கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 402 சிசு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தெரிவித்தார்.
இச் சிசு மரணங்களில் 201 பிரசர அறைகளில் இடம்பெற்றுள்ளதாகவும் ஏனைய மரணங்கள் மகப்பேற்று விடுதிகளில் இடம்பெற்றுள்ளதாகவும் வைத்தியசாலை அறிக்கைளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு 46 சிசு மரணங்களும், 2012ம் ஆண்டு 54 சிசுமரணங்களும், 2013ம் ஆண்டு 60 சிசுமரணங்களும், கடந்த ஆண்டு 41 சிசுமரணங்களும் வைத்தியசாலை மகப்பேற்று விடுதிகளில் நிகழ்ந்துள்ளன.
