Featured Home (TOP)

Recent Comments

Monday, March 2, 2015

Unknown

இதுவரை தீர்க்கப்படாத குருக்கள்மடம் மனித படுகுழி விவகாரம்

(ஜுனைட்.எம்.பஹ்த்.)

கடந்த 30 வருட கால யுத்ததின் போது நேரடியாக யுத்தத்தில் பங்கேற்காத முஸ்லிம் சமூகம் அநியாயமாக   இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ  முடியாது.

காத்தான்குடியில் பள்ளிவாயல்களில் 100க்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டதும், அளிஞ்சிப் பொத்தானை போன்ற இடங்களில் இனச்சுத்திகரிப்பு செய்தது மட்டுமல்லாமல், கிழக்கிலே 35 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டனர் அதேபோல் வடக்கில் இருந்தும் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.
Read More
Unknown

"தவறுகளை ஏற்றுக் கொள்ளுகின்ற தலைமைத்துவமே சமூகத்திற்கு பாதுகாப்பானது" -பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

(பழீல் அப்துல் கபூர்)

'தலைமைத்துவப் பொறுப்பிலுள்ளவர்களும் மனிதர்களே என்றவகையில் தவறுகள் ஏற்பட முடியும். ஆனால், அந்தத்தவறுகளை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து பாடம் படித்து அவற்றைத் திருத்திக் கொள்ள தலைவர்கள் முன்வர வேண்டும். அப்படியான தலைமைத்துவமே சமூகத்திற்குப் பிரயோசனமான, பாதுகாப்பான தலைமைத்துவமாகும்.' எனபொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த 26.02.2015 அன்று பண்டாரகம அல்-கஸ்ஸாலிவிதியாலயத்தில் நடைபெற்ற முப்பெரு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Read More
Unknown

முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு வழங்கிய 6 பேரின் ஆதரவு வாபஸ்

கிழக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக ஆதரவு வழங்கிய ஆறு உறுப்பினர்கள் தமது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக மாகாண சபையிலிருக்கின்ற உறுப்பினர்களில் 20 பேர் சத்தியக்கடதாசியின் ஊடாக தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நஷீர் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.
Read More
Unknown

மிதக்கும் ஆயுதக் கப்பல் குறித்த விசாரணைகளை நிறுத்த அமைச்சர் ஒருவருக்கு 30 கோடி கையூட்டல்?

மிதக்கும் ஆயுதக் கப்பல் குறித்த விசாரணைகளை நிறுத்த ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவருக்கு 30 கோடி ரூபா கையூட்டல் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இந்த தனியார் கடற் பாதுகாப்பு நிறுவனம் கடலில் கப்பல் ஒன்றில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றை பேணி வந்தது.
இது குறித்து விசாரணை நடத்தப்படுவதனை நிறுத்த ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரை அணுகியுள்ளனர்.
எனினும்,  இந்த கையூட்டலை பெற்றுக்கொள்ள குறித்த அமைச்சர் மறுத்துள்ளார்.
Read More
Unknown

முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவது தடை

மோட்டார் சைக்கிளில் செல்லும் போது   முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்கள்  அணிவது   தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Read More
Unknown

இராஜாங்க சுகாதார அமைச்சர் ஹசன் அலி அவர்களின் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் காத்தான்குடி விஜயம்.


காத்தான்குடி தள வைத்திய சாலைக்கு இராஜாங்க சுகாதார அமைச்சர் கௌரவ ஹசன்அலி (பா.உ) அவர்களின் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட விசேடகுழுவொன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் அழைப்பின்பேரில் கடந்த 25.02.2015ம்திகதி (புதன்கிழமை) காலை 10.00மணிக்கு வருகைதரவிருந்தது.
Read More
Unknown

தேர்தல் முறையை மாற்றியே தீரவேண்டும் : அமைச்சர் ராஜித வலியுறுத்தல்

தேர்தல் முறையை மாற்­ற­வேண்டும் என்ற தேவை இருந்தால் அதனை நிச்­சயம் இந்த 100 நாள் பகு­தியில் மாற்­றி­ய­மைக்­கலாம். நவீன தொழில் நுட்ப வச­திகள் இருக்­கி்ன்ற இந்த காலத்தில் எல்லை நிர்­ணயம் குறு­கிய காலப்­ப­கு­தியில் செய்­யலாம். மேலும் நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கும் நாங்கள் தீர்­வு­காண்போம் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.
கொழும்பு இலங்கை மன்­றக்­கல்­லூ­ரியில் நேற்று நடை­பெற்ற சமூக நீதிக்­கான அமைப்­பான நிபு­ணத்­துவ கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்டு உரை­யா­ற­றிய அமைச்சர் சேனா­ரட்ன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
Read More
Unknown

பொதுத் தேர்தலை அரசாங்கம் உரிய நேரத்தில் நடத்தவேண்டும் : ரில்வின்

புதிய அரசாங்கம் மக்­க­ளுக்கு வழங்கிய தனது தேர்தல் வாக்­கு­று­தியின் அடிப்­ப­டையில் எதிர்­வரும் காலங்­களில் பொதுத்­தேர்­தலை உரிய நேரத்தில் நடத்­த வேண்டும். அத்துடன் அவ்வாறு தேர்தல் நடத்தி தெரி­வா­கின்ற உறுப்­பி­னர்­களின் ஊடா­கவே தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்று மக்கள் விடு­தலை முன்­னணி வலி­யு­றுத்தியுள்ளது.

அதே­நேரம் அரசாங்கம் பொதுத்­தேர்­தலை ஒத்­தி­வைக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கு­மானால் அது முன்­னைய அர­சாங்­கத்தின் கீழ் ஊழல் மோச­டி­களை மேற்­கொண்ட சில அர­சியல் பிர­மு­கர்கள் தமது கறுப்பு பணங்­களை பாது­காத்து கொள்­ளவும் சட்­டத்தின் பிடியில் இருந்து தம்மை பாது­காத்­துக்­கொள்­ளவும் வாய்ப்­பாக அமைந்து விடும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யது.
Read More
Unknown

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பாலமுனைக் கிராமத்திற்கான கிராம மட்டக் குழு நியமனம்


ஊடகப்பிரிவு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)
     
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பாலமுனைக் கிராமத்திற்கான கிராம மட்டக் குழுவினைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (01.03.2015) ஞாயிற்றுக்கிழமை பாலமுனை கிராம அவிபிருத்திச் சங்கக் கட்டடத்தில் இடம்பெற்றது.
NFGGயின் செயற்குழு உறுப்பினர் R.ஜவாத் ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படிக் கூட்டத்தில் NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் நளீமி, காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Read More