Featured Home (TOP)

Recent Comments

Monday, August 10, 2015

avathani Media Network

கல்முனை நவீன நகராக அபிவிருத்தி சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை - பிரதமர் ரணில்

கல்­மு­னையை மிகவும் நவீன முறையில் அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். நாட்­டி­லுள்ள முக்­கிய நக­ரங்­களில் ஒன்­றாக கல்­மு­னையை மாற்­றுவோம். அத்­தோடு, சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­திற்கு தனி­யா­ன­தொரு பிர­தேச சபையை உரு­வாக்­குவோம்.

இவ்­வாறு நேற்று மாலை 05.30 மணி­ய­ளவில் கல்­முனை சந்­தாங்­கேணி மைதா­னத்தில் நடை­பெற்ற தேர்தல் பிரச்­சாரக் கூட்­டத்தில் பிர­தம மந்­திரி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

கல்­முனை மாந­கர சபையின் மேயர் நிஸாம் காரி­யப்பர் தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்­திற்கு பெருந்­தி­ர­ளான பொது மக்கள் கலந்து கொண்­டார்கள். இங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
நாங்கள் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒற்­று­மைப்­பட்டு வாக்­க­ளித்தன் மூல­மாக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெற்றி பெறச் செய்தோம். இன்று நாட்டில் நல்­லாட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

முத ரீதி­யாக மேற் கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் இல்­லாமல் செய்­யப்­பட்­டுள்­ளன. எல்­லோரும் இலங்­கையர் என்ற ரீதியில் சாதி, மத பேதங்கள் இன்றி ஒற்­று­மை­யுடன் வாழ்­வ­தற்­கு­ரிய சூழல் ஏற்­பட்­டுள்­ளது. மத உரி­மைகள் பாது­காக்­கப்­பட்­டுள்­ளன. 




ஆயினும், இன்று மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ இன­வாதம் பேசிக் கொண்­டி­ருக்­கின்றார். இன­வாதம் பேசி அர­சியல் செய்ய வேண்­டிய தேவை எமக்­கில்லை. மஹிந்­தவை துரத்தி அடிப்­ப­தோடு, இன­வா­தத்­தையும் முற்­றாக ஒழிக்க வேண்டும்.

இதற்­கா­கவே ஐ.தே.கவின் யானைச் சின்­னத்­திற்கு வாக்­க­ளிக்­கு­மாறு கேட்­கின்றோம். நிம்­ம­தி­யுடன் சகல இனங்­களும் ஒற்­று­மை­யுடன் வாழ்­வ­தற்கு ஐ.தே.கவுக்கு வாக்­க­ளிக்க வேண்டும்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒற்­று­மைப்­பட்­ட­தனைப் போன்று ஹெல­உ­று­மய, மலை­யக தமிழ் மக்கள், முஸ்லிம்  மக்கள் எல்­லோரும் எங்­க­ளுடன் இணைந்­துள்­ளார்கள். அவர்­களின் கட்­சி­களும் எம்­முடன் உள்­ளன. இந்த ஒற­று­மை­யுடன் ஐ.தே.கவின் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும்.

இலங்­கையில் முத­லீடு செய்­வ­தற்கு வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் வரி­சையில் நின்று கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அவர்கள் ஐ.தே.கவின் ஆட்சி வேண்­டு­மென்று கேட்­கின்­றார்கள். 10 இலட்சம் வேலை வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம். 

கல்­முனை  நக­ரையும், அதனை சூழ உள்ள பிர­தே­சத்தை நவீன முறையில் அபி­வி­ருத்தி செய்து கல்­மு­னையை பாரிய அபி­வி­ருத்­தியை கொண்ட நக­ர­மாக மாற்­றுவோம். அத்­தோடு, ரவூப் ஹக்­கீமும், கரு­ஜ­ய­சூ­ரி­யவும் பேசி எடுத்­துள்ள முடி­வுக்கு அமைய  சாய்ந்­த­ம­ருது மக்­களின் நீண்ட கால கோரிக்­கை­யா­க­வுள்ள சாய்ந்­த­ம­ரு­திற்­கான பிர­தேச சபையை ஏற்­ப­டுத்­துவோம். 

மகா­வலி ஏ மற்றும் பி வல­யங்­களில் 16 ஆயிரம் ஹெக்­டயர் ஏக்­கரில் வேளாண்­மையை செய்­வ­தற்கும் தீர்­மா­னித்­துள்ளோம். 

இவ்­வாறு இனங்­க­ளுக்கு இடையே ஒற்றுமை, நல்லாட்சி, தொழில் வாய்ப்பு, வெளிநாட்டு முதலீடு, இனவாதத்தை ஒழித்தல் போன்றவைகளை மேற்கொண்டு புதியதொரு இலங்கையை உருவாக்குவோம். ஏன்றார். 

இக்கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் உட்பட அம்பாரை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்குளும் கலந்து கொண்டார்கள்.
Read More
avathani Media Network

சின்னப்பள்ளி சதுக்கத்தில் இடம்பெற்ற NFGGயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு

NFGG ஊடகப்பிரிவு,


சின்னப்பள்ளி சதுக்கத்தில் நேற்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
NFGGயின் பிராந்திய செயற்குழு உறுப்பினர் அல்ஹாஜ் MSM.இப்ராஹீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் மட்டகக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், NFGGயின் தலைமைத்துவசபை உறுப்பினர் பழுலுல் ஹக், சட்ட முதுமாணி அஸ்ஹர், அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி),  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5ம் இலக்க வேட்பாளர் பொறியியலாளர் சிப்லி பாறூக் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.
NFGGயின் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத், பிராந்திய செயற்குழு உறுப்பினகளான முன்னாள் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான AGM.ஹாறூன்,அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி),  சகோ, முஹம்மத் ஹாபிழ், SLMCயின் கொள்கை பரப்புச் செயலாளர் ULMN.முபீன் BA உள்ளிட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்ட இப்பிரச்சாரக் கூட்டத்தில் விஷேட காணொளிக் காட்சிகளும் காண்பிக்கப்பட்டன.



























Read More
avathani Media Network

முஸ்லிம் அர­சியல் களம் சில அவ­தா­னங்கள்

(உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்சூர்)

புதி­ய­தொரு பாரா­ளு­மன்­றத்தை நாம் தெரியப் போகிறோம். இந்­நாட்டுப் பிர­ஜைகள் நாம். முஸ்லிம் சிறு­பான்­மை­யினர். நாட்­டுக்கு ஆற்ற வேண்­டிய கட­மைகள் எமக்­குள்­ளன. அத்­தோடு நாம் எம்மை பலப்­ப­டுத்திக் கொள்­வது அக் கட­மையை ஆற்ற எம்மைத் தகு­தி­யுள்­ள­வர்­க­ளாக ஆக்கும்.

பல­வீன சமூகம் அடுத்த சமூ­கங்­க­ளுக்­காக உழைப்­பது எப்­படிப் போனாலும் தன்னைக் காத்துக் கொள்­வதே அதற்குப் பெரும் சிர­ம­மாகும். அர­சியல் பலம் எம்மைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான முக்­கிய சாத­னங்­களில் ஒன்று .

இந்­நி­லையில் எமது அர­சியல் தலை­மை­க­ளி­ட­மி­ருந்தும், கட்­சி­க­ளி­ட­மி­ருந்தும் நாம் எதிர்­பார்ப்­பது என்ன?

1. இன உணர்வு கூர்­மை­ய­டை­யாமல் தமது நடத்­தைகள், பேச்­சுக்­களை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் உள்­ள­வர்­க­ளாக அவர்கள் இருக்க வேண்டும்.

இன உணர்வு திட்­ட­மிட்டு மிகக் கவ­ன­மாக வளர்க்­கப்­பட்டு வரு­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.

அது மிக மெது­வாக வளர்ந்­தாலும் வளர்ந்து வரு­கி­றது என்ற உண்­மையை எப்­போதும் நாம் கவ­னத்திற் கொள்ள வேண்டும்.

எனவே ஓர­ளவு நீண்ட எதிர்­கா­லத்தில் எமது பௌதீக, மான­சீக வாழ்­வுக்­கா­னவைகளுக்கு அச்­சு­றுத்தல் தோன்ற இட­முள்­ளது என்­பதில் சந்­தே­க­மில்லை.

இச்­சூ­ழலில் எமது தலை­மை­க­ளிடம் இந் நிலை­யி­லி­ருந்து சமூ­கத்தைக் காக்கும் திட்டம் அல்­லது திற­னுள்­ளதா?


