Featured Home (TOP)

Recent Comments

Sunday, August 9, 2015

avathani Media Network

நூறாணியா வீதி, அலியார் பேக்கரி சந்தியில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற NFGGயின் பிரச்சாரக் கூட்டம்

(NFGG ஊடகப்பிரிவு)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டம் நேற்று நூறாணியா வீதி, அலியார் பேக்கரி சந்தியில் இடம்பெற்றது.
இப்பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் நகரசபை உறுப்பினர் MHA.நஸீர் அவர்களின் தலைமையில் NFGGயின் பிராந்திய செயற்குழு உறுப்பினர் சகோ, பைசர் அமான் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் விஷேட உரையாற்றினார். அத்துடன் NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), SLMCயின் கொள்கை பரப்புச் செயலாளர் ULMN.முபீன் BA, சட்டத்தரணி அஸ்ஹர், குருநாகலில் இருந்து .... முஹம்மத் றியாஸ்,  உள்ளிட்ட பலரும் உரையாற்றினார்கள்.
NFGGயின் தலைமைத்துவசபை உறுப்பினர்களான பொறியியலாளர் பழுலுல் ஹக், அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி) மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் AGM.ஹாறூன் மற்றும் SLMCயின் மத்தியகுழு உறுப்பினர்களான மர்சூக் அஹமது லெப்பை, இல்மி அஹமது லெப்பை உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் அதிகளவான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இதேவேளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏறாவூரில் ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டம் நேற்று ஓடாவியார் வீதி, றிபாய் பள்ளிவாயலின் அருகாமையில் இடம்பெற்றது.





















Read More
avathani Media Network

கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளம்

கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளத்தைப் பதிவு செய்யும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

16 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கான கடவுச் சீட்டில் விரல் அடையாளம் பதிவு செய்யப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டார்.

16வயதுக்குக் குறைந்தவர்களுக்கான கடவுச்சீட்டில் இந்த நடைமுறை பின்பற்றப்பட மாட்டாது.

இதன்பொருட்டு, கொழும்பு பிரதான அலுவலகம் உட்பட மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய பிராந்திய அலுவலகங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கின்றவர்கள் தமது விரல் அடையாளத்தை வழங்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குடிவரவு-குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

விரல் அடையாளங்கள் கணனி மயமாக்கப்பட்டு கடவுச்சீட்டுகளில் அடையாளத்தின் பொருட்டு உள்ளடக்கப்படுவற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Read More
avathani Media Network

வேக கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

வேக கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வழக்கு தொடரப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
மேலும், நாட்டில் தற்போது பிரதான பாதைகளில் வேக கட்டுப்பாட்டு அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையம் தெரிவித்துள்ளது.
Read More
avathani Media Network

'பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லா' நூல் வெளியீடு


மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச் சருமான தாஜுல் மில்லத் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான "பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லா " எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 12ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.ஏ.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.

நூலின் அறிமுகத்தை மூத்த எழுத்தாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான தமிழ்த்திரு. சிவலிங்கம் சதீஸ்குமார் வழங்குவதுடன் நூல் விமர்சனத்தை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம்.அஸ்ரப் செய்யவுள்ளார்  இவ்விழாவில் தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் சிறப்புரை ஆற்றுவதுடன் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் பிரதி தவிசாளர் ஏ.எம்.எம்.தெளபீக் நன்றியுரையாற்றவுள்ளார்.

(ஜுனைட்.எம்.பஹ்த் )
Read More
avathani Media Network

“சமகால அரசியல் எண்ணக்கருக்கள்” நூல் வெளியீட்டு விழா

( முஹம்மட் ஜெலீல், நிந்தவூர் )

பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியல் முதுநிலை விரிவுரையாளர் எம்.எம்.இஃஜாஸ் மற்றும் துறைசாறார் விரிவுரையாளர்கள் எழுதிய “சமகால அரசியல் எண்ணக்கருக்கள்” என்ற தலைப்பில் எழுதிய நூல் வெளியீட்டு விழா இன்று 08-07-2015 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் நிந்தவூர் பிரதேச சபை மட்டபத்தில் நடைபெற்றது.

மேலும் இவ்விழா டாக்டர் ஏ.எம்.ஜாபீர் அவர்களில் தலைமைதத்துவத்தில் இடம்பெற்றதோடு இதில் பிரதம அதிதியாக கௌரவ அல்ஹாஜ் எம்.ரீ.ஹசனலி அவர்களும், கௌரவ அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் பைசால் காசிம் அவர்களும், விசேட அதிதியாக புவியியல் துறை பேராதனை பல்கலைகழக பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லா அவர்களும் கலந்துகொண்டு இந்நூல் வெளியீட்டு கௌரவிப்பு கதாநாயகனாக முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராதனை பல்கலைகழக அல்ஹாஜ் என்.பீ.எம். சைபுடீன் அவர்களை பொன்னாடை போற்றி கௌரவித்தனர்.

மேலும் இவ்விழாவுக்கு பல கல்விமான்களும் வருகைதந்ததோடு அவர்களுக்கு கௌரவ அதிதிகளால் நூல்களும் கையளிக்கப்பட்டு இவ்விழா சிறப்பாய் நிறைவுபெற்றது.    




  
Read More
avathani Media Network

NFGGயின் மற்றுமொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று மஞ்சந்தொடுவாயில் இடம்பெற்றது


(NFGG ஊடகப்பிரிவு)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான மற்றுமொரு பிரச்சாரக் கூட்டம் நேற்று மஞ்சந்தொடுவாய், ஹிழ்ளுரியா ஜும்ஆபள்ளி சந்தியில் இடம்பெற்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய செயற்குழு உறுப்பினர் MIM.ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், பெண்கள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), அதன் தலைமைத்துவசபை உறுப்பினர் MM.பாளுலுல் ஹக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 5ம் இலக்க வேட்பாளர் பொறியியலாளர் சிப்லி பாறூக் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இதன்போது உரிய முறையில் தெரிவு செய்யப்படாத பிரதிநிதித்துவங்கள், கடந்த காலங்களில் நடந்துகொண்ட விதங்கள் தொடர்பில் விஷேட காணொளி காட்சிகளும் பொதுமக்கள் மத்தியில் காண்பிக்கப்பட்டன.

























Read More