Featured Home (TOP)

Recent Comments

Saturday, August 1, 2015

avathani Media Network

தமிழ் மக்களோடுஇணைந்த எழுச்சி மிக்க அரசியலை மு.கா. முன்னெடுக்கிறது - றவூப் ஹக்கீம்

தமிழ் மக்களோடு இணைந்து செல்லும் எழுச்சி மிக்க அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாக அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 
ஏறாவூரில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளதாவது, “முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் புதிய யுகம் பிறந்திருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக சகோதர தமிழ் சமூகத்தோடு முரண்பாட்டு அரசியலைச் செய்யாமல் கைகோர்த்துக் கொண்டு போகின்ற எழுச்சி பெற்ற வியூகமாக அது இருக்கும்.
சரித்திரத்திலே அதிகாரத்தில் பங்கெடுக்காமல் இதுவரை ஒதுங்கி தங்களுடைய அரசியலை தனியே செய்து கொண்டிருந்த தமிழ் அரசியல் தரப்பினரை கிழக்கில் ஆளும் அதிகார வர்க்கமாக மாற்றிக்காட்டிய பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உண்டு.
இந்தத் தேர்தலின் மூலம் கடந்த 10- 12 வருடகாலமாக முஸ்லிம் சமூகத்திற்கு இருந்து வந்த இருண்ட யுகம் இல்லாமலாகிவிடும். நாட்டுப் பற்று என்ற போர்வையில் போலித்தனமாக முழு சர்வதேசத்தையும் பகைத்துக் கொள்ளுகின்ற ஒரு வெளிநாட்டுக் கொள்கையைத்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடைப்பிடித்தார். வெளிநாட்டு முதலீடுகளை எல்லாம் தடுக்கின்ற ஒரு விதமான குருட்டு ராஜதந்திரத்தை கைக்கொண்ட ஆட்சியாளர்களை நாங்கள் விரட்டியடித்திருக்கின்றோம்.” என்றுள்ளார்.
Read More
avathani Media Network

துமிந்த திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: ஒருவர் பலி 5பேர் காயம்!

அநுராதபுரம் ரபேவ பகுதியில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற வான் ஒன்றில் அடிபட்டு ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் 05 பேர் காயமடைந்துள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் ரபேவ பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீதே குறித்த வான் மோதியுள்ளது.
மதவாச்சியில் இருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற வான் இவர்கள் மீது மோதிக் கொண்டு சென்றதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த 04 ஆண்கள் உட்பட பெண்ணொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்தவர்களில் இருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வானை ஓட்டிச் சென்றவர் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் என்பதுடன் மிஹிந்தலை பொலிஸாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Read More
avathani Media Network

"பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யத் தவறியவற்றை வெளியிலிருந்து நாம் செய்து காட்டியுள்ளோம்": பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

'மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியாது போன சமூகக் கடமைகளை அதற்கு வெளியே இருந்து நாம் செய்து காட்டியிருக்கிறோம்' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அண்மையில் காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச் சின்னத்தில் 2ம் இலக்க வேட்பாளராக போட்டியிடும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
"மக்கள் ஆணையைப்பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளை மறந்து செயற்படுவது விசனத்துக்குரியதாகும். கடந்த காலங்களில் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இன மதவாத வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அதனை எதிர்த்து குரல்கொடுக்காது தமது அரசியல் இருப்புகளையும் அதன் மூலம் கிடைக்கும் சுய இலாபங்களையும் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் செயற்பட்டமையை மக்கள் அறிவர்.
தம்புள்ளை மற்றும் ஏனைய பிரதேசங்களில் மஸ்ஜிதுகள் தாக்கப்ட்டபோதும், மத விவகாரங்களை சுதந்திரமாக நிறைவேற்ற விடாமல் தடுத்த போதும் பர்தா, ஹலால் போன்ற பல்வேறு விவகாரங்கள் தலைதூக்கிய போதெல்லாம் அவற்றை எதிர்த்து குரல் கொடுக்காமல், தாம் சார்ந்த அரசியலை ஸ்திரப்படுத்துவதில்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அக்கறை காட்டி வந்தனர். கிரீஸ் மனிதன், வெள்ளை வேன், பயங்கர கொடூர சம்பவங்கள் நடந்தபோது அவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லை, இவைகள் கட்டுக் கதைகள் என்றெல்லாம் உண்மைக்குப் புறம்பாக செயற்பட்டமையை மக்கள் அறிவர். 
இந்த நிலமைகளில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, எந்த வித பாராளுமன்ற உறுப்புரிமையும் இல்லாத நிலையில், மகிந்தவின் பயங்கரமான, அராஜக அடக்குமுறை அரசியலுக்கு மத்தியிலும், இப்பிரச்சனைகளை தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கும் முன்கொண்டு சென்றது. மக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கை வந்த போது அவரை பகிரங்கமாக சந்தித்து முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கை கொடுத்தது. இவ்விடயம் தொடர்பாக நமது நாட்டில் அக்கறையுடன் செயற்பட்ட அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் போன்ற சிவில் அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டது.
மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு முயற்சிக்க வேண்டுமேயல்லாது அதனை மூடி மறைப்பதும் திரிபு படுத்துவதும் சமூகத்துரோகமாகும். இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் மக்கள் ஆணையினை வேண்டி தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். சமூகம் சார் கடமைகள் என்னவென்று தெரியாதவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யாமல் தகுதி வாய்ந்த சமூக அரணாக செயற்படக்கூடிய ஆளுமையும் துணிவும் கொண்ட பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறு மக்களை வேண்டிக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டார்.

Read More
avathani Media Network

மஹிந்தவின் பயணங்களுக்காக தரவேண்டிய 114 மில்லியன் ரூபாய் பாக்கியை செலுத்துமாறு எயார்லைன்ஸ் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பயணங்களுக்காக தரவேண்டிய பாக்கியை செலுத்துமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஜனாதிபதி செயலகத்திடம் கோரியுள்ளது.
2011ஆம் ஆண்டு முதல் மஹிந்த ராஜபக்ச, தமது பயணங்களுக்காக செலுத்த வேண்டிய 114 மில்லியன் ரூபாய்களை செலுத்துமாறு எயார்லைன்ஸ் கேட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவன தலைவர் அஜித் டயஸ், ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயன்கோனுக்;கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதன்படி 113 மில்லியன், நானூற்றி தொன்னூற்று நான்காயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு ரூபாய்களை முன்னாள் ஜனாதிபதி செலுத்தவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைதவிர இதற்கான வரிகளையும் செலுத்தவேண்டும் என்று எயார்லைன்ஸ் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் மஹிந்த ராஜபக்ச. திருப்பதிக்கு கடந்த டிசம்பத் 9ஆம் 10ஆம் திகதிகளில் சென்று வந்த செலவும் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

Read More
avathani Media Network

கிழக்கு ஊடக சங்கத்திற்கும் 'தாய்வீடு' கையளிப்பு! மட்டு. அரச அதிபர் பாராட்டு!!

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)


தமிழ் சி.என்.என். இணையதள நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள 'தாய் வீடு' பத்திரிகையின் ஒரு தொகுதி, கிழக்கு ஊடக சங்கத்திற்கும் கையளிக்கப்பட்டது.

கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், கல்முனையில் அமைந்துள்ள தமிழ் சி.என்.என். கிழக்கு மாகாண அலுவலகத்தில் நேற்று (31) வெள்ளிக்கிழமை அலுவலகப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வியிடமிருந்து இதனைப் பெற்றுக் கொண்டார்.