இங்கு எதிர்­கா­லத்தில் இரு விட­யங்களை மீள் பரி­சீ­ல­னைக்­குட்­ப­டுத்த வேண்டும்:
  
அ)      தனிக்­கட்சி அர­சியல்
 ஆ)    முஸ்­லிம்­களை மட்­டுமே எமது பிர­தி­நி­தி­க­ளாகத் தெரிவு செய்ய வேண்டும் என்ற                    சமூக மன­நிலை.

 இம் முறை கண்டி போன்ற பிர­தே­சங்­களில் சகோ­தர சமூ­கத்தில் உள்ள ஒரு­வரைத் தெரிவு செய்யும் சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அந்த சந்­தர்ப்­பத்தைப் நன்கு பயன்­ப­டுத்­து­வதன் மூலம் இதனை ஆரம்­பித்து வைக்க முடியும்.

தேசிய பங்­க­ளிப்பு, அர­சியல் மைய நீரோட்­டத்தில் கலத்தல் என்ற அதி­முக்­கிய அம்சம் குறித்த எமது திட்டம், பொறி முறை என்ன என்­பது தலை­மை­க­ளி­ட­மி­ருந்து எதிர்­பார்க்­கப்­படும் இன்­னொரு அம்சம்.

2. முஸ்லிம் சமூ­கத்தின் மான­சீக இருப்பு – மார்க்கம், கலாச்­சாரம், தனித்­துவம் என்­ப­வற்றைக் காப்­பது என்றால் என்ன? அதற்­கான திட்­டமும், வழி முறையும் எமது அர­சியல் தலை­மை­க­ளிடம் காணப்­படல் முதன்­மை­யான அம்­சங்­களில் ஒன்று.

3. எமது பௌதீக இருப்பைப் பலப்­ப­டுத்தல்: இது இரு கருத்­துக்­களைக் கொடுக்கும்

அ) கல்வி, பொரு­ளா­தார ரீதி­யாகப் பலம் பெறல்.

ஆ) முஸ்லிம் கிரா­மங்­களின் கீழ்க் கட்­ட­மைப்பைப் பலப்­ப­டுத்தல்.

இறு­தி­யாகச் சொன்ன முஸ்லிம் சமூ­கத்­தோடு நேர­டி­யாகச் சம்­பந்­தப்­படும் விவ­கா­ரங்­களை கையாள்­வது முதற்­சொன்ன பகு­தி­யோடு முரண்­பட்டுச் செல்­லாதபடி அவ­தா­ன­மாக இருப்­ப­துவும் அவ­சி­ய­மாகும்.

இத்­த­கைய போக்கு கொண்ட ஒப்­பீட்டு ரீதி­யாக சிறந்த தலை­வர்­களை நாம் தெரிவு செய்­வோ­மாக.

முஸ்லிம் அர­சியற் களத்தில் இரு புதிய அம்­சங்­களை இம்­முறை காண்­கிறோம்.

ஒரு புதிய அர­சியல் பிர­வேசம் : NFGG என்ற புதிய கட்சி பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இறங்கும் முடி­வுக்கு வந்­தமை. அந்­த­வ­கையில் முஸ்லிம் காங்­கி­ர­ஸோடு இணைந்­துள்­ளமை.

இக்­கட்­சியில் இஸ்­லா­மிய சிந்­தனைப் பின்­னணி கொண்­டோரும் இணைந்­துள்­ளனர்.

இந்தப் பிர­வேசம் முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு புதிய அர­சியல் தலை­மையை உரு­வாக்­குமா என்­பது காலம் சொல்ல வேண்­டிய பதில். எனினும் அதனைச் சாத்­தி­யப்­ப­டுத்த அவர்கள் கையாள வேண்­டிய முறைகள் பற்­றிய சில ஆலோ­ச­னை­களை முன்­வைப்­பது அவ­சியம் எனக் கரு­து­கிறோம்.

01) பாரா­ளு­மன்ற அங்­கத்­துவம் கிடைத்த போதும் அமைச்சுப் பத­விகள் எத­னையும் ஏற்­கா­தி­ருத்தல்.

