(எம்.எல். அப்துல் அஸீஸ்)
திறக்கப்படவிருக்கும் காத்தான்குடி நூதன சாலையில் வைக்கப்படப் போவதாகச் சொல்லும் சிலைகள் தொடர்பாக கடந்த பல வாரங்களாக உடன்பாடான மற்றும் முரண்பாடான கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, இந்த சிலை விவகாரம் முகநூலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த்தி இருக்கிறது. ஆளையாள் மாறிமாறி ஏசிக் கொள்வதும் பத்வாக்களை வழங்கிக் கொள்வதும் மாத்திரமல்லாமல் ஒருவர் மற்றவருடைய பரம்பரையை குறை காணுகின்ற அளவிற்கு இந்த சிலை விவகாரம் சென்றிருக்கிறது. சம்மேளனம், உலமாசபை இவற்றையெல்லாம் தாண்டி இப்போது இந்தப் பிரச்சினை பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளதாகவும் அறிய முடிகிறது.