( ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி தேசிய சுன்னத் வல் ஜமா அத் இன் ஏற்பாட்டில் காத்தான்குடில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள மாபெரும் மீலாதுன் நபி விழாவிற்கு எதிராக இன்று ஜும் ஆத் தொழுகை யினை தொடர்ந்து பல்வேறு அமைப்புக்களின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று காத்தான்குடி கலாச்சார மண்டம் முன்றலில் இடம் பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் "மீலாத் விழா என்பது சீயாக்கள் உருவாக்கி வழிகேடு"," மீலாத் எனும் பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான அநாச்சாரம்" என எழுதப்பட்ட வாசகங்களை ஏந்திருந்தனர்..
இந் நிகழ்வினை இரத்து செய்யுமாறு கோரி நகரசபை செயலாளருக்கு மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது..
இந் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பிரிவினரின் இஸ்லாம் சார்ந்த மாற்றுக்கருத்தினால் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவினால் " இஸ்லாத்தை விட்டு வெளியேரியவர்கள்"என பத்வா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்..