இதன்போது, கிழக்கு ஊடக சங்கம் வெளியிட்டு விநியோகித்து வரும் பொதுமக்களுக்கான தகவல் அறியும் உரிமை மற்றும் முறைகேடான தேர்தல் நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான பிரசுரமும் தமிழ் சி.என்.என். கிழக்கு மாகாண அலுவலகப் பொறுப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

கிழக்கு ஊடக சங்கத்தின் செயலாளர் வீ. பத்மசறீ, பொருளாளர் எஸ். சச்சுதானந்தகுமார் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர் லோ. தினேஷ்ராஜ் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இப்பத்திரிகையின் பிரதியொன்றினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அம்மையாரிடம் கிழக்கு ஊடக சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று மாலை அவரது வாசஸ்தலத்திற்குச் சென்று நேரில் கையளித்தனர்.

பத்திரிகையை மிக ஆர்வத்துடன் பார்வையிட்ட மாவட்ட அரசாங்க அதிபர், மிக நேர்த்தியான முறையிலும், பொதுத் தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் தமிழ் மக்களுக்கு காத்திரமான அரசியல் கருத்துக்களை முன்வைத்தும் 'தாய் வீடு' பத்திரிகை வெளியிடப்பட்டிருப்பதாக கிழக்கு ஊடக சங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.



Read More
avathani Media Network

பெட்­டிக்குள் இருந்த சட­லமும் பின்­ன­ணியும்- கள்ளத் தொடர்பு உயிரைக் குடித்தது

அது கடந்த 29 ஆம் திகதி புதன்கிழமை. வழ­மையான பர­ப­ரப்­புடன் இயங்­கிக்­கொண்­டி­ருந்­தது புறக்­கோட்டை. நாட்டின் நாலா புறமும் இருந்து வந்­த­வர்­களும் நாலா புறத்தை நோக்கி செல்லத் தயா­ரா­னோரும் புறக்கோட்­டையின் பெஸ்­டியன் மாவத்­தையில் உள்ள தனியார் பஸ் நிலை­யத்தில் பர­ப­ரப்­பாக அலைந்து திரிந்த முற்பகல் வேளை அது.
சுறு­சு­றுப்­புக்கு கொஞ்­சமும் பஞ்­ச­மில்­லாது இயங்­கிக்­கொண்­டி­ருந்த கொழும்பு மத்­திய பஸ் தரிப்பு நிலை­யத்­துக்கு இதன் போது தான் வந்து இறங்­கு­கின்றார் மொஹிதீன். அனு­ராதபுரத்தைச் சேர்ந்த எம்.எம்.சி. மொஹிதீன் கடந்த இரு வரு­டங்­க­ளாக சவூதி அரே­பி­யாவின் ரியாத் நகரில் சார­தி­யாக வேலை பார்த்­து­விட்டு தனது மனைவி சகிதம் கட்­டு­நா­யக்­கவில் இருந்து கொழும்­புக்கு அவர் அப்­போது தான் தனது ஊருக்கு செல்லும் நோக்­கோடு வந்­துள்ளார்.
மனை­வியின் கைகளில் இரு பொதிகள். மொஹி­தீனின் கைகளில் பெரிய பெட்­டி­யொன்றும் இன்­னொரு பொதியும் இருந்­துள்­ளது.
இதன் போது மொஹிதீன் அவ­ரது பொதி­களை தூக்கி வரு­வதில் சிர­மங்கள் இருக்­கவே சுமார் 48 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் அவ­ருக்கு அதனை சுமந்து செல்ல உத­வி­யுள்ளார். குறித்த உதவி செய்த நபர் தானும் தம்­புள்­ளைக்கு செல்ல வேண்டும் என தெரி­வித்து சுமு­க­மா­கவே உரை­யாடி 15 ஆம் இலக்க பஸ் தரித்து நிற்கும் இடத்தை நோக்கி சென்­றுள்­ளனர்.
சுமை ­கா­ர­ண­மாக பொதியை பிடித்­தி­ருந்த கையை எடுத்து மறு­கைக்கு மாற்ற மொஹிதீன் முனைந்த போது குறித்த நபர் அப்­பொ­தி­யுடன் அங்­கி­ருந்து பிறி­தொரு பஸ் வண்­டிக்குள் ஏறி மறைந்­துள்ளார்.
இத­னை­ய­டுத்து தனது பயணப் பொதியைத் தேடி மொஹிதீன் பஸ் தரிப்பு நிலையம் எங்கும் அலைந்­துள்ளார். இதன் போது அங்­கி­ருந்த நடை­பாதை வியா­பா­ரி­க­ளையும் அவர் வின­வி­யுள்ள நிலையில் அவர்­களும் அது தொடர்பில் தேடி­யுள்­ளனர்.
இதன்­போது 15 ஆம் இலக்க பாதையில் பய­ணிக்கும் கொழும்பு–- அனு­ராதபுரம் பஸ் வண்டி தரிக்கும் இடத்தில் பிர­யா­ணிகள் வரி­சை­யாக இருக்க அங்கு கைவி­டப்­பட்ட கறுப்பு நிற பயணப் பொதி­யொன்று இருந்­துள்­ளது. மொஹி­தீனின் பயணப் பொதியைத் தேடியோர் அதுவா பொதி என கேட்ட போதும் மொஹிதீன் அது தனது பொதி­யல்ல என தெரி­வித்­துள்ளார்.
அங்­கி­ருந்த அந்த கறுப்பு நிறத்­தி­னா­லான அந்த பெட்டி 3 அடி நீளமும் 2 அடி அக­லமும் 1 அடி உய­ரமும் கொண்­டது. அந்த பெட்­டி­யா­னது 15 ஆம் இலக்க கொழும்பு-–அனு­ரா­த­புரம் தனியார் அரை சொகுசு மற்றும் சாதா­ரண கட்­டணம் அற­விடும் 31 ஆம் இலக்க தரிப்­பி­டத்­தி­லேயே கைவி­டப்­பட்ட நிலையில் இருந்­துள்­ளது. அந்த இடத்தில் கொழும்பு–அனு­ராதபுரம் பஸ் வண்­டி­க­ளுக்கு மேல­தி­க­மாக கொழும்­பி­லி­ருந்து ஸ்ரீ புற கஹட்­ட­கஸ்­தி­கி­லிய ஹொரவ­பொத்­தானை கல்­னேவ மற்றும் வேவல ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு செல்லும் பஸ் வண்­டி­களும் நிறுத்­தப்­ப­டு­வது குறித்த அடை­யா­ளப்­ப­டுத்­தல்­களும் இருந்­தன.
இந் நிலையில் யாரும் உரி­மை­ கோ­ராத அந்த பெட்­டியை அங்­கி­ருந்த தண்ணீர் போத்­தல்கள் விற்­பனை செய்யும் வியா­பாரி ஒருவர் திறந்­துள்ளார். இதன் போது நீல நிற துணி­யொன்­றினால் சுற்­றப்­பட்டு மடிக்­கப்­பட்ட நிலையில் சடலம் ஒன்று அந்த பெட்­டிக்குள் இருப்­பதை அவர் கண்டு அதிர்ச்­சி­யுடன் கத்­தவே விடயம் பொலிஸ் நிலையம் வரை சென்­றுள்­ளது.
