Featured Home (TOP)

Recent Comments

Monday, August 24, 2015

avathani Media Network

SLMC தலைவர் ஹகீமுக்கு... சகோதரர் முபீனின் கடிதம்

அஸ்ஸலாமு அலைக்கும் ,
தலைவர், 
மு காங்கிரஸ்.

நடந்து முடிந்த பா ம தேர்தலின் பின்னனியி்ல் இவைகளை  உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதுகிறேன்.

அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரை , ஐ தே க சிங்கள மக்களின் ஆதரவுடனும் , குறிப்பாக தெஹியத்தகண்டி , பதியதளாவ பிரதேச  சிங்கள மக்களுடனான உங்களுடைய தனிப்பட்ட செல்வாக்கின் ஊடாகவும் , காசு பணத்தின் ஊடாகவும் , அஷ்ரபின் எழுச்சிப்பாட்டுக்கள் ஊடாகவும் மிக முக்கியமாக மஹிந்த எதிர் வாதத்தக்கூடாகவும் , உங்களது தயா கமகே மீதான அதிருப்தியின் கூட்டு மொ்தத வடிவமே இந்த வெற்றியாகும் .


மட்டக்களப்பில் ,
எந்த ஒரு பிரதேசமும் ஒரு பிரதிநிதுத்துவத்தை வழங்கக்கூடிய வாக்குப்பலம் இல்லாத சூழலில் ,
மூன்று முஸ்லிம் பிரதேசங்களிளும் உங்களது வியூக திறமையின் அடிப்படையில் நான்கு புதியவர்களை ஏதோ ஓர் அடிப்படையி்ல் களமிறக்கி , கட்சிக்குரிய கட்சியின் பேரி்ல் ஆசணத்தை வென்றுள்ளீர்கள்.


இதி்ல் சிங்கள தமிழ் மக்களின் எந்த பங்களிப்பும் இன்றி போட்டியில் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொண்டோம் . இதற்கு பல காரணங்களை கூறினாலும் , மாவட்த்தில் கா குடியி்ல் கட்சியின் செல்வாக்கு என்ன என்பதை பல தேர்தல்களில் கண்கூடாக கண்டுள்ளீீர்கள் .
இருந்தும் எப்போதும் போன்றே யாரை வேட்பாளர்களாக களமிறக்கினாலும் கட்சிக்கு கனிசமான வாக்குகளை வளங்குகின்ற ஏறாவூர் , கல்குடா முஸ்லிம்கள் வலமை போன்று தங்களது பங்களிப்பை வளங்கினர் ,

குறிப்பாக ஏறாவூர் மக்கள் வழமையை விட மௌலானா என்பதால் சற்று கூடுதலாக பங்களித்தனர். திருமலை மாவட்டத்தி்ல் , கனிசமான வாக்குகளுடனும் , பிரதியமைச்சர் என்ற அந்தஸ்துடனும் களமிறக்கப்பட்ட எமது வேட்பாளர் , தோல்வி அடைந்ததற்கு அவரின் தகுதியீனத்தையே காட்டுவதுடன் , ந தே மு சார்பாக மூதூரை மையப்படு்த்தி போட்டியிட்ட வேட்பாளருடனான பரஷ்பர ஒத்துழைப்பின்மையும் மிக முக்கிய காரணமாகும் .


வன்னியில் ,
மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு வேட்பாளரை எமது கட்சி இனம்கண்டு களமிறக்காத தலமைத்துவ குறைபாடாகவே தோல்வி நோக்கப்படுகிறது.

கண்டியில் ,
தே தலமைத்துவத்தின் நம்பிக்கையும் , அனுபவமும் , தலமையின் சிங்கள தமி்ழ் மக்களுடனான நல்லுறவும் . சற்று பண பலமும் வெற்றிக்கு வழிகோளியது .

ஏனைய மாவட்டங்களில் ,
கட்சியின் மிக மிக முக்கிய பிரமுகர்கள் தங்களது மாவட்ட ஊர்களிலேயே நின்று தலைவரிடம் மதிப்பென் எடுத்தார்களே ஒழிய , கட்சிரீதியாக பலவீணமான மாவட்டங்கள் என அடையாலம் காணப்பட்ட இப்பிரதேசங்களில் வேலை செய்வதற்கு , கட்சியின் மூலம் அரசியல் அதிகாரம் பெற்றவர்கள், அரசியல் பதவிகள் பெற்ற கட்சி முக்கியஸ்தர்கள் ஈடுபடவில்லை என்பதன் விளைவே தோல்விக்கு காரணம்.


அடுத்து மட்டக்களப்பில்  ந தே முன்னனியும், கட்சியும்  என்ற கூட்டின்  மூலம் எவ்வாறு எமது மரியாதை காக்கப்பட்டது என்பதில் ந தே முன்னனியின் பங்களிப்பினை மறக்கவோ , மறுக்கவோ முடியாது என்பது உண்மை. ஏனெனில், இவர்களின் ஒழுங்கமைப்பு தேர்தல் பிரச்சாரம் , சொந்த அங்கத்தவர்களை தேர்தல் பிரச்சார வேலைகளில், வாக்களிப்பு , கணெக்கெடுப்பு நிலையங்களில் பயன்படுத்தியது, தங்களுக்கிடையில் நிதி வசதிகளை அங்கத்தவர்கள் , தொண்டர்கள் , அபிமானிகள் மூலம் ஏற்படுத்திக்கொண்டல் , ஊரில் உள்ள சகல தஃவா , தௌஹீத் அமைப்புக்களையும்  ஒர்முகப்படுத்தல் , பெருமளவான பெண்கள் , தாய்மார்களை தமது அமைப்பின் உறுப்பினர்களூடாக  தேர்தல் செயற்பாடுகளில் பங்கேற்பு செய்வித்ததன் ஊடாக  பெண்களின் வாக்களிப்பு வீதத்தினை உயர்த்தியது , வாக்காளர்களுக்கு மத்தியில் பெரும் நம்பிக்கையை வளர்த்தல் , நல்லாட்சியின்  தத்துவத்தை , ஆட்சி அமைப்பை, நம்பிக்கை தன்மையை , உண்மைத்தன்மையை மக்கள் மத்தியில் தெளிவை ஏற்படுத்தியமை , வேட்பாளர்களுக்கிடையில் நல்லதோர் சுமுக உறவினை பேணியது , இளைஞர் அணியை ஒருமுகப்படுத்தல் , கட்சியுடன் அதிருப்தியில் இருந்த பல சகோதரர்களை இனங்கண்டு அவர்களை அரவணைத்து பிரச்சாரங்களில் பயன்படுத்தியது   போன்ற பல பல காரணங்களை கூறலாம் .


இவ்வாரான பல காரணங்களினால் கா குடியில் பல ஆண்டுகளுக்கு பின் கட்சிக்கு சுமார் 15000 வாக்குகள் கிடைக்கப்பெற்றதுடன் , கட்சியின் எதிரி, மார்க்க விரோதி, பொய்யன், ஊழல் பேர்வழி, காடயர்களின்  தந்தை மண்ணின் மஹிந்த ஹிஸ்புல்லாஹ் தோற்கடிக்கப்பட்டான் ,
அல்ஹம்துலில்லாஹ்.

மட்டில் ,
கா குடியில் 15000
ஏறாவூர்       13500
கல்குடா         9500
             
என 38000ம் மொத்த வாக்கும் , அதில் 15000 ம் கா குடி மக்கள் அளித்தும் கா குடிக்கு பிரதிநிதித்துவம் அதாவது ந தே முன்னனிக்கு இல்லாமல் போனதற்கு  பல காரணங்களை கூறலாம் ,


இரு வேட்பாளர்கள் கா குடியில் ரேஸ் ஓடியது ,
இரு மனாப்பையையும் ஊர் வேட்பார்களுக்கு போட்டு மீதி மனாப்பையை மற்ற ஊர் வேட்பாளர்களுக்கு வழங்குமாறு கோரியது ,
கட்சி தலைவரினதோ . ஏனைய முக்கியஸ்தர்களினதோ விஷடே முக்கியத்துவம் பிரச்சாரங்களில் வழங்கப்படாமை,
கட்சியினால் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டது போல் நிதிப்பங்களிப்பின்மை,
ஊர்வாதம் பேசப்படாமை,
முதலமைச்சரின் ஒருபக்கச்சார்பு ஹலெி டூர்
பிரச்சாரம் ,

