Featured Home (TOP)

Recent Comments

Friday, August 14, 2015

avathani Media Network

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் யாரை ஆதரிக்க வேண்டும்?

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்)

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் யாரை ஆதரிக்க வேண்டும்?
NTJயுடன் சகோதரர் MLAM ஹிஸ்புல்லாஹ் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அவரே முறித்துக் கொண்டாரா?

அன்புள்ள சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்!

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சகோதரர்களான MLAM ஹிஸ்புல்லாஹ், MM. அப்துர்ரஹ்மான், M.F.M. சிப்லி பாறூக், M.S.M. ஷாபி, ALM றூபி ஆகியோருடன் 43 நிபந்தனைகள் கொண்ட ஓர் ஒப்பந்தம் எம்மால் செய்யப்பட்டதை தாங்கள் நன்கறிவீர்கள்.

அவ்வொப்பந்தம் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் பௌதீக நலன் சார்ந்த ஒப்பந்தமல்ல. அதாவது பள்ளி கட்டித் தர வேண்டுமென்றோ, எமது ஜமாஅத்திற்கு சுற்று மதில் அமைத்துத் தர வேண்டுமென்றோ, உலமாக்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்க வேண்டுமென்றோ நாம் ஒப்பந்தம் செய்யவில்லை! அல்லாஹ்வின் அருளால் நமது ஒப்பந்தத்தைச் சரியாகப் படிக்கும் எவரும் 'எமது ஒப்பந்தம் தேர்தலுக்கான சந்தர்ப்பவாத ஒப்பந்தமல்ல' என்பதையும், சுகபோக அரசியலை ஒழித்து உரிமை அரசியலை நிலை நிறுத்தும் அறிவுபூர்வமான ஒப்பந்தம் என்பதையும் இலகுவில் புரிந்து கொள்வார். அல்ஹம்துலில்லாஹ்.

ஒப்பந்தம் ஏற்படுத்திய ஓர் மறுமலர்ச்சி!

தேர்தல் காலம் வந்து விட்டால் அரசியல்வாதிகள் இசை கலந்த பாடல்களை ஒலிபரப்புவது அனைவரும் அறிந்ததே! இஸ்லாம் ஹராமாக்கிய இந்த இசைக் கலாச்சாரத்தை அரசியல்வாதிகள் முற்றாக கைவிட வேண்டுமெனும் நன்நோக்கில் நமது ஒப்பந்தத்தில் முதலாம் விதி நான்காவது ஷரத்தில் 'தங்களின் தேர்தல் பிரச்சார விளம்பரங்களிலோ அல்லது பிரச்சார மேடைகளிலோ இசையுடன் கலந்த பாடல்கள் ஒலிபரப்பப்படுவதை தாங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.' எனும் நிபந்தனையை விதித்திருந்தோம். 

அதனை ஒப்புக் கொண்டு கைச்சாத்திட்ட அரசியல்வாதிகள் தங்களது தேர்தல் மேடைகளில் இசையுள்ள பாடல்களைத் தவிர்த்து விட்டு கிராஅத், கஸீதா போன்றவற்றை ஒலிபரப்பியதை தாங்கள் அவதானித்திருப்பீர்கள். (சில அரசியல்வாதிகளால் இசைக் கட்டுப்பாடு அவ்வப்போது மீறப்பட்டு சீர்செய்யப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது) 

கடந்த 03.08.2015, 04.08.2015 ஆகிய இரு திகதிகளில் மேற்கண்ட அரசியல்வாதிகளுடன் நாம் செய்த ஒப்பந்தம் 'சரியாகப் பேணப்படுகின்றதா? அல்லது வரம்பு மீறப்படுகின்றதா?' என்பதைக் கண்காணிக்க 11 பேர் கொண்ட ஒரு குழுவை நாம் நியமனம் செய்தோம்.

கண்காணிப்புக் குழு தெரிவித்ததென்ன?

ஒப்பந்தம் செய்த அரசியல்வாதிகள் மேடைக்கு மேடை மாறி மாறி ஒருவர் மீறு மற்றவர் குற்றம் சுமத்தும் கைங்கரியம் நடந்தேறி வருவதாக எமது கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர். நமது ஒப்பந்தத்தில் முதலாவது விதி ஏழாவது ஷரத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பது தொடர்பில் பின்வருமாறு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 

அதாவது 'பிற அரசியல்வாதிகள் மீதோ, அரசியல் கட்சிகளின் மீதோ ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தாங்கள் சுமத்தக் கூடாது. குற்றச்சாட்டைக் கூறி விட்டால் தகுந்த சான்றுகள் மூலம் அதை நிரூபணம் செய்ய முன்வர வேண்டும்'

இந்த ஷரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நேருக்கு நேர் முன்வைத்து நிரூபிக்கும் அமர்வொன்றை நாம் ஏற்பாடு செய்தோம்.

இந்த அமர்வு கடந்த 13.08.2015 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு தலைமையகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது. குற்றம் சுமத்தும் அரசியல்வாதிகள் அனைவரையும் ஒரு மேசைக்குக் கொண்டு வந்து பின்னர் நேருக்கு நேர் வைத்து குற்றச்சாட்டுக்களை எடுத்துச் சொல்லி அதனை நிறூபிக்குமாறு சொல்வதுதான் ஆரோக்கியமானதும், அறிவுபூர்வமானதும், மார்க்கம் சொல்லும் அழகிய வழிமுறையுமாகும்.

இதற்கான அழைப்புக் கடிதம் 10.08.2015 அன்று சகோதரர் ஆ.டு.யு.ஆ. ஹிஸ்புல்லாஹ், சகோதரர் ஆ.ஆ. அப்துர் ரஹ்மான், சகோதரர் ஆ.கு.ஆ. சிப்லி பாறூக் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 'பிற அரசியல்வாதிகள் மீது தாங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் தாங்கள் ' பிரதானமானது' எனக் கருதும் மூன்று குற்றச்சாட்டுக்களை எழுத்தில் முன்கூட்டித் தருமாரும், அதிலிருந்து இரண்டு நாள் கழித்து அதாவது 13ம் திகதி ' நிறூபிக்கும் அமர்வுக்கு' உதவியாளர் ஒருவரை அழைத்து வருமாறும் கோரி கடிதங்களை அனுப்பி வைத்தோம்.

ஒப்பந்தம் செய்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்?

சகோதரர் ஆ.கு.ஆ. ஷிப்லி பாரூக் மற்றும் சகோதரர் ஆ.ஆ. அப்துர் ரஹ்மான் ஆகியோர் 'இந்நிகழ்வு வரவேற்கத்தக்கதென்றும், நாம் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை அவருக்கு முன்னால் எடுத்து வைத்து அதனை நிரூபிக்கத் தயார் என்றும், எம்மீது அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்களுக்கு எம்மால் பதில் சொல்ல முடியுமெனவும் கூறி குற்றச்சாட்டுப் பட்டியலுடன்' பதில் கடிதங்களை அனுப்பி வைத்தனர்.
ஆனால் சகோதரர் ஆ.டு.யு.ஆ. ஹிஸ்புல்லாஹ்வோ '13ம் திகதி தனக்கு தேர்தல் பணிகள் அதிகம் இருப்பதால் தன்னால் நிரூபிக்கும் மேசைக்கு வர முடியாது' எனக் கூறி ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். 

அதற்கு 11.08.2015 அன்று நாம் நியாயமான 07 கேள்விகளை முன்வைத்து பதில் கடிதமொன்றை அனுப்பி வைத்தோம். அதற்கு அவர் பதில் சொல்லவுமில்லை! 'குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் அமர்வுக்கு' வரவுமில்லை!

நாம் முன்வைத்த அடுக்கடுக்கான 07 கேள்விகள் இதுதான்!

