
கல்வி கற்க வந்த மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர் ஆசிரியர் குற்றவாளியென நீதிமன்றம் அறிவிப்பு! தண்டனை மே 26ல்!!
காத்தான்குடி நகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆளுந்தரப்பு உறுப்பினராகவுள்ள எச்.எம்.எம். பாக்கீர் என்பவரால் நடாத்தப்பட்டு வரும் தனியார் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்பதற்காகச் சென்றிருந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவியை கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 22ம் திகதியன்று குறித்த நகர சபை உறுப்பினர் அவரது காரில் கல்முனைக்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லைக்குட்படுத்தியதாக காத்தான்குடி பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டு நடைபெற்று வந்த வழக்கில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் (21.04.2015) குறித்த நகர சபை உறுப்பினரைக் குற்றவாளி எனத் தெரிவித்துள்ளது.






