கொத்மலை, வெதமுல்லை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக, அதில் சிக்குண்ட 2 பேர் மரணித்துள்ளனர்; மேலும் நால்வரைக் காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இம் மண்சரிவின் காரணமாக 4 வீடுகள் சேதமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் தற்போது பெய்து வரும் மழை காரணமாக மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