வழ­மை­யான நட­வ­டிக்­கை­களில் புறக்கோட்டை பொலி­ஸாரும் ஈடு­பட்­டி­ருந்த போது தன் 119 ஊடாக வந்த ஒரு அழைப்பு புறக் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்­ட­வர்­களை புறக்கோட்டை பெஸ்­டியன் மாவத்தை பஸ் நிலை­யத்தில் கொண்­டு­வந்து நிறுத்­தி­யது.
‘சேர் நான் நடை­பாதை வியா­பாரி செல்­லையா வீரப்பன் கதைக்­கின்றேன். அனு­ராதபுரம் தனியார் பஸ் தரிப்­பி­டத்தில் ஒரு பெட்­டிக்குள் சடலம் ஒன்று உள்­ளது சேர்…’ என கூறி அந்த தொலை­பேசி இலக்கம் துண்­டிக்­கப்­பட்­டது.  புறக் கோட்டை பொலி­ஸா­ரினால் உட­ன­டி­யா­கவே விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.
காலை 9.15 மணி­ய­ளவில் இருந்து ஆரம்­பிக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் பொலிஸார் பல்­வேறு தக­வல்­க­ளையும் சேக­ரித்து பலரின் வாக்கு மூலங்­க­ளையும் பதிவு செய்­து­கொண்­டனர். இந் நிலையில் சடலம் இருந்த பெட்டி அந்த இடத்­தி­லேயே அப்­ப­டியே வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் விசா­ர­ணைகள் தொடர்ந்­தன.
புதன் பிற்­பகல் வேளையில் புதுக்­கடை 9 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி திலின கமகே ஸ்தலம் விரைந்து மஜிஸ்­திரேட் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தார்.
இதன் போது பெட்­டிக்குள் இருக்கும் சடலம் பெண்­ணொ­ரு­வ­ரு­டை­யது என உறு­தி­யான நிலையில் அவ­ரது உயரம் 5 அடி 2 அங்­குலம் என தெரி­ய­வந்­தது. உடலில் எங்கும் எவ்­வித வெளிக் காயங்­களும் இல்­லாமல் அந்த சடலம் காணப்­பட்­டது. மூக்கில் மட்டும் இரத்தம் வெளி­யே­றி­ய­மைக்­கான அடை­யா­ளங்கள் இருந்­தன.
சட­ல­மா­னது அரை நிர்­வா­ண­மாக இருந்­தது. சட­லத்தின் மேற்­ப­குதி இளம் நீலம் மற்றும் வெள்ளை கலந்த டீ சேட் ஒன்று அணி­யப்­பட்ட நிலையில் இருந்­தது. அந்த டீ சேட்­டிலும் இரத்தக் கறைகள் இருந்­தன. இதனை விட கீழ் பகு­தியில் உள்­ளாடை மட்­டுமே காணப்­பட்­டது. இதனை விட அந்த பெட்­டியில் சட­ல­மாக காணப்­பட்ட பெண்ணின் உள்­ளா­டைகள் மேலா­டைகள் போர்வை என பல துணிமணி­களும் இருந்­தன. எனினும் அவரை அடை­யாளம் காணும் வகையில் எதுவும் இருக்­க­வில்லை.
சட­லத்தின் கழுத்தில் ஓம் அடை­யாளம் இடப்­பட்ட பென்­ட­னுடன் கூடிய தங்கச் சங்கிலி ஒன்றும் காலில் சலங்­கை­களும் காணப்­பட்­டன. காதில் கம்­மல்கள் இருக்­க­வில்லை. இதனை விட சட­லத்தின் நெற்­றியில் பொட்டு ஒன்றும் இருந்­தது.
இந் நிலையில் சட­ல­மாக உள்ள பெண் யார் என்ற கேள்­வியும் அவர் எவ்­வாறு மர­ண­ம­டைந்தார் என்ற கேள்­வியும் ஏற்­பட்­டது. இந் நிலை­யி­லேயே ஊட­கங்­க­ளுக்கு குறித்த பெண்னின் படங்­களைக் கொடுத்த பொலிஸார் அடை­யாளம் காண உதவி கோரினர்.
அதே கையோடு விசா­ர­ணை­க­ளையும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தினர். கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்­டவின் மேற்­பார்­வையில் இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர். இதன் போது நேற்று முன் தினம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு விசேட தகவல் ஒன்று கிடைத்­தது. ‘சேர்.. நான் XXX லொட்ஜின் முகா­மை­யாளர் பேசு­கின்றேன். பத்­தி­ரி­கையில் உள்ள சட­ல­மாக இருந்த அந்த பெண் எங்கள் லொட்ஜில் தான் தங்­கி­யி­ருந்தார்’ என தகவல் கொடுத்­தது. உடன் செயற்­பட்ட பொலிஸார் கொழும்பு செட்­டியார் தெருவில் உள்ள குறித்த லொட்­ஜுக்கு சென்று அங்­கி­ருந்த சீ.சீ.டீ.வி.கண்­காணிப்பு கம­ராவில் உள்ள பதி­வு­களை அவ­தா­னித்­தனர். அதனைத் தொடர்ந்து லொட்ஜில் இருந்த பதி­வு­களின் படி அவர் யாழ். வட்­டுக்­கோட்டை பிர­தே­சத்­தவர் என்­பதைக் கண்­ட­றிந்து யாழ். பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்கி உற­வி­னர்­களை கண்­ட­றிந்து விசா­ரித்து தக­வல்­களைப் பெற்­றனர்.

புறக்­கோட்டை பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலை யத்தில் பிர­யாணப் பெட்­டிக்குள் மறைத்து கைவி­டப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்­டுக்­கோட்­டையைச் சேர்ந்த 34 வய­து­டைய ரங்கன் கார்த்­தி­கா­வி­னு­டை­யது என அடை­யாளம் காணப்­பட்­டது. 
இர­வோ­டிர­வாக யாழில்இருந்து கொழும்­புக்கு வந்த கார்த்­தி­காவின் தாயார் சட­லத்தை அடை­யாளம் காட்­டினார்.
இந் நிலையில் பல்­வேறு தக­வல்­களைப் பெற்ற பொலிஸார் கொலைக்கான காரணம் முறை தவ­றிய காதல் என கண்­ட­றிந்­தனர். சந்­தேக நப­ரையும் அடை­யாளம் கண்டு யாழ்.பிர­தே­சத்தைச் சேர்ந்த அவரைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண் கடந்த3 வரு­டங்­க­ளாக கொழும்­பி­லேயே வசித்து வந்­துள்­ள­தா­கவும் இறு­தி­யாக அவர் ஒன்­பது நாட்­க­ளுக்கு முன்னர் கொழும்பு செட்­டியார் தெருவில் உள்ள குறித்த தனியார் தங்கும் விடு­திக்கு பிறி­தொரு ஆணுடன் வந்து தங்­கி­யி­ருந்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார். செட்­டியார் தெருவில் உள்ள குறித்த தங்குமி­டத்தில் வைத்தே கார்த்­திகா கொலை செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும் என சந்­தே­கிக்கும் பொலிஸார் 3 அடி நீளம்2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உய­ர­மான கறுப்பு நிற பெட்­டி­யொன்றை சிர­மத்­துக்கு மத்­தியில் சந்­தேக நபர் சுமந்­து­கொண்டு விடு­தியில் இருந்து வெளி­யேறும் சீ.சீ.ரி.வி. காட்­சி­க­ளையும் கைப்­பற்­றி­யுள்­ளனர். மேல் மாடியில் இருந்து மிகவும் சிர­மத்­துக்கு மத்­தியில் அந்த பெட்­டியைக் குறித்த நபர் சுமந்து வரு­வ­துடன் பதி­வு­களை முடித்­து­க்­கொண்டு பெட்­டி­யுடன் வெளியே வந்து அதனை இழுத்­துக்­கொண்டு செல்லும் காட்சி அதில் பதி­வா­கி­யுள்­ளது.
இத­னை­விட அவர் அப்­பெட்­டி­யுடன் பெஸ்­டியன் மாவத்தை பஸ் நிலை­யத்­துக்கு சென்­ற­மைக்­கான ஆதா­ரங்­க­ளாக மேலும் சில சீ.சீ.ரி.வி. காட்சிப் பதி­வு­க­ளையும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலிஸார் சேக­ரித்­துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தர். அத்­துடன் அந்த பெட்­டியை பஸ் தரிப்பு நிலை­யத்­துக்கு முச்­சக்­கர வண்­டி­யொன்­றி­லேயே அவர் கொண்டு சென்­றுள்­ள­மையும் அந்த முச்­சக்­கர வண்­டி­யையும் பொலிஸார் அடை­யாளம் கண்­டுள்­ள­தா­கவும் அந்த பொலிஸ் அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.
இது தொடர்பில் மேலும் தெரி­ய­ வ­ரு­வ­தா­வது;
சட­ல­மாக மீட்­கப்­பட்ட கார்த்­தி­காவின் கணவர் வெளி­நா­டொன்றில் வேலை செய்து வரு­கின்றார். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிநாட்­டுக்கு சென்­றுள்ள அவர் இது­வரை நாடு திரும்­ப­வில்லை. கார்த்­தி­கா­வுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந் நிலையில் அவர் கார்த்­தி­காவின் தாயாரிடமே வளர்ந்து வரு­வ­தாக பொலிஸார் தெரிவிக்­கின்­றனர்.
கார்த்­திகா இறு­தி­யாக தங்­கி­யி­ருந்த செட்­டியார் தெரு தங்­கு­மி­டத்தில் இருந்த சீ.சீ.ரி.வி. கண்­கா­ணிப்பு கமரா பதி­வு­களை விசா­ரணைக் குழு­வி­னரின் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் சந்­தேக நப­ரையும் பொலிஸார் அடை­யாளம் கண்­டுள்­ளனர். கார்த்­தி­கா­வுடன் கொழும்பில் இருந்த குறித்த நபர் தொடர்பில் கார்த்­தி­காவின் தாயா­ருக்கு தக­வல்கள் தெரிந்­தி­ருப்­ப­தாக கூறும் பொலிஸார் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக அந் நபர் கார்த்­தி­கா­வுடன் ஒன்­றாக இருந்­துள்­ள­மையும் உறு­தி­யா­கி­யுள்­ளது. இதுவரை மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களில் ஒரு வாரத்­துக்கு முன்பு கார்த்­தி­காவே குறித்த தங்­கு­மி­டத்தில் அறை எடுத்து தங்­கி­யுள்­ள­துடன் பின்­ன­ரேயே கார்த்­தி­காவை சந்­திக்க வேண்டும் எனக் கூறிக்­கொண்டு குறித்த சந்­தேக நபர் அங்கு வந்­துள்­ள­தும் இதன் போது அவ்வி­ரு­வரும் ஒரே அறையில் தங்­கி­யுள்­ளதும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. இதனை விட கடந்த 29 ஆம் திகதி புதன் கிழமை அதி­காலை 12.15 மணிக்கும் 12.18 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் குறித்த நபர் குறித்த பெட்­டி­யுடன் தங்­கு­மி­டத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வது சீ.சீ.ரி.வி.கண்­கா­ணிப்பு கம­ராவில் பதி­வா­கி­யுள்­ளது. இந் நிலையில் குறித்த பெண் கொலை செய்­யப்­பட்­டி­ருப்பின் அது 28 ஆம் திகதி பின்­னி­ரவில் இடம்­பெற்­றி­ருக்க வேண்டும் என சந்­தே­கிக்கும் பொலிஸார் பயணப் பெட்­டி­யா­னது ஆள் நட­மாட்டம் இல்­லாத அதி­காலை வேளையிலேயே பஸ் தரிப்­பி­டத்தில் கைவி­டப்­பட்­டி­ருக்க வேண்டும் என சந்­தே­கிக்­கின்­றனர்.
கார்த்­தி­காவை கொலை செய்த நபர் அவரை பெட்­டியில் இட்டு தூரப் பிர­தேச பஸ் வண்­டி­யொன்றில் கைவிட்டுச் செல்லும் நோக்­கோடு பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலை­யத்­துக்கு வந்­தி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். அத்­துடன் அதிக நிறை கார­ண­மாக 15 ஆம் இலக்க அனு­ரா­த­புரம்–கொழும்பு பஸ் தரிப்பு இடத்­துக்கு அருகே அந்த பெட்டியின் சக்­கரம் ஒன்று உடைந்­துள்­ளதால் அதனை தொடர்ந்தும் தூக்கிச் செல்­வதில் எற்­பட்ட சிர­மத்­தை­ய­டுத்து அந்த பஸ் தரிப்பு நிலை­யத்­தி­லேயே சந்­தேக நபர் பெட்டியை விட்டுச் சென்­றி­ருக்­கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பெரும்பாலும் யாழ். நோக்கி பயணிக்கும் பஸ் வண்டியொன்றில் அப்பெட்டியை கைவிட்டு செல்வது சந்தேக நபரின் நோக்கமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந் நிலையில் நேற்று கொழும்புசட்ட வைத்திய அதிகாரி முன்னி லையில் கார்த்திகாவின் சடலம் மீது பிரேத பரிசோதனை ஒன்று முன் னெடுக்கப்பட்ட நிலையில் அதில்திறந்த தீர்ப்பொன்றே வழங்கப் பட்டது. துஷ்பிரயோகம் செய்யப்பட்டாரா எப்படி கொலை செய்யப் பட்டார் உயிரிழப்புக்கான காரணம்
ஆகியவை தொடர்பில் தெளி வற்ற நிலைமை இருந்ததால் சடலத்தின் பாகங்கள் மேலதிக இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. நேற்று மாலை வரை சந் தேக நபர் கைது செய்யப்பட்டிராத நிலையில் விசாரணைகள் தொடர்ந்தன.


Read More
avathani Media Network

தேர்தல் சட்டத்தை மீறிய 203 பேர் கைது ;பொலிஸ் தலைமையகம் தகவல்

தேர்தல் சட்­டங்­களை மீறி­னார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் 203 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் அறி­வித்­துள்­ளது.
தேர்தல் சட்ட மீறல் சம்­ப­வங்கள் தொடர்பில் பொலிஸ் தலை­மை­ய­கத்­திற்கு கிடைக்­கப்­பெற்ற 86 முறைப்­பா­டு­க­ளுக்­க­மைய சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­வதா­கவும் பொலிஸ் தலை­மை­யகம் அறி­வித்­துள்­ளது.
அத்­துடன் மாத்­தறை அக்­கு­ரஸ்ஸ பகு­தியில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் இருவர் சுவ­ரொட்­டி­களை ஒட்டிக் கொண்­டி­ருக்கும் போது அவ் விடத்­திற்கு கெப் வாகனம் ஒன்றில் வந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் ஆத­ர­வா­ளர்கள் இவ் இரு­வ­ரையும் கடத்திச்சென்ற சம்­பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு அறி­வித்­துள்­ளது.
இச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய 06 இளை­ஞர்கள் தொடர்­பிலும் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் ஊட­கப்­பி­ரிவு அறி­வித்­துள்­ளது.
மட்­டக்­க­ளப்பில்
இதே­வே­ளை மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி மற்றும் ஆரை­யம்­பதி பகு­தி­களில் தேர்தல் சட்­டங்­களை மீறும் வகையில் வேட்­பா­ளர்­களின் உரு­வப்­ப­டங்­களை கொண்ட சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டுள்­ள­தாக பெப்ரல் அமைப்பின் காத்­தான்­குடி மற்றும் ஆரை­யம்­பதி பிர­தே­சங்­க­ளுக்­கான இணைப்­பாளர் எம்.ஐ.எம்.ஹரீஸ் தெரி­வித்தார்.
இது தொடர்பில் பொது­மக்கள் சிலர் தமது அமைப்­புக்கு முறைப்­பா­டு­களை செய்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.
இப் பிர­தே­சங்­களில் வீடு வீடாக பிர­சா­ரத்­துக்கு செல்லும் வேட்­பா­ளர்­களின் ஆத­ர­வா­ளர்கள் வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளிடம் அனு­மதி பெறாமல் வேட்­பா­ளர்­களின் தேர்தல் பிர­சார சுவ­ரொட்­டி­களை வீட்­டுச்­சு­வர்­களில் ஒட்­டு­வ­தா­கவும் சிலர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்த அவர் இது தவிர இப்பிரதேசங்களில் பாரிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
Read More
avathani Media Network

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரிப்பு!

கொட்டாஞ்சேனை புளூமென்டல் வீதியில் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில், பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் மரணமாகியுள்ளார்.
அதேவேளை, மேலும் 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், கொழும்பு தேசிய மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தாக்குதல் நடத்தி விட்டு இரண்டு வாகனங்களில் தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க பொலிஸாருடன் இணைந்து, படையினரும், தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
Read More