Featured Home (TOP)

Recent Comments

Saturday, September 12, 2015

avathani Media Network

"சு.க.முக்கியஸ்தர்களின் தோல்விக்கு மஹிந்தவே முக்கிய காரணம்''


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும், அவ­ருடன் இருந்த கூட்­ட­ணி­யுமே கடந்த பொதுத் தேர்­தலில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி தோல்­வியடையக்காரணமாக செயற்பட்டனர் என துறை­மு­கங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்­ஜூன ரண­துங்க குற்றம் சுமத்­தி­யுள்ளார்.


வெற்­றி­பெற்ற தலைவர் ஜனா­தி­பதி மைத்­திரி பால­ சி­றி­சே­ன­வுடன் இணைந்து செயற்­ப­டாது தோல்­வி­கண்­ட­வர்கள் பின்னால் செல்லும் அர­சியல் கலாசாரத்தை மஹிந்த ராஜ­பக்ஷ உரு­வாக்­கி­யுள்ளார் என்றும் அவர் தெரி­வித்தார்.
கண்­டியில் தலதா மாளி­கையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை காலை மல்­வத்தை மற்றும் அஸ்­கி­ரிய மாகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்து ஆசி­பெற்ற பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்­த­போதே அமைச்­சர் அர்­ஜூன ரண­துங்க இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.
அமைச்சர் இங்கு மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் விமல் வீர­வன்ச, உத­ய­கம்­பம்­பில, வாசு­தேவ நாண­யக்­கார ஆகியோர் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை அழித்து விட்­டனர்.
ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியில் அர­சியல் செய்த பெரும்­பா­லான அரசியல்வாதிகளை மஹிந்த ராஜ­ப­க்ஷவே தோல்­வி­ய­டையச் செய்தார். அவர் சொல்­வதை செய்­யாத, அவ­ரது பின்னால் செல்­லா­ததன் கார­ண­மா­கவே திற­மை­யான அமைச்­சர்கள் எம்.பி.க்கள் பல­ருக்கு வெளி­யேற நேர்ந்­தது. ஏனென்றால் அவர்கள் அனை­வரும் கட்­சியின் தலை­வர்­க­ளு­டனே இருந்­தார்கள்.

மஹிந்த ராஜ­பக்ஷ கட்­சியின் தலை­வ­ராக இருந்­த­போது இவர்கள் அவ­ருடன் இருந்­தனர். கட்­சியின் தலைமைப் பத­வியை மைத்­திரி பால­சி­றி­சேன பெற்ற பின்னர் அவ­ருடன் இணைந்­தி­ருக்க வேண்டும். இத­னைத்தான் செய்­ய­தி­ருக்க வேண்டும். ஆனால் இதனை விடுத்து தோல்வி கண்­ட­வர்கள் பின்னால் செல்லும் அர­சியல் கலா­சா­ரத்தை மஹிந்த ராஜ­பக்ஷ உரு­வாக்­கி­யுள்ளார். அந்த அழி­வுதான் இன்று ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு ஏற்­பட்­டுள்­ளது.
மைத்­திரிபால சிறி­சே­ன­விற்கு கட்­சியின் தலை­மையை பெற்றுக் கொண்ட காலம் தொடக்கம் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங் கொடுக்க வேண்­டி­யி­ருந்­தது. இதற்கு மூல­கா­ர­ண­மாக அமைந்­தி­ருந்­தது மஹிந்த ராஜ­ப­க்ஷவும் அவ­ருடன் இணைந்­தி­ருந்த இன­வா­தத்தை தூண்டும் கூட்­ட­ணி­யாகும்.
இதன் கார­ண­மாக ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி அடி­மட்டத் தோல்­வியைக் கண்­டது. நான் சுதந்­திரக் கட்­சியை நேசிப்­பவன், பண்­டா­ர­நா­யக்­கவின் கொள்­கையை மதிப்­பவன். எனவே எதிர்­கா­லத்­தி­லா­வது "கை" சின்­னத்தில் தேர்­தலில் போட்­டி­யிட்டு நாட்டு மக்கள் மத்­தியில் செல்­வ­தற்­கான வழி­வ­கை­களை ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.
இல்­லா­விட்டால் இன­வாத்தை, மத­வா­தத்தை, தூண்­டி­விடும் வாய்­பேச்சாள் வெற்­றி­பெற முயற்ச்­சிப்­ப­வர்­க­ளுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் இணைந்தால் சுதந்திரக் கட்சி அழிந்து போய்விடும்.
ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஆட்சி ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றார்.


avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :