
பப்புவா நியூகினியாவில் பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை : இலங்கைக்கு ஆபத்தில்லை
பப்புவா நியூகினியாவில் 7.4 ரிச்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இலங்கைக்கு எவ்வித அபத்துமில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து 300 கிலோ மீற்றர் தூரத்தில் சுனாமி அலைகள் தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பப்புவா நியூகினியாவின் ராபவுல் டவுனிற்கு தெற்கே, சுமார் 154 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கடியில் 50 கிலோ மீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பப்புவா நியூக்கினியாவை சுற்றிலும் கடல் அலைகள் 0.3 மீற்றர் முதல் 1 மீற்றர் உயரத்திற்கு எழும்ப வாய்ப்புள்ளதாகவும் 300 கிலோ மீற்றருக்குள் சுனாமி ஏற்படும் என்றும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்ட போதிலும் இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்தான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.



