர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.







Read More
Unknown

" அருள் சொரியும் அற்புத மாதம்"

 புனித ரமளானின் பிறை கண்டு எழுதிய கவிதை


(மதியன்பன்)

அடிவானிற் பிறை தெரிய அகமெல்லாம் நகை விரிய
அல்லாஹ்வின் ஏவல் வரும் நோன்பாய் - அதை
அகம் மகிழ ஏற்றிடுவோம் மாண்பாய்
விடிகின்ற பொழுதுடனே விருப்பமுடன் நோன்பிருந்து
வினைதீர்க்கும் இறையோனைத் தொழுவோம் - நம்
வினை யென்னி மனமுருகி அழுவோம்.


நோன்பிருக்கும் காலத்தில் நோவினைகள் செய்யாது
நொந்தவர்க்கு உதவிகளைச் செய்வோம் - நல்ல
நோக்கமிதால் இறையருளைக் கொய்வோம்.
வான் மறையை ஓதுவதை வல்லோன் துதி பாடுவதை
வழமையென தனதாக்கிக் கொள்வோம். - உயர்
வளமான சொர்க்கத்தை வெல்வோம்.


இரக்கின்ற மாந்தருக்கு இருப்பதனை ஈந்தவரின்
இதயத்தை அன்பாலே வெல்வோம். - வரும்
இடர்களினை அதனாலே கொல்வோம்.
சுரக்கின்ற இறையருளைச் சுமந்து வரும் ரமளானை
சுமையென்று எண்ணாது ஏற்போம். - நம்
சுற்றத்தை அன்போடு சேர்ப்போம்.


பகல்நேரம் பசித்திருந்து படைத்தவனைப் பணிந்திருந்து
பக்தியுடன் நோன்பதனை நோற்போம். – இன
பந்துக்கள் உறவுதனைச் சேர்ப்போம்.
நிகரில்லா இறையவனை நின்று நிதம் வணங்குவதை
நிலையாக வாழ்க்கையிலே கொள்வோம். - பின்னர்
நிறைவான சொர்க்கத்தை வெல்வோம்.


Read More