கிழக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக ஆதரவு வழங்கிய ஆறு உறுப்பினர்கள் தமது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக மாகாண சபையிலிருக்கின்ற உறுப்பினர்களில் 20 பேர் சத்தியக்கடதாசியின் ஊடாக தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நஷீர் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், ஆறு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னிச்சையாக செயற்படுவதாக கூறி, ஏனைய இரண்டு கட்சிகளைச்சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவை இன்று திங்கட்கிழமை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
இது தொடர்பாக குறித்த ஆறு பேரும் இன்று ஊடகவியலாளர் சந்திபோன்ரை நடாத்தி தங்களுடைய தீர்மானத்தை அறிவித்தனர்.
வாபஸ் பெற்றுக்கொண்ட ஆறு உறுப்பினர்கள்:
01. விமலவீர திஸாநாயக்க ( ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு)
02. டப்ளியு.டி.எச் வீரசிங்க ( ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு)
03. ஜயந்த விஜேசேகர ( ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு)
04. டி.எம்.ஜயசேனவும்
05. எம்.எஸ் உதுமாலெப்பை
06. எம்.எல்.எம். ஆமீர் லெப்பை (தேசிய காங்கிரஸ்)