01. 'குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் அமர்வுக்கு வருகை தர தனக்கு நேரமில்லை' எனக் கூறுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை! காரணம் கடந்த 14.08.2015 அன்று நீங்கள் எம்மோடு செய்து கொண்ட அரசியல் ஒப்பந்தத்தில் 'பிற அரசியல்வாதிகள் மீதோ, அரசியல் கட்சிகளின் மீதோ ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தான் சுமத்தமாட்டேன் என்றும், குற்றச்சாட்டைக் கூறி விட்டால் தகுந்த சான்றுகள் மூலம் அதை நிரூபணம் செய்ய முன்வருவேன் எனவும் கூறி கையெழுத்திட்டுள்ளீர்கள். இவ்வாறு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு விட்டு 'எனக்கு நேரமில்லை' எனக் கூறுவது ஒப்பந்த மோசடியாக உங்களுக்குத் தெரியவில்லையா?

02. மேடைக்கு மேடை பிற அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுக்களைச் சொல்ல நேரம் எடுக்கும் நீங்கள், அதை நிரூபிக்க அழைக்கும் போது மட்டும் 'நேரமில்லை' எனக் கூறுவது உங்கள் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதைக் காட்டாதா?

03. குற்றச்சாட்டுக்களை நிறூபிக்கும் அமர்வுக்கு வருகை தருமாறு கூறி நாம் உங்களுக்கு கடிதம் அனுப்பியதைப் போன்றுதான் சகோதரர் ஆ.ஆ. அப்துர் ரஹ்மான் மற்றும் சகோதரர் ஆ.கு.ஆ. ஷிப்லி பாரூக் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியிருந்தோம். அவர்களோ இந்நிகழ்வுக்கு வருகை தர தமக்கு முழு சம்மதம் எனக் கூறி பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். நீங்கள் மாத்திரம் தான் 'தேர்தல் பணிகள் அதிகம் இருப்பதால் எனக்கு நேரமில்லை' எனக் கூறுகிறீர்கள். அப்படியாயின் சகோதரர் ஷிப்லிக்கும், சகோதரர் அப்துர் ரஹ்மானுக்கும் தேர்தல் பணிகள் இல்லையா? உங்களுக்கு மட்டும் தான் தேர்தல் பணிகள் இருக்கிறதா?

04. 'தேர்தல் பணிகள் அதிகம் இருப்பதால் எனக்கு நேரமில்லை' எனக் கூறுகிறீர்கள்! குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதை விட அப்படியென்ன தேர்தல் பணி உங்களுக்கு இருக்கிறது? எனக் கேட்க விரும்பிகிறோம்.

05. 'அதிகமான தேர்தல் பணிகளில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் 13ம் திகதி நேரடியாக தங்களின் மேசைக்கு என்னால் வர முடியாது' எனக் கூறுகிறீர்கள்! 13ம் திகதிதான் உங்களுக்கு வர முடியாவிட்டாலும் 12ம் திகதி அல்லது 14ம் திகதியாவது வருவேன் எனக் கூறலாமல்லவா?

06. எம்முடன் அரசியல் ஒப்பந்தம் செய்து கொள்ள நேரம் ஒதுக்கிய நீங்கள், அந்த ஒப்பந்தத்தில் உள்ளபடி 'குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க' மட்டும் நேரம் ஒதுக்கத் தயங்குவதேன்?

07. 'தேர்தல் பணிகள் அதிகம் இருப்பதால் என்னால் நிரூபிக்கும் மேசைக்கு வர முடியாது' எனக் கூறுகிறீர்கள். நமது நிகழ்வோ 13ம் திகதி காலை 09.00 மணியிலிருந்து நன்பகல் 12.00 மணி வரைதான்!!! வெறும் மூன்று மணித்தியால நிகழ்வொன்றுக்கு அதுவும் காலை நேரத்தில் வருகை தர முடியாமல் உங்களைத் தடுத்து நிறுத்தும் தேர்தல் பணியென்ன?

சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களே!

பிற அரசியல்வாதிகள் மீது பாமர மக்கள் மத்தியில் தைரியமாகக் குற்றம் சுமத்தும் நீங்கள் அந்த அரசியல்வாதிகளுக்கு முன்னால் வந்து குற்றம் சுமத்தத் தயங்கக் கூடாது! குற்றம் சுமத்துபவர்களை நிரூபிக்க வருமாறு அழைக்கும் போது 'தனக்கு நேரமில்லை', 'வேலைப்பழுவாக இருக்கிறது', 'களைப்பாக இருக்கின்றது' என்றெல்லாம் கூறி நழுவுவது அவதூறு செல்பவர்களின் வழக்கமாகும்.

சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களே!

அவதூறு சொல்வது இலேசுபட்ட பாவமல்ல. 80 கசைடிகளுக்குத் தகுதியான பாவமாகும். அற்ப அரசியல் சுக போகத்திற்காக யாரும் யார் மீதும் அவதூறு சொல்லக் கூடாது! நீங்கள் மேடைகள் தோறும் பாமர மக்களிடம் கூறி வரும் குற்றச்சாட்டுக்களை உலமாக்களான எங்களுக்கும், நீங்கள் குற்றம் சுமத்தும் நபர்களுக்கும் மத்தியில் முன்வையுங்கள்! என்றுதான் அழைக்கிறோம்.
அல்லாஹ் கூறுகிறான்: 'நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தைச் செய்ததாகக் கூறி துன்புறுத்துகிறார்களோ அத்தகையவர்கள் அவதூறையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொண்டனர்' (அல்குர்ஆன் 33:58)

சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களே!

'நேரமில்லை' என்ற உங்கள் முடிவைப் பரிசீலியுங்கள்! இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 13ம் திகதி (வியாழக்கிழமை) அன்று குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் எமது நிகழ்வுக்கு தாங்கள் வருகை தராமல் விட்டால் உங்களுடனான ஒப்பந்தம் ரத்தாகி விடுவதுடன், உங்களுக்கான எமது ஆதரவை பகிரங்கமாக விலக்கிக் கொள்வோம். அத்துடன் எக்காலத்திலும் உங்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்யமாட்டோம் எனச் சொல்லி வைக்க விரும்புகிறேம்.

அன்புள்ள சகோதரர்களே!

நாம் குறிப்பிட்ட அந்த 13ம் திகதி (நேற்று) குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் மேசைக்கு சகோதரர் ஆ.கு.ஆ. ஷிப்லி பாரூக் அவர்களும், சகோதரர் ஆ.ஆ. அப்துர் ரஹ்மான் அவர்களும் தான் வருகை தந்தனர். சகோதரர் ஆ.டு.யு.ஆ. ஹிஸ்புல்லாஹ்வோ வருகை தரவில்லை! வேறு திகதிகளைக் குறிப்பிட்டு பதில் கடிதம் அனுப்பவுமில்லை!

மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும் எனும் பொய்யா மொழிக்கு ஏற்ப அவரிடம் உண்மை இருந்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பார். ஆனால் வரவில்லை. ஆதலால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஆ.டு.யு.ஆ. ஹிஸ்புல்லாஹ் குறித்து கீழ்காணும் நிலைப்பாடை எடுத்து பகிரங்கமாக அறிவிக்கின்றது.

01. ஹிஸ்புல்லாஹ் ஆதாரமில்லாமல் பிறர் மீது அவதூறு சொல்பவர் என்றும்,
02. பொருளாதார விடயங்களில் மோசடி செய்பவர் என்றும்,
03. விமர்சனங்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு பதில் சொல்லத் திராணியற்றவர் என்றும்,
04. ,வருக்கு வாக்களிப்பது அநியாயத்திற்குத் துணை போவதென்றும்,
05. ஒப்பந்த மோசடி செய்த ,வருடன் ஒரு காலத்திலும் Nவுது மீள் ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என்றும் பகிரங்கமாக அறிவித்துக் கொள்கிறோம்.

அன்புள்ள சகோதர, சகோதரிகளே!

