(எம்.எச்.எம்.அன்வர்)
காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் நாளை (10.10.2015) அன்று முஹைதீன் மெத்தைப்பள்ளிவாயல் மேல்மாடியில் மஸ்ஜித் நிருவாகிகளுக்கான 'மஸ்ஜித் நிருவாகிகள் பெற்றிருக்கவேண்டிய பண்புகளும் அவர்களின் சமூக மார்க்க பொறுப்புக்களும்' எனும் தலைப்பில் விழிப்பூட்டல் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி ஜம்இய்யாவின் செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ ஜி எம் ஜலீல் மதனி தெரிவித்தார்
காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேச பள்ளிவாயல்களின் நிருவாக சபை உறுப்பினர்களுடன் இடம்பெறவுள்ள இப்பயனுள்ள கருத்தரங்கில் ஜும்ஆப்பள்ளிவாயலில் 5 உறுப்பினர்களும் ஏனைய பள்ளிவாயல்களில் இருந்து 3 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான சான்றிதழ் மற்றும் இராப்போசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
