ஐ.தே.க காத்தான்குடி கிளை ஏற்பாடு செய்த மே தின நிகழ்வு நேற்று (01.05.2015) ரிஸ்வி நகர் சனசமூக நிலையக் கட்டடத்தில் இடம்பெற்றது.
ஐ.தே.க.யின் காத்தான்குடி அமைப்பாளர் HMM.முஸ்தபா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஐ.தே.க.யின் காத்தான்குடி செயற்குழு உறுப்பினர்களான ALA.கையூம் ஆசிரியர், KM.அலியார், NFGG பிராந்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.