உட­னேயே வேக­மாக அர­சி­யலில் முன்­னே­று­வது அபா­ய­க­ர­மா­னது. நான் எங்கே காலடி வைக்­கிறேன் என்­பதை அவ­தா­னித்து மிகவும் நிதா­ன­மா­கவும், அவ­தா­ன­மா­கவும், மெது­வா­கவும் செல்­வது மிக அவ­சியம்.

இந்­நி­லையில் வேலைப் பழு குறை­வாக இருப்­பதால் மக்­க­ளோடு அதி­க­ம­திகம் தொடர்பு வைக்­கவும், தொடர்ந்தும் களத்­தி­லி­ருக்­கவும் பெரி­ய­ளவு உதவும்.

02) இஸ்­லா­மிய அர­சியல் என்ற கருத்தில் இஸ்­லா­மிய வார்த்தைப் பிர­யோ­கங்கள், கதை­யா­டல்­களைத் தவிர்த்தல். இன்­னொரு வகையில் சொன்னால் இஸ்­லாத்தை அர­சியல் களத்­திற்கு இழுக்­கா­தி­ருத்தல்.

இது பல விட­யங்­க­ளுக்­காக மிக அவ­சி­ய­மா­னது.

அ) சிறு­பான்மை சமூ­க­மொன்றில் இது பிழை­யான மனப் பாதிப்­பு­களை அடுத்த சமூ­கங்­களில் ஏற்­ப­டுத்தும். சிங்­கள, தமிழ் தீவி­ர­வா­தத்­திற்கு அது துணை புரியும்.

ஆ) அடுத்த கட்­சி­களின் முஸ்லிம் அர­சியல் வாதி­களும் இஸ்லாம் பற்றிப் பேசத் தூண்டப் படு­வார்கள், அது பெரும் பாலும் தப்பும், தவ­று­மாக அமையும்.

இ) அர­சியல் பற்­றிய வரை­வி­லக்­கணம் சொன்ன இஸ்­லா­மிய சட்ட அறி­ஞர்­களும் கூட“­மக்­களை தீமைகள், சீர்­கே­டு­களை விட்டு அப்­பு­றப்­ப­டுத்தி நலன்­களை சாதித்துக் கொடுத்தல்” என்றே சொன்­னார்கள்.

சிறு­பான்மை முஸ்லிம் அர­சி­யலில் முழு­மை­யாகப் காணப்­ப­டு­வது நன்­மை­களைச் சாதித்­த­லே­யாகும். அதுவே சிறு­பான்மை அர­சியல் தத்­து­வத்தின் ஒரு முக்­கிய அம்­ச­மாகும்.

இப்­பின்­ன­ணியில் அதற்­கான வேலைத்­திட்­டங்­க­ளை தயா­ரிப்­ப­துவும், அவற்றை சாதிப்­ப­து­வுமே முழு­மை­யாகக் கவனம் செலுத்­தப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.

இந்தக் கருத்­தோட்­டத்தின் இன்­னொரு அம்­சமே இஸ்­லா­மிய இயக்­கங்­க­ளோடு தொடர்பு வைக்காதிருத்தலும், அவ்வியக்கங்கள் களமிறங்காமல் இருத்தலுமாகும். இது இரு சாராரையும் பாதுகாப்பதற்கு மிக முக்கியமாக உதவும்.

இஸ்லாமிய உலகிலேயே தஃவாவையும், அரசியலையும் கலக்கக் கூடாது என்ற கருத்து வலுப்பெற்று நடைமுறையாகி வரும் சூழல் இது சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் இது மிக முக்கியமானது.


03) முஸ்லிம் சமூகம் வரலாறு நெடுகிலும் இணக்க அரசியல் போக்கையே கடைப்பிடித்து வந்தது. காங்கிரஸின் முன்னால் தலைவர் மர்ஹும் பிணக்க அரசியலாக அதனை மாற்ற முயன்றார். ஆனால் அது முழுமையடையவில்லை.

தமிழ் சமூகத்தினர் இணக்க அரசியலில் துவங்கினார்கள். தமிழ்த் தலைவர் செல்வ நாயகம் அதனை பிணக்க அரசியலாக மாற்றி ஆனால் சாத்வீகப் போராட்டமாகக் கொண்டு சென்றார். பிறகு அது ஆயுத போரட்ட அரசியலாக மாறியது.