ஒப்பந்த மோசடி செய்த ஹிஸ்புல்லாஹ்வுக்கு நீங்கள் வாக்களிக்காமல் ஒப்பந்தங்களைப் பேணி வரும் சகோதரர்களான ஆ.ஆ. அப்துர்ரஹ்மான், ஆ.கு.ஆ. சிப்லி பாறூக், ஆ.ளு.ஆ. ஷாபி யு.டு.ஆ றூபி ஆகியோரில் 'தாங்கள் விரும்பியோருக்கு வாக்களிக்க முடியுமென' கூறிக் கொள்கிறோம்.

தற்போது நமது ஒப்பந்தத்தைப் பேணி வரும் மேற்கண்ட சகோதரர்கள் ஒப்பந்த விதிகளை வரம்பு மீறும் வகையில் நடந்து கொண்டால் அவர்களுடனும் எமது ஒப்பந்த உறவை ரத்துச் செய்வதில் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம். அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்: 'நீங்கள் நலவுக்கும், இறையச்சத்திற்கும் பரஸ்பரம் உதவியாக இருங்கள். பாவத்திற்கும், எல்லை கடந்து செல்வதற்கும் துணையாக இருக்காதீர்கள்.' (அல்குர்ஆன் 5:2)

அல்லாஹ் கூறுகிறான்: 'முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்;! (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்!) ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்;. எனவே நியாயம் வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்;! மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்' (திருக்குர்ஆன் 04:135)

'இன்ஷாஅல்லாஹ் இன்று 14.08.2015 (வெள்ளிக்கிழமை) சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இணைந்து ஏற்பாடு செய்யும், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு திரையில் காண்பிக்கப்படும்.

வெளியீடு:
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ)
296, மீன்பிடி இலாகா வீதி, புதிய காத்தான்குடி - 03.
14.08.2015





Read More
avathani Media Network

மட்டு மாவட்டத்தில் SLMC+NFGG கூட்டணி மரச்சின்னம் 2ஆம் இலக்கத்தில் போட்டியிடும் பொறியியலாளரின் அப்துர் ரஹ்மானின் கடிதம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு.கா + ந.தே.மு கூட்டணியில் 2ம் இலக்க வேட்பாளராகப் போட்டியிடும் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் இம்மாவட்ட வாக்காளர்களின் கவனத்திற்கு வெளியிட்டிருக்கும் கடிதம்

நன்றி- புவி றஹ்மத்துல்லாஹ்


Read More
avathani Media Network

இறுதித் தீர்மானத்திற்கு வந்துவிட்டோம்! நீங்களும் தீர்;ப்பெழுத முன்வாருங்கள்!! ஐக்கிய மக்கள் ஒன்றியம் வெளியிட்ட பிரசுரம்:

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்)

காத்தான்குடி ஐக்கிய மக்கள் ஒன்றியம் இன்று (14.08.2015) ஜும்ஆவின்போது வெளியிட்ட பிரசுரம்:

அழ்ழாஹ்வின் பாதையில் ஒன்றுபடுவோம் - 03

இறுதித் தீர்மானத்திற்கு வந்துவிட்டோம்! நீங்களும் தீர்;ப்பெழுத முன்வாருங்கள்!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அழ்ழாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றோம்.
அன்புக்கும், மதிப்புக்கும் உரிய காத்தான்குடி வாழ் உலமாக்களே, கல்விமான்களே, பெரியார்களே, நண்பர்களே, மற்றும் வாக்காளப் பெருமக்களே! அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபறகாதுஹு.

கடந்த 2015.05.29ம் திகதி நாம் வெளியிட்ட எமது 2வது பிரசுரத்தைத் தொடர்ந்து சுமார் 75 தினங்களின் பின்னர் இன்று இந்த 3வது பிரசுரம் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்வடைகிறோம். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த இடைப்பட்ட காலத்தில் நமது காத்தான்குடி மண்ணில் இலங்கை முஸ்லிம்களின் வரலாறைப் பேணும் வகையில் நிறுவப்பட்டுள்ள நூதனசாலை தொடர்பாக எமது ஐக்கிய மக்கள் ஒன்றியம் சமய, சமூக அக்கறையுடன் முன்னெடுத்த விடயங்கள் பற்றியும், தற்போது அவ்விவகாரம் தொடர்பில் நாம் மேற்கொண்டிருக்கும் இறுதித் தீர்மானம் மற்றும் எதிர்பார்ப்புக்கள் குறித்தும் எமது மக்களோடு உரையாடிக் கொள்வதே இப்பிரசுர வெளியீட்டின் நோக்கமாகும்.

எமது 2வது பிரசுரம் வெளியிட்டதையடுத்து, இந்த நூதனசாலையின் நிறுவுனரும், முன்னாள் பிரதியமைச்சருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கும், எமது ஒன்றியத்தின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. 
இச்சந்திப்பையடுத்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த நாம், முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுடன் இந்நூதனசாலை விடயமாகப் பேசப்பட்ட விடயங்கள் பற்றியும், அப்பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்தும் பகிரங்கமாக விளக்கமளித்தோம்.

இதன் மூலம் இவ்விவகாரம் தொடர்பாக எமக்கும், முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விபரங்களை பொதுமக்களான நீங்கள் அனைவரும் மிகவும் தெளிவாகத் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்றே நம்புகின்றோம்.
குறிப்பாக, இந்த நூதனசாலையில் நிறுவப்பட்டுள்ள உருவச்சிலைகள் தொடர்பாக நமது காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையையும், எமதூரிலுள்ள 'தஃவா' அமைப்புக்களையும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை உட்பட முஸ்லிம் சமூகத்தின் கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் எவரையும் கருத்திற்கொள்ளாமல் புறந்தள்ளிவிட்டு, சர்வதேச உலமாக்களைக் கொண்டு தான் முன்னெடுத்த இந்த நூதனசாலை உருவச்சிலைகள் விடயத்தில் தீர்;வைத் திணிக்க முற்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள், எமது 02வது பிரசுர வெளியீடு மற்றும் எம்முடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தனது பிடிவாதமான கடும்போக்கிலிருந்து இறங்கி வர நேரிட்டது என்பதை இவ்விடத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அதாவது, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்து இந்த நூதனசாலையைப் பார்வையிடச் செய்வதற்கும், அவர்கள் சுட்டிக்காட்டுகின்ற உருவச்சிலைகளை அதிலிருந்து அப்புறப்படுத்துவதற்கும், உலமாக்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்நூதனசாலை விவகாரத்தில் எதிர்காலத்தில் செயற்படுவதற்கும் அவர் இணங்கினார்.

அதன்படி அவர் அ.இ.ஜ.உ. பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்க, அவர்களும் எமதூருக்கு வருகை தந்து இந்நூதனசாலையைப் பார்வையிட்டு தமது ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தனர். கல்வி கற்கும் நோக்கத்திற்காக இங்கு வைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகளை அப்புறப்படுத்தி விட்டு, அதற்குப் பதிலாக டிஜிட்டல் முறையிலான காட்சிப் படங்களை வைக்குமாறு உலமாக்கள் ஆலோசனை தெரிவித்திருந்தனர்.

உலமாக்களின் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு அவ்வாறே நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்த சகோதரர் ஹிஸ்புழ்ழாஹ், அவ்வாறான மாற்றம் ஏற்படுத்தப்படும் வரை பொதுமக்கள் பார்வையிடுவதைத் தடுத்து இந்த நூதனசாலையைத் தாம் மூடி வைப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி தற்போது வரை இந்த நூதனசாலையானது மூடப்பட்டிருப்பதை நாமனைவரும் அறிவோம்.
இதனடிப்படையில் எமது 2வது பிரசுரத்தில் நாம் முன்வைத்த நமது உலமாக்களினதும், மக்களினதும் மன ஆதங்கத்திற்கு இடைக்காலத் தீர்;வொன்று கிட்டியிருக்கின்ற போதிலும், இந்த விடயத்தில் எமது உலமாக்களினதும், மக்களினதும் ஈமானிய உள்ளங்கள் நீறு பூத்த நெருப்பாகவே இன்னமும் கணன்று கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

மேற்சொல்லப்பட்ட நடவடிக்கைகளை அடுத்து நம்மில் பலரது கவனங்களில் இருந்தும் இந்த நூதனசாலை விவகாரம் சற்று விலகிச் சென்றிருந்தாலும், எம்மைப் பொறுத்தவரை நாம் இவ்விடயத்தில் அதிகூடிய கரிசனையைத் தொடர்ந்து முன்னெடுத்தே வந்தோம்.

