Featured Home (TOP)

Recent Comments

Thursday, March 12, 2015

Unknown

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

ஐக்கிய அரபு இரஜ்ஜிய அணிக்கெதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணி 146 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் இடம்பெற்று வருகின்றது.
நியூசிலாந்தின் வெலிங்டனில் இன்று இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் குழு “பி ” யில் இடம்பெற்றுள்ள தென்னாபிரிக்கா மற்றும்  ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன.
Read More
Unknown

"கிழக்கில் ஒரு நல்லிணக்க ஆட்சியினை ஏற்படுத்துவதற்கு சரியான நேரத்தில் NFGG வழங்கிய பங்களிப்பு என்ன..?" விபரிக்கிறார் அப்துர் ரஹ்மான்

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

"ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையில் அனைவரும் வரவேற்கத்தக்க ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் எற்பட வேண்டும் என மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டு அரசியலின் நம்பிக்கைக்குரிய தொடக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது. தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரளவு திருப்திப்படும்படியான வகையில் அமைந்திருக்கும் இந்த மாற்றத்தை உருவாக்குவதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பெறுமதிமிக்க பங்களிப்பினை உரிய நேரத்தில் வழங்கியது என்ற செய்தியினை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகழ்ச்சியடைகிறோம்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

Read More
Unknown

பிரபல வர்த்தகர் அஹமட் மொஹிடீன் மொடன் ஹாஜியார் வபாத்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகரும் , மொடன் ஜூவலரி உரிமையாளரும், சமூக சேவையாளருமான யூ.எல்.அஹமட் மொஹிடீன் ஹாஜியார் (2-03-2015 இன்று வியாழக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் கொழும்பு ஆசிரி தனியார் வைத்தியசாலையில் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்.
Read More
Unknown

கொம்பனித்தெருவில் குடியிருப்புகளை இழந்த மக்களுக்கு விரைவில் நிவாரணம்.


கொழும்பு, கொம்பனித்தெரு, ஜாவா ஒழுங்கை, மலாய் வீதி பிரதேசங்களில் இந்திய வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப் பட்டுள்ள நிலப்பரப்பில் அமைந்திருந்த வீடுகளில் வசித்து வந்த குடியிருப்பாளர்களுக்கும், அங்கு வியாபார நிலையங்களை வைத்திருந்த அவற்றின் உரிமையாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதாக நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
Read More
Unknown

பாம் வீதியினை சொந்த நிதியில் செப்பனிடுவதற்கு NFGG முன்வந்துள்ளது

(ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)


புதிய காத்தான்குடி, பரீட் நகர், பாம் வீதி மிகவும்  படுமோசமாக காணப்படுகின்றமையால் மக்களின் தேவை கருதி இதனைத் தற்காலிகமாக தமது சொந்த செலவில் செப்பனிட்டுக் கொடுப்பதற்கு NFGG முன்வந்துள்ளது.
இதற்கான அனுமதி உடனைடியாக வழங்குமாறு காத்தான்குடி நகரசபையிடம் NFGG கோரியுள்ளது.
Read More
Unknown

ஹைராத் வித்தியாலயத்தின் அபிவிருத்தியில் NFGG கவனம் செலுத்தியுள்ளது

(ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)


புதிய காத்தான்குடி கைராத் வித்தியாலயத்திற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பிரதிநிதிகள் விஜயம் ஒன்றை கடந்த (09.03.2015) அன்று மேற்கொண்டனர்.
இந்த விஜயத்தின்போது NFGGயின் காத்தான்குடி பிரதேச தலைமைத்துவசபை உறுப்பினர்களான காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார், MACM.ஜவாஹிர், MHA.நஸீர் மற்றும் மகளிர் அணி உறுப்பினர் அனீஸா பிர்தௌஸ் ஆகியோருடன் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Read More
Unknown

புதிய தலைமுறை அலுவலகம் மீது குண்டு வீச்சு

சென்னையிலிருந்து ஒளிபரப்பாகிவரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமையகத்தின் மீது இன்று அதிகாலையில் வெடி குண்டு வீசப்பட்டது.
அதிகாலை மூன்று மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் டிபன் பாக்ஸ் போன்ற பாத்திரத்தில் பொருத்தப்பட்ட குண்டுகளை அலுவலகத்தின் மீது வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. பொருட்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதையடுத்து அந்த அலுவலகத்தின் முன்பாக பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த வெடிகுண்டின் பாகங்கள் சேகரிக்கப்பட்டன.
Read More
Unknown

கட்டாரில் “ இறைத் தரிசனம் " என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு

(கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி) 


  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 

தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா  இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி  (12-03-2015) வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
Read More
Unknown

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழா நாளை



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழா 13-03-2015 நாளை வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள ஜாமிஆ கடைத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.
Read More
Unknown

ரெயிலர் வாகனமொன்று வயலுக்குள் விழுந்துள்ளது.

கல்முனையில் இருந்து அக்கரைப் பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த ரெயிலர் வாகனமொன்று குடைசாய்ந்து வயலுக்குள் விழுந்துள்ளது.

அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று எல்லையில் இன்று (12.03.20150 அதிகாலையிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

தகவல் - பைசா் அமான்
Read More
Unknown

இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிடத்தில் 15ஆயிரம் பேர் பங்கேற்பு.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அகிம்சை, சகிப்புத்தன்மை மற்றும் பல்வகைமை பற்றிய கருத்துக்களை மக்கள் மயப்படுத்திய இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் அறிவிக்கின்து.

இம்முறை சுமார் 15 ஆயிரம் பேர் இலங்கை மக்கள் அரங்கத்தில் இடம்பெற்ற அளிக்கைகளை நேரடியாகப் பார்வையிட்டுள்ளனர். மக்கள் அரங்கத்தின் வாயிலாக முன்வைக்கப்பட்ட அமிக்சை பற்றிய சிந்தனைகள் சுமார் 30ஆயிரம் பேரிடம் சென்றிருப்பதை இறுதிக் கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துவதாக ஊடக மன்றம் மேலும் தெரிவிக்கின்றது.  
Read More
Unknown

புவி அதிர்வு உணரப்பட்டுள்ளது


பொலன்னறுவையிலுள்ள சில பிரதேசங்களுக்கு புவி அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மூன்று வினாடிகள் இந்த அதிர்வு காணப்பட்டுள்ளது. பகமூன, கிரிதலே, கந்துருவெல, தியபெதும ஆகிய பிரதேசங்களில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த அதிர்வினால், எந்தவிதமான உயிர் மற்றும் பொருள் சேதங்கள் இடம்பெறவில்லையெனவும் இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

தகவல் - ஜூனைத் எம் பஹத்
Read More
Unknown

ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தினால் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரிக்கு ஒலிபெருக்கி சாதனம் அன்பளிப்பு



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியும் அதன் பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தினிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் புதிய சரீஆ பிரிவுக்கு ஒலிபெருக்கி சாதனம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
Read More