Featured Home (TOP)

Recent Comments

Tuesday, April 14, 2015

Unknown

தற்போதய நவீன தொழிநுட்பத்தினை பயனுள்ளதாக மாற்றவேண்டியது காலத்தின் தேவையாகும் - கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் .

-எம்.எச்.எம்.அன்வர்-

தற்போதய நவீன தொழிநுட்பத்தினை பிழையான வகையில் இல்லாமல் பயனுள்ளதாக மாற்றவேண்டியது காலத்தின் தேவையாகும் இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் தெரிவித்தார்

நேற்று 2014 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான விருதும் வழங்கும் நிகழ்வு EDF மற்றும் வாமி நிறுவனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புள்ளா மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் பொலந்நறுவை மாவட்டங்களைச் சேர்ந்த 741 மாணவர்கள் இதன்போது சின்னங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில் "தொழிநுட்பத்துறை இன்று பாரிய வளர்ச்சி கண்டுள்ள நிலையில் அதில் தீமையும் உள்ளது நன்மையும் உள்ளது மாணவர்கள் பயனுள்ளதை மாத்திரமே தெரிவு செய்து கற்றுக்கொள்ள வேண்டும் பெற்றோர்கள் அதை கண்காணிக்க வேண்டும்


எனது தந்தை என்னுடன் கல்விகற்றல் குர்ஆன்ஓதல் விடயத்தில் மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்வார் நாளாந்தம் காலையிலும் மாலையிலும் குர்ஆனை மனனம் செய்து தந்தையிடம் ஓதிக்காட்ட வேண்டும் அதேபோல் ஐவேளையும் ஜமாஅத்தாக தொழாவிட்டால் தண்டனை கிடைக்கும் இவ்வாறுதான் நான் பழக்கப்பட்டேன் " இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார் 

மேற்படி நிகழ்வுக்கு மாவட்ட அரச அதிபர் பி எஸ் எம்.சார்ள்ஸ் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யு எல் எம் என் முபீன் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிப்பணிப்பாளர் இஸ்மாலெவ்வை ஆகியோர் கலந்துகொண்டதுடன் பாடசாலை ரீதியாக 10 க்கு மேற்பட்ட மாணவர்களை சித்திபெறச் செய்த பாடசாலைகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது







Read More
Unknown

மட்டு -மாவட்ட இளைஞர் கழக சம்மேளன நிருவாகத் தெரிவுக் கூட்டத்தில் - ஓட்டமாவடி பிரதேச சம்மேளன நிருவாகிகள் எவரும் பங்கேற்கவில்லை.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் புனரமைப்புக் கூட்டம் நேற்று முன்தினம் (11) சனிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பணிமனையில் இடம்பெற்றது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி இம் மாவட்ட சம்மேளனம் அமையப்பெறும். கிராம மட்டங்களில் அமைக்கப்படும் இளைஞர் கழகங்களில் இருந்து பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச சம்மேளனம் செயற்திறன் மிக்க இளைஞர்களை கொண்டு நிறுவப்பட்டு மாவட்ட சம்மேளன நிருவாக தெரிவிற்காக தலைவர், உபதலைவர், உபசெயலாளர்,பொருளாளர்,அமைப்பாளர்,உப அமைப்பாளர் என்ற அடிப்படையில் பிரதான ஆறு அங்கத்தவர்கள் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
Read More

Sunday, April 12, 2015

Unknown

மஹிந்தவின் 2ஆவது அரசியல் பிரவேசம் மே 01 இல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இரண்டாவது அரசியல் பிரவேசம் சர்வதேச தொழிலாளர் தினமான மே 01ம் திகதி இடம்பெறுமென அரசியல் வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளதாக சிங்களப் பத்திரிகை  ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக் ஷவை  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கும் கட்சிகளும் அமைப்புக்களும் மே 01ஆம் திகதி மே தினக் கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்துகின்றனர். இவற்றில் மஹிந்த ராஜபக் ஷ கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாசு விமல் கம்மன்பில உட்பட இந்த அரசியல் முன்னணி தனது மே தினக் கூட்டத்தை கிருலப்பனை விளையாட்டுத்திடலில் நடாத்தவுள்ளது. 

Source - Virakesarry
Read More
Unknown

உணவகங்களில் திடீர் சோதனை: 15 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

நீர்கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 15 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக  வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிரேஷ்ட பொது சுகாதாரப் பரிசோதகர் சோமசிறி தெரிவித்தார்.

ஏப்ரல் 06ஆம் திகதி முதல் மே மாதம் 08ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உணவு மாதம் கடைப்பிடிக்கப்படுவதையிட்டு இந்த திடீர் சோதனை நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரப் பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை 80 உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 15 நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.
Read More