சகோதர சமூகமொன்றின் இந்த அனுபவமும் எம் முன்னே உள்ளது. இப்போது நாம் எவ்வாறு செல்லப் போகிறோம் என்ற தத்துவார்த்தப் பின்னணியொன்று எம்மிடம் இருக்க வேண்டும். அதனை NFGG உருவாக்கி கொள்ளல் அவர்களுக்கு முன்னே உள்ள பெரும் பொறுப்பாகும்.

04) அரசியல் மைய நீரோட்டத்தில் கலத்தல் என்ற கருத்தோட்டத்தை சாதிப்பது எவ்வாறு என்பது மிகவும் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய ஓர் அம்சமாகும். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்திருத்தலை ஒரு சந்தர்ப்பமாகப் பயன் படுத்திக் கொள்ளலாமா? அதற்கான பொறிமுறை என்ன? என்பது இப்பின்னணியில் ஆலோசிக்கப் படவேண்டிய விடயமாகும்.

05) இறுதியாக அரசியல் கட்சி என்பதை விட அரசியல் நிறுவனமாக இயங்கல் என்ற நிலை பற்றி NFGG அதிகமதிகம் சிந்திக்க வேண்டும்.

இரண்டிற்குமிடையிலான வேறுபாடு தெளிவு என்பதால் விவரமாக விளக்கத் தேவையில்லை என நம்புகிறேன்.

முஸ்லிம் அரசியல் களத்தில் இரண்டாவது முக்கிய அம்சம் இம்முறை முஸ்லிம்களில் குறிப்பிடத்தக்களவு தொகையினர் JVP க்கு ஆதரவாக இயங்கத் துவங்கியுள்ளனர். இதற்கான காரணமென்ன என்பதை ஆராய்வதை விட இதனை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது முக்கியம் எனக் கருதுகிறேன்.

1. முஸ்லிம்கள் அரசியல் மைய நீரோட்டத்தில் கலப்பதற்கான ஒரு முக்கிய வாயில் இதுவாகும். JVP இல் இணைந்தமை வெறும் உணர்ச்சி பூர்வ நிலையாலும், நம்பிக்கையீனத்தாலும் உருவான முடிவாக இல்லாமல் JVP இல் நுழைந்தவர்கள் இவ்விடயத்தைக் கவனத்தில் கொள்வது அதனை வளர்க்க முயல்வது மிக முக்கியமாகும்.

2. முஸ்லிம்கள் தேசிய நலனில் அக்கறை கொண்டவர்கள் வெறுமனே சந்தர்ப்பவாத அரசியலை மட்டுமே கொண்டு செல்பவர்களல்ல என்ற கருத்தைப் பரவலாகவும் முஸ்லிம்கள் பற்றிய பிழையான மனப்பதிவை நீக்கவும் இது உதவ முடியும்.

இன உணர்வு கூர்மையடைவதிலிருந்து பாதுகாக்கவும் இத்தகையதொரு அரசியல் பிரவேசம் பெரியளவு உதவும்.,

ஆனால் இங்கு முக்கியமானது என்னவென்றால் அக்கட்சியின் வினைத்திறன்மிக்க உழைப்பாளர்களாக அங்கு நுழையும் முஸ்லிம் தலைமைகள் இருக்க வேண்டும். இந்த நாட்டின் தேசியக் கட்சிகளை உருவாக்குதல், வளர்த்தலில் முஸ்லிம் தலைமகைளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்குண்டு என்பது வரலாறு. இக்கட்சியைப் பொறுத்தவரையிலும் அப்பங்கை வகிக்கும் திறன் அங்கு நுழையும் முஸ்லிம் தலைமைகளுக்கு இருக்க வேண்டும்.

இவ்வாறு எழுதுவது கண்டு முஸ்லிம் வாக்கைச் சிதறச் செய்வதற்கு இது காரணமாக அமையும் என சிலர் கூறலாம். ஒரு மாற்றத்தை உருவாக்க ஆரம்பத்தில் சில நஷ்டங்களைச் சகித்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை நாம் இங்கு கவனத்திற்கு கொள்ள வேண்டும். எந்த நஷ்டமுமின்றி ஒரு மாற்றத்தை நாம் உருவாக்க முடியாது.

அடுத்த முக்கிய அம்சம் நாம் பாராளுமன்றத்திற்கு அனுப்புவர்களின் தொகையையல்ல, தரத்தையே எப்போதும் கவனத்திற்கு கொள்ள வேண்டும்.

முஸ்லிம் வாக்காளர்கள் எப்போதும் வாக்களித்தல் என்பது ஒரு அமானிதம், ஒரு சாட்சி பகர்தல் என்பதைக் கவனத்திற் கொள்வார்களாக.

அமானிதத்தைப் பாதுகாத்தல் ஒரு முஸ்லிமின் அடிப்படைப் பண்பு. பொய்ச் சாட்சியம் ஒரு பயங்கரப் பாவம்.
Read More
avathani Media Network

தண்ணீர் தாகம் தீர்ப்போம் வவுணதீவில் கவனயீர்பு போராட்டம்

என்று தணியும் எமது தண்ணீர் தாகம்? ஒன்று கூடுவோம் வாரீர் குரல் கொடுப்போம் தண்ணீர் தாகம் தீர்ப்போம் என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஒன்றியம் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கங்கள் இணைந்து உன்னிச்சை குளத்து முன்றில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த பிரதேச மக்கள் வரட்சியான காலத்தில் குளிப்பதற்காகவும், குடிப்பதற்காகவும் நீரை பெற்றுக் கொள்ள பல மைல் துரம் சென்று நீரை பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தங்களது அன்றாடத் நீர் தேவையினை நிறைவேற்ற பாதுகாப்பற்ற வீதி ஓரங்களில் குளிப்பதுமான ஒரு அவல நிலமை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை பல வருடகாலமாக குளத்தையும் வாய்க்கால்களையும் அண்மித்த இடங்களில் காணப்படும் பூவல் முறைமையில் குளிகளைத் தோண்டி மாசடைந்த நீரினையே குடித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வி;டயங்கள் தொடர்பாக மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தெரிந்திருந்தும் தங்களுக்கான நீர் வசதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுத்துத் தர முன்வரவில்லை என தெரிவிக்கின்றனர்.
இதன்போது ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஸல் சரத்பொன்சேகா குறித்த விடயம் தொடர்பாக அறிந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு குறித்த விடயம் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இதுதொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்வதாக மக்களிடம் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு கோரிக்கை அடங்கிய மகஜர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களினால் கையளிக்கப்பட்டது. பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.



Read More
avathani Media Network

தெஹிவளை பள்ளிக்கு அருகில் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்ட தெஹிவளை பள்ளிவாசலுக்கு அருகில் பொது மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
source - virakesary
Read More
avathani Media Network

"எதிரொலி" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பங்கேற்கிறார்

(NFGG ஊடகப்பிரிவு)
சக்தி தொலைக்காட்சியில் இன்று 10.08.2015 இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள "எதிரொலி" கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் பங்கேற்கின்றார்.
இந்நிகழ்வின்போது, தமது NFGGயின் நல்லாட்சி அரசியற் கோட்பாடுகள் பற்றியும், இதன்மூலம் நாட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் தமது வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும்  நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
Read More
avathani Media Network

கவிதா உள்ளங்களை குளிர வைத்த வகவத்தின் 18 வது பௌர்ணமி கவியரங்கு



வலம்புரி கவிதா வட்டத்தின் 18வது கவியரங்கு கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் கடந்த பௌர்ணமி தினத்தன்று இலக்கியவாதிகளின் ஒன்றுகூடலுடன் சிறப்பாக நடந்தது. வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார்.  செயலாளர் இளநெஞ்சன் முர்ஷதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கடந்த 10-7-2015ல் இறையடி சேர்ந்த வகவக் கவிஞர் மலைத்தேனீ என்ற பெயரில் கவிதை பாடிய உடத்தலவின்ன அப்துர் ரஹ்மான் நினைவுக் கூரப்பட்டார்.  சிறந்த மரபுக் கவிஞரான இவர் ஆரம்ப நாட்களில் கோட்டகொட ஏ.ரஹ்மான் என்ற பெயரில் எழுதி புகழ் பெற்றவராவார்.
அண்மையில் நம்மைவிட்டுப் பிரிந்த இந்திய முன்னாள் ஜனாதிபதியும் சிறந்த கவிஞருமான அப்துல் கலாமும், கவிஞர்களின் பாடல்வரிகளுக்கு உயிர் கொடுத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும் நினைவு கூரப்பட்டனர்.

உலக கவிதைகள் வரிசையிலே கறுப்பின கவிதைகள் குறித்த தனது பார்வையினை கவிஞர் மேமன்கவி மிகச் சிறப்பாகவும், சுவாரசியமாகவும் வெளிப்படுத்தினார். இனரீதியாக நசுக்கப்பட்ட மக்களிடம் இருந்து இதயத்தை வருடும் சிறப்பான கவிதைகள் வெளிப்பட்டதாகவும், எடுத்துக்காட்டாக. 70 களில்  கவிஞர் ஈழவாணனை ஆசிரியராகவும் மேமன்கவி யை வெளியீட்டாளராகவும் கொண்டு வெளிவந்த அக்னி இதழ் தனது 5வது இதழை கறுப்பின மக்களின் கவிதைச்; சிறப்பிதழாகக் கொண்டு வந்ததைக்  குறிப்பிட்டு, அவ்விதழில் நம்மவர்களால் ; மொழிபெயர்ரக்கப்பட்ட கறுப்பின மக்களின் கவிதைள் சிலவற்றை வாசித்துக் காட்டினார்.  குறிப்பாக பேராசியர் எம்.ஏ. நுஃமான்; அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட கறுப்பின கவிஞர்ளில் முக்கிமான ஒரு கவிஞராக திகழ்ந்த லங்ஸ்டன் ஹியூஸின்; ''கலப்பு' எனும்; கவிதையைம்;, மு.கனகராஜனால்; மொழிபெயர்க்கப்பட்ட கறுப்பினப் பெண் கவிஞர்  நிக்கி கியோவானின்  எனது கவிதையும்,  என். சுண்முகலிங்கனினால்; மொழிபெயர்க்கப்பட்ட கறுப்பின கவிஞரும் நாட ஆசிரியருமான நோர்மன் ஜோர்டனின் கறுப்பு போராளி எனும் கவிதையையும் hசித்துக் காட்டியதோடு, அவ்விதழில் மேலும் பல கவிதைகளை மொழிபெயர்த்த கே.எஸ்.சிவகுமாரனினால்   எழுதப்பட்ட கறுப்பு இலக்கியம் எனும் குறிப்பையும் எடுத்துக் காட்டியதோடு, கறுப்பின மக்களின் வரலாற்றையும், அவர்தம் கலை இலக்கிய வரலாற்றையும் இளம் தலைமுறையினர் தேடிப் படிக்க வேண்டும் என்றார். அக்கவிதைகளை மேமன்கவி உணர்ச்சிபூர்வமாக முன் வைத்தமை சபையை கவர்ந்தது. 

கலஹா சங்கர் கைலாஷ் தலைமையேற்று நடத்திய கவியரங்கில், கவிஞர்கள் கிண்ணியா அமீர் அலி, ஈழ கணேஷ், பிரேம்ராஜ், தமிழ்த் தென்றல் அலி அக்பர், சமூகஜோதி எம்.ஏ.ரபீக், சட்டத்தரணி உஸ்மான் மரிக்கார், வெளிமடை ஜஹாங்கீர், போறுத்தொடi;ட றிஸ்மி, மிஹிந்தலை ஏ. பாரிஸ், எம்.ஏ.எம்.ஆறுமுகம், சட்டத்தரணி நூருஸ் ஷப்னா நஜ்முல் ஹுசைன், கலையழகி வரதராணி, எம்.வஸீர் ஆகியோர் வீச்சான கவிதைகளால் வகவ மேடையை சுவையாக்கினர்.


Read More
avathani Media Network

காத்தான்குடி பிரதேசத்திற்கு புதிய அரச கால்நடை வைத்திய அதிகாரி நியமனம்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அண்மையில் புதிய கால்நடை வைத்திய அதிகாரியாக டாக்டர் திருமதி.லிங்கேஸ்வரன் டுஜித்திரா நியமிக்கப்பட்டு கடமையாற்றி வருகின்றார்.

இலங்கை கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளரின் கீழ் இக் காரியாலயம் இயங்கி வருகின்றது.

பொது மக்கள் உரிய நேரத்தில் பொருத்தமான கால்நடை வைத்திய சேவையை பெற்றுக்கொள்ளுமாறு காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.லிங்கேஸ்வரன் டுஜித்திரா தெரிவித்துள்ளார்.

மேற்படி புதிய கால்நடை வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் திருமதி.லிங்கேஸ்வரன் டுஜித்திரா கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் பீ.வீ.எஸ்.சீ. பட்டதாரியான இவர் காத்தான்குடி ஊர் வீதி புணருத்தான பணிக்கான வீதி அபிவிருத்தி அதிகார சபையின் களப் பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரனின் மனைவியும்,மட்டக்களப்பு புகையிரத நிலைய சிரேஷ்ட புகையிரத நிலைய அதிபர் ஏ.வசந்த குமார் தம்பதியரின் புதல்வியுமாவார்.



Read More
avathani Media Network

காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலத்தினால் இலவசமாக கோழிக் குஞ்சுகள் வழங்கி வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலத்தினால் நடுத்தர அளவிளான கோழிப் பண்னையாளர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலவசமாக கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு கடந்த 07 வெள்ளிக்கிழமை பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலத்தில் இடம்பெற்றது.

இதன் போது காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.லிங்கேஸ்வரன் டுஜித்திராவினால் தெரிவு செய்யப்பட்ட பண்னையாளர்களுக்கு இலவசமாக கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு காத்தான்குடி பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து பண்னையாளர்களுக்கு மொத்தமாக 100 நூறு கோழிக் குஞ்சுகள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் ,கோழி வளர்ப்பு பற்றிய ஆலோசனையும் வழங்கப்பட்டது.






Read More
avathani Media Network

தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் 3 இலட்­சத்து 40 ஆயிரம் மாண­வர்கள்

இம்­முறை நடை­பெ­ற­வுள்ள தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு நாட­ளா­விய ரீதியில் 3 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 926 மாண­வர்கள் தோற்­ற­வுள்­ளனர்.
பாட­சா­லை­க­ளுக்கு மாண­வர்­களைத் தெரிவு செய்­வ­தற்கும் புல­மைப்­ப­ரிசில் வழங்­கு­வ­தற்­கு­மாக தரம் 5 மாண­வர்­க­ளுக்­காக நடத்­தப்­படும் பரீட்சை எதிர்­வரும் 23 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.
இப்­ப­ரீட்சை 2,907 பரீட்சை நிலை­யங்­களில் நடை­பெறும். பரீட்­சைக்கு தோற்றும் மாண­வர்­களில் 02 இலட்­சத்து 54 ஆயி­ரத்து 373 மாண­வர்கள் சிங்­கள மொழி மூலமும் 86 ஆயி­ரத்து 553 மாண­வர்கள் தமிழ் மொழி மூலமும் பரீட்­சைக்கு தோற்­ற­வுள்­ளனர்.
Read More
avathani Media Network

கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஒருதொகை மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் ஒருதொகை மருந்து மாத்திரைகளை கொண்டுவந்த நபரை கட்டுநாயக்க விமானநிலை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 13 இலட்சத்து 34 ஆயிரம் ரூபா பெறுமதியான மருந்து மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்தில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More
avathani Media Network

துரிதமாக வேலைகள் நடை பெற்றுவரும் காத்தான்குடி ஊர்வீதியின் அபிவிருத்தி

(அபூநிதா)

பல வருடங்களாக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த காத்தான்குடி ஊர்வீதியின் அபிவிருத்தி வேலைகள்  தற்போது மிகவும் துரிதமாக நடைபெற்று வருகின்றது.

மிகவும் நெருக்கமாக போக்குவரத்திற்கு கஸ்டமாக காணப்பட்ட இவ்வீதி அகலமாக்கப்பட்ட நிலையில் வடிகாண்களும் சேர்ந்ததாக தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

பழைய கல்முனை வீதி என்று அழைக்கப்படும் தற்போதைய ஊர்வீதி பல வருடங்களுக்கு முன்னால் காத்தான்குடியின் பிரதான வீதியாகவும் இருந்து வந்திருக்கிறது. 

இந்த வீதியின் ஊடாக ஆரையம்பதி, மன்முனை, மற்றும் கொக்கட்டிச்சோலை போன்ற இடங்களுக்கு பஸ்சேவை இடம் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டு வரும் இந்த வீதியின் ஊடாக இனிவருங்காலங்களில் மக்கள் சிரமமின்றி பயணம் செய்யக்கூடியதாக இருக்கும் 








  

Read More