Featured Home (TOP)

Recent Comments

Friday, December 11, 2015

avathani Media Network

யானையுடன் மோதிய ரயில் : ரயிலுக்கு சேதம்

கொழும்பிலிருந்து  யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் மீது காட்டு யானையொன்று மோதியதில் குறித்த புகையிரதத்தின் முன்பகுதி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரரவு 7மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து நேற்று காலை 11.45மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கி குறித்த புகையிரதம சென்ற போது மாலை 7 மணிக்கு கனகராயன்குளம் பகுதியில் ரயில் பாதையில் தரித்துநின்ற காட்டு யானை மீது மோதியுள்ளது.

இதனால், குறித்த ரயிலின் முன்பகுதி சேதமடைந்து பழுதடைந்துள்ளதாகவும் இதனால் அன்றைய தினம் ரயில் போக்குவரத்து சேவை மாங்குளம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ரயிலில் பயணித்த பயணிகள் பல சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தனர். அத்துடன், போக்குவரத்தும் தாமதமாகியது. குறித்த புகையிரதம் பழுதடைந்துள்ளமையை அடுத்து புகையிரத திணைக்கள அதிகாரிகளின் செயற்ப்பாட்டால் மாங்குளத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை செல்லும் பயணிகள் விசேட பஸ் போக்குவரத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேவேளை, பழுதடைந்துள்ள குறித்த ரயில் திருத்தப் பணிகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு-யாழ்ப்பாணம் சேவைக்கு மற்றுமொரு ரயில் ஈடுபடுத்தப்படும் என அநுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
Read More
avathani Media Network

பாடசாலை சீருடைத் துணிகள் கையிருப்பில் இல்லையாம்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணி விநியோகம் செய்வதற்கு யாழ்ப்பாண நகரத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள பல கடைகளில் சீருடை துணி இருப்பில் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்து, சீருடைத்து துணிக்குப் பதிலாக வவுச்சர் வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள வவுச்சரை, தங்கள் பிரதேசத்திள் சீருடை துணி விநியோகம் செய்ய அரசாங்கத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ள கடைகளில் கொடுத்து சீருடை துணியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நடைமுறையின் கீழ், யாழ்ப்பாண மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வவுச்சரைக் எடுத்துக்கொண்டு கடைகளுக்குச் சென்றபோது, சீருடை துணி முடிவடைந்து விட்டதாகவும், துணி வரவேண்டும் எனவும் அங்கு கூறியுள்ளனர்.

இதன்காரணமாக, கிராமப்புற மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வடமராட்சியின் மருதங்கேணி மற்றும் நெடுங்கேணி பகுதிகளில் சீருடை விநியோகம் செய்வதற்கான கடைகள் அடையாளப்படுத்தப்படவில்லை.

இதனால், இந்த மாணவர்கள் நீண்ட தூரம் பயணித்து பருத்தித்துறை நகரத்துக்கு அல்லது யாழ்ப்பாணத்துக்கு சென்று துணிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.


இதேவேளை, யாழ்ப்பாணம் தீவகப் பகுதியிலும் இவ்வாறான ஒரு நிலைமையுள்ளது. தீவகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் மாத்திரம் சீருடை துணி விநியோகம் செய்யும் கடைகள் உள்ளமையால், அங்குள்ள மாணவர்கள் தங்களுக்கான சீருடை துணியை பெற்றுக்கொள்ள முடியாமல், யாழ்ப்பாண நகரத்துக்கு வருகை தந்து அங்கும் இல்லையென ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். 
Read More
avathani Media Network

தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்படுவது அரசியல் கட்சிகளின் வெற்றியல்ல – ஜனாதிபதி

எல்லை நிர்ணயம் தொடர்பில் இன்று இடம்பெற்ற சர்வ கட்சி சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டு பின்வருமாறு தெரிவித்தார்.

விருப்பு வாக்கு தேர்தல் முறைமையை மாற்றுவதன் ஊடாக புதிய தேர்தல் முறைமைக்கு இணக்கப்பாடுடன் செயற்பட வேண்டும். இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது, எல்லை நிர்ணய குழு தனது பணியை சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 2000ற்கும் அதிகமான மேன்முறையீடுகள் இது வரையில் கிடைக்கப்பெற்றுள்ளன. 

ஆகவே, ஏற்கனவே இருந்த குழு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இந்த குழு மீதும் முன்வைக்கப்படக்கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும். குறுகிய காலத்தைப் பெற்றுக்கொண்டு பணியை சரிவர செய்யாவிடில் அனைவரது விமர்சனங்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்படும். தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்படுவது அரசியல் கட்சிகளின் வெற்றியல்ல. தேர்தல் முடிவுகளின்போது மக்களின் ஆணையே வெளிப்பட வேண்டும்
Read More
avathani Media Network

தாஜுதீன் விவகாரம்: அவையில் பதற்றம்

அவையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையையடுத்து அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பியான முஜிபூர் ரஹ்மான், உரையாற்றிக்கொண்டிருந்த போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சிலர் தாக்க முற்பட்டனர். இதனையடுத்தே அவையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை விவகாரத்தை மையப்படுத்தி அவர் உரையாற்றியதையடுத்தே அவையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. 


நாடாளுமன்றத்தில் எதிரணியின் பக்க ஆசனத்தில் இருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பியான முஜிபூர் ரஹ்மான்இ உரையாற்றிக்கொண்டிருந்த போது, கூட்டு எதிரணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் இதனையடுத்தே அவையில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது
Read More