Featured Home (TOP)

Recent Comments

Monday, December 14, 2015

avathani Media Network

வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதில்லை! தனியார் பஸ் உரிமையாளர்கள்


இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நாளைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது. 
நாளை 15ம் திகதி அரச, அரை அரசாங்க (semi-government) மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. 

2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று முன்தினம் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தொழிற்சங்கத் தலைவர்கள் இதனைக் கூறினர். 

இந்தநிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நாளைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளது. 

Read More
avathani Media Network

10000 ரூபா அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும்: பிரதமர் அறிவிப்பு

தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பணவு எதிர்வரும் ஜனவரி முதல் மூன்று கட்டங்களாக அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என பிரமர் ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையில் தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தில் சேர்த்து கொள்ளப்படும்.
மேலும் அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ஒருபோதும் இரத்து செய்யப்பட மாட்டாது
இதேவேளை தனியார் ஊழியர்களுக்கு 2500  ரூபா சம்பள உயர்வு எதிர்வரும் மே மாதத்திற்கிடையில் வழங்கப்படும்  எனவும் குறிப்பிட்டார்.
Read More
avathani Media Network

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு விடுமுறை தடை : அதிரடி உத்தரவு

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாளை எவ்வித காரணமும் கொண்டு விடு முறை எடுக்க முடியாது என இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ரமால் சிறிவர்தன  தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்ளை மேற்கொள்ளவிருந்த நிலையிலேயே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
நாளை நடைபெறவிருக்கும் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கும், அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் தங்களால் இயலுமானளவு போக்குவரத்துச் சேவையை வழங்க தீர்மானித்துள்ளதாகவும்  ரமால் சிறிவர்தன   குறிப்பிட்டார்.  
Read More
avathani Media Network

சவுதியிலிருந்து 44 பேர் திருப்பி அனுப்பிவைப்பு

தொழில் நிமித்தம் இலங்கையில் இருந்து சவுதி அரேபியா மற்றும் கட்டார் நாடுகளுக்குச் சென்றவர்கள் இன்று காலை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் அந்நாடுகளில் பல துன்பங்களை அனுபவித்து வந்ததை தொடர்ந்தே அவர்கள் அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை விமானச் சேவைக்குசொந்தமான UL-266 என்ற விமானத்தில் சவுதி அரேபியாவில் இருந்து 44 பேரும், குவைட் விமானச்சேவைக்கு சொந்தமான ku-361 என்ற விமானத்தில் கட்டாருக்கு சென்ற சிலரும் வந்தடைந்தனர்.
அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, பொத்துவில் மற்றும் பொலனறுவை இடங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
நாட்டை வந்தடைந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் திணைக்களம் பணம் கொடுத்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளது.
Read More
avathani Media Network

கருக்கலைப்புக்கு உடந்தை: மருத்துவருடன் பொலிசாரும் கைது

சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவம் ஒன்று தொடர்பாக மருத்துவருக்கு உடந்தையாக செயற்பட்ட இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பிரதேசத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
தெற்கு அதிவேகப் பாதையின் பாணந்துறையை அண்மித்து அமைந்திருக்கும் கெலனிகம பொலிஸ் சோதனைச் சாவடியில் பணியாற்றும் சப்இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் தமக்கு பழக்கமான திருமணமாகாத 24 வயது யுவதியொருவர் கர்ப்பமுற்றிருந்த நிலையில், அறிமுகமான மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்று கருக்கலைப்பு உடந்தையாக செயற்பட்டுள்ளனர்.
இதுகுறித்த தகவல் வெளியான நிலையில் இரண்டு பொலிசாரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
avathani Media Network

எனக்கு கொலை அச்சுறுத்தல்: முஜிபுர்

பிரபல றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலைத் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள மூவர், மரண அச்சுறுத்தல் விடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்தே அவர், மேற்கண்டவாறு கோரிநின்றார்.
 தனக்கு இடையூறு விளைவித்தமை மட்டுமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரால் தனக்கு மரண அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. இதுதொடர்பில் விசாரணைக்க வேண்டும்.
 பிரபல றகர் வீரர் வசீம் தாஜுதீன் தொடர்பில் உரையாற்றிக்கொண்டிருந்த போது உரைக்கு இடையூறு விளைவித்தமை மட்டுமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிஸாந்த மற்றும் இந்திக அனுருத்த ஆகியோர், தாஜுதீன் தொடர்பில் பேசவேண்டாம் என்று மரண அச்சுறுத்தல் விடுத்தனர் என்றும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
 இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை குழுவில் கலந்துரையாடப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.
Read More
avathani Media Network

தேர்தல் சட்டத்தை பசில் மீறியதாக குற்றச்சாட்டு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதியின் இளைய சகோதரருமான பசில் ராஜபக்‌ஷ ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறியதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
திவிநெகும நிதியில் 29 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களம் அவர் மீது கடந்த வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் வாக்காளர்கள் மத்தியில் இந்தப் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷவுடன், திவிநெகும நிதியத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஆர். கே. ரணவக்கவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
கையூட்டல்களை வழங்கி வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சித்ததாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. திவிநெகும நிதியம் தொடர்பாக பசில் ராஜபக்ஷ கடந்த ஏப்ரல் மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More