அவதானி
புதிய காத்தான்குடி தெற்கு அஸ்ஸஹ்றா முன் பள்ளியின் 2014 ஆம் ஆண்டுக்கான பாலர் கலை விழாவும் ருமுபு இல் இருந்து ஆரம்ப பாடசாலைக்குச் செல்லும் பாலர்களுக்கான பிரியா விடை நிகழ்வும் 2015 ஆம் ஆண்டு அஸ்ஸஹ்றா முன் பள்ளியில் இணைந்து கொள்ளும் பாலர்களுக்கான வரவேற்பு வைபவமும் அண்மையில் காத்தான்குடி மத்திய கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் விர்சையாக நடை பெற்றது
இந்நிகழ்வு அஸ்ஸஹ்றா முன் பள்ளியின் தலைவர் எம் எல் ஏ அஸீஸ் தலைமையில் நிகழ்ந்தது
நிகழ்வின் பிரதம அதிதியாக டீஊயுளு நிறுவனத்தின் தலைவரும், நல்லாட்சிக்கான தேசிய முனனணியின் தேசியத் தலைவரும் பொறியியலாளருமான அல்ஹாஜ் அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் ஏனைய அதிதிகளாக சமூக மதிப்பீட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் ஜனாப் இலமி அஹமட் லெவ்வை, சமூக மேம் பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஜனாப் எம் ஐ எம் ஹாரிஸ் மத்திய கல்லூரியின் ஆசிரியர் UAS அஜ்மீர் கான் புதிய காத்தான்குடி தெற்கு திவி நெகும உத்தியோகத்தர் MIM இர்பான் ,கவிஞர் மதியன்பன் MSA மஜீத் கெபிகிட்ஸ் முன் பள்ளியின் பொறுப்பாசிரியர் ஜனாபா பரீதா அஸீஸ் மீரா பாலிகா மகா வித்தியாலய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாபா முப்லிஹா யாகூப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் ஏற்பாட்டளாராக SA கையூம் (தீன் நானா) ASM றிபாய் அஸ்மியா முஸ்தகீம் ( பொறுப்பாசிரியர் அஸ்ஸஹ்றா முன் பள்ளி AB முப்லிஹா சாமிலா சர்ஜூன் ஆகியோர் பணியாற்றினர்.
இந்நிகழ்வின் நிறைவாக பிரதம அதிதியினால் பாலர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.