கட்டார் நாட்டின் புதிய தொழில் சட்டம் கடந்த 28ஆம் திகதி அந்நாட்டின் அதிபர், ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானியினால் வெளியிடப்பட்டுள்ளது.
1.கபாலத் முறை நீக்கப்பட்டு தொழில் வழங்குநர், தொழில் பெறுநர் என்ற புதிய முறைமை கொண்டு வரப்பட்டுள்ளது.
2. குறூஜ் எனும் வெளிநாட்டு தொழில் பெறுநர்கள் நாட்டை விட்டு வெளியே செல்ல வழங்கப்பட வேண்டிய பயன அனுமதி ரத்து செய்யப்படுள்ளது.
இதற்கென்று ஒரு தனியான நிர்வாகப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டு அதனூடாக பயண அனுமதிகளை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.
அங்கு தக்க காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டால் அதை முறையிடுவதற்கு என்று வேறு குழு அமைக்கப்பட்டுள்ளது.
3. ஆறு மாத காலத்திற்கு மேல் கட்டார் நாட்டிற்கு வேளியே தங்கியிருந்து மீண்டும் கட்டார் வர விரும்புபவர்கள் விஷேட அனுமதி பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்த அடிப்படையில் குடும்பதிற்கான விஸா பெறும் முறையிலும் மாற்றங்கள் சில ஏற்பட்டுள்ளன.
5.தொழில் ஒப்பந்ததின் குறைந்தளவு காலம் இரண்டு வருடங்களாகும்.
அது முடிந்ததும் யாருடைய அனுமதியும் அவசியம் இன்றி இன்னொரு தொழில் வழங்குநரிடம் வேலை தேடிக் கொள்ளலாம்.
ஒப்பந்தம் ஐந்து வருட காலத்திற்கு அதிகமாக இருந்தால் ஐந்து வருடம் முடிந்ததும் வேறு இடங்களில் வேலை தேடிக் கொள்ளலாம்.
6. ஏதாவது தொழிலில் செய்த குழறுபடிகளுக்காக வேலை நீக்கம் செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர், குறைந்தது நான்கு வருடங்களுக்கு கட்டார் நாட்டிற்குள் மீண்டும் பிரவேசிக்க முடியாது.
JVPNEWS