நூறுவீதம் சட்டத்துக்கு மதிப்பளித்து ஈடுபட்டல் ,
வழமையான தேர்தல் பம்மாத்துக்கள் இன்மை,
ஒப்பந்தங்கள் மூலம் மா்ர்க்க  வரையருக்குள் கட்டுப்பட்டல்,

கட்சி காரர்கள் இல்லை என்ற விஷமப் பிரச்சாரம் ,
இறுதிக்  கூட்டத்தில் மௌலானாவுக்கு முக்கியத்துவம் ,

இன்னும் இது போன்ற பல காரணிகளால் இவர்களின் தெரிவு தடைப்பட்டாலும் , கட்சிக்குறிய பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்த இடத்தில்தான்  தேசிய பட்டியல் விவகாரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ,
அஷரப் அவர்களுடைய காலம் தொட்டு  இறுதி வரை வழங்கப்பட்ட தே பட்டியல் உறுப்பினர்களில் உங்களைத்தவிர வேறு எந்த நபர்களாளேயோ சமூகத்துக்கோ , நாட்டுக்கோ ஆகக் குறைந்தது அவர்களின் தனி்ப்பட்ட வாழ்க்கையிலோ சாதி்த்தது பூச்சியமே . உங்களை , சம்பிகவை, ரவியை, சுமந்திரனை, ஹர்ஷாவை, எரான் போன்றவர்களை தே பட்டியல் மூலம்  கட்சிகள் அறிமுகப்படுத்தி இருக்கா விட்டால் , இந்நாட்டில் எங்கோ ஓர் மூலையில் இருந்திருப்பார்கள், தேவையில்லாமல் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை  நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஒரே தொகுதியில் 2_3 கிளோ மீட்டர் தூரத்தில் அட்டாலச்சேனைக்கு தே பட்டியல் என்றும் , சகல வசதிகளும் செய்து கொடுத்தது அவரின் பலயீனத்தால் தோற்றுப்போன ஏற்கனவே தே பட்டியலை அனுபவித்த , மேலும் இரு எம்பிக்களை கொண்டுள்ள கிண்ணியாவுக்கு வழங்குதைப்பற்றியும், ஒரு தரமான நபர் இன்றி வண்ணிக்கு தே பட்டியல் வழங்குவது பற்றியும் , எதிர்காலத்தி்ல் வெளி மாவட்டங்களில் போட்டியுடுவதா என்ற தீர்மானம் இல்லாமல் தே பட்டியல் வழங்குவது பற்றி, சிந்தித்து சிந்தித்து காலத்தை நேரத்தை வீணடிக்காமல் , ஆட்களுக்கிடையில் சலிப்புத்தன்மையை ஏற்படுத்தாமல் , வருகின்ற பாராளுமன்றத்தின் முக்கியத்துவம் கருதியும் , சமூகத்தின் நலன் கருதியும், கட்சியின் இருப்பு , பாதுகாப்பு, வளர்ச்சி கருதியும், மற்ற குழுவுடன் செய்து கொண்ட தேர்தல் உடன்படிக்கையை மதித்து , எதிர்காலத்தில் அவர்களை கட்சியில் உள்வாங்கவும், எதிர்வரும் உள்ளூர் , மாகாண தேர்தல்களை மிக்க பலத்துடன் எதிர்கொள்ள, 
சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் , இஞ்சினியர் அப்துர்ரஹ்மான் ஆகியோர்களை, மற்ற சமூகத்தவர்கள் அறிமுகப்படுத்தியது போன்று இவர்களையும்  எம் சமூகத்துக்கு  தேசி பட்டியல் மூலம் அறிமுகப்படுத்தி , அமானிதத்துக்கு நல்லதோர் தீர்வினை உங்கள் மூலம் எதிர்பார்த்தவனாக ,


என்றும் உங்கள்,
முபீன்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :