மருதானை, பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 09 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு தனியார் பஸ்கள் இன்று காலை ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிறு காயங்களுக்கு உள்ளான 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மருதானை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