முன்னாள் பிரதியமைச்சருடனான எமது சந்திப்பைத் தொடர்ந்து எமக்கு எதிராகவும் சில விஷமத்தனமான கருத்துக்களை சிலர் கொண்டிருந்தபோதிலும், அவ்வாறான கருத்துக்களைப் பலருடன் பகிர்ந்து கொண்ட போதிலும் அவற்றையெல்லாம் அறிந்து நாம் இவ்விடயத்தில் சடைவடைந்து ஒதுங்கி விடாமல், தொடர்ந்தேச்சையாக சகோதரர். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுடன் தொடர்பு கொண்டு எமது மண்ணில் 'மூன்றாம் முஸீபத்'தாக முளைத்திருக்கும் இந்த உருவச்சிலைகளை அப்புறப்படுத்தும் விடயத்தில் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டே வந்தோம்.

இந்த இடத்தில் எமது ஊடக சந்திப்பின்போது நாம் இவ்வூர் மக்களிடமும், இலங்கை முஸ்லிம் சமூகத்திடமும், உலமாப் பெருமக்களிடமும, 'தஃவா' அமைப்புக்களுடனும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொண்டவாறு, இந்த உருவச்சிலைகள் விவகாரத்தை நாம் பொறுப்பேற்றுக் கையாள்வதற்குத் தீர்;மானித்துள்ளதால் இவ்விடயத்தை எவரும் கையிலெடுத்து விமர்சிக்காது பொறுமை காக்குமாறு வேண்டிக் கொண்டதற்கிணங்க, அன்றிலிருந்து இந்த விடயத்தை விமர்சிக்காமல் தவிர்த்து வந்த அனைவருக்கும் நாம் மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதற்கும் கடமைப்பட்டுள்ளோம்.

நாம் தொலைபேசி மூலம் அடிக்கடி சகோதரர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை இது விடயத்தில் தொடர்பு கொண்டு வலியுறுத்தி வந்த போதிலும், அவர் இங்குள்ள உருவச்சிலைகளை அகற்றுவதாயின் 45 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும், உலமாக்களின் ஆலோசனைப்படி டிஜிட்டல் படங்களை சைனாவிலிருந்தே தயாரித்துக் கொண்டு வர வேண்டும் என்றும் பல்வேறு காரணங்களைச் சொல்லி காலங்கடத்தி வந்தது, எமக்கு ஏமாற்றத்தையே அதிகரிக்கச் செய்தது.

நேற்று முன்தினம் 12ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவும் பல முறை நாம் இது விடயமாக அவருடன் பேச விரும்பித் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதிலும், அவரது தொடர்பு பின்னிரவு 02:30 மணி வரையில் எமக்குக் கிடைக்கவில்லை. எனவே நாம் இவ்விடயத்தில் அவருடன் மேலும் தொடர்பு கொள்ளும் முயற்சிப்பை முற்றாகக் கைகழுவிவிட்டு, இப்போது ஒரு இறுதித் தீர்மானத்திற்கு வந்துள்ளோம்.

எமது இறுதித் தீர்;மானம் இரண்டு உள்ளார்ந்த நோக்கங்களைக் கொண்டதாகும். 

முதலாவது, இந்த மண்ணின் 'மூன்றாவது முஸீபத்'தாக் உருவெடுத்துள்ள இந்த உருவச்சிலைகள் விவகாரத்திற்கு மார்க்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முக்கியத்துவம் கொடுத்து மிகக்குறுகிய காலத்தில் இந்த உருவச்சிலைகளை உலமாக்களின் ஆலோசனைக்கமைவாக அகற்றுவதற்கு தமது அரசியல் அதிகாரத்தை நூறுவீதமும் பயன்படுத்த பகிரங்கமