மாலபே தனியார் வைத்திய கல்லூரியை மூடுமாறு அரசாங்கத்துக்கு வலியுறுத்தி, பேராதனை பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்கள் இன்று போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை முதல் கலஹா சந்தியில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் கல்வியை தனியார் மயப்படுத்தும் சதி, மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி மூலம் இடம்பெற்று வருவதாக, இதன்போது கருத்து வௌியிட்ட பேராதனை பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர் சங்கத் தலைவர் சிந்தக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
