(ஏ.எல்.டீன்பைரூஸ்)
காத்தான்குடியினை தளமாகக் கொண்டு இயங்கும் தேசிய சுன்னத்துவல் ஜமாஅத் சபையின் மாபெரும் மீழாதுன் நபீ விழா (01.01.2016 வெள்ளி) இன்று பி.ப.04.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம் பெற இருக்கின்ற நிலையில் விழாவினை உடன் நிறுத்துமாறு கோரி இன்று ஜூம்ஆ தொழுகையின் பின் கண்டன ஆர்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம் பெறும் மீழாதுன் நபீ விழா முற்றிலும் இஸ்லாமிய அகீதாவுக்கு விரோதமானது என்பதுடன் மேற்படி விழாவினை ஊரின் நடுவில் நடாத்தக் கூடாது என்றும் அவர்களுக்கு என்று உள்ள இடத்தில் மேற்படி விழாவினை அவர்கள் நடாத்த வேண்டும்,
விழாவினை நிற்பாட்டக் கோரி; பொது மக்கள் சார்பில் காத்தான்குடி நகர சபை செயலாளரிடம் காத்தான்குடி தாருல் அதர் அத்தவியா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலவி அஸ்பர் பதுர்தீன் என்பவரினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
மேற்படி விழாவிற்கான மண்டப அனுமதி உரிய முறையில் கோரப்பட்டு உரிய முறையில் வழங்கப்பட்டுள்ளதுடன் பொது மக்கள் ஆர்பாட்டம் செய்கிறார்கள் என்பதற்காக வழங்கப்பட்ட அனுமதியை உடன் இரத்துச் செய்வது என்பது சாத்தியமில்லா விடயம் என்பதுடன் அதில் சட்டப்பிரச்சினைகள் உள்ளதாகவும் நகர சபை செயலாளர் தெரிவித்தார்.
எம்மால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி மாபெரும் மீழாதுன் நபீ விழாவினை தடுப்பதற்கு முற்படுபவர்களைப் பார்த்து நாம் கவலை அடைகின்றோம். அவர்களால் ஊரின் நடுவில் மாநாடு நடாத்த முடியும் என்றால் ஏன் எங்களால் இது போன்ற விழாக்களை நடாத்த முடியாது என கோரினர்.
இது நல்லாட்சி எனவே ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் எல்லா சுதந்திரம் உண்டு என்று கருத்து தெரிவித்ததுடன் எமது விழாவிற்கு வந்து முன் வரிசையில் இருந்து ஞான விளக்கத்தை கேட்க வருமாறு நாம் அழைப்பு விடுப்பதாக விழா ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதே வேளை காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தும் ஷிர்க் ஒழுpப்பு மாநாடு இன்று
காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் இடம் பெற உள்ளதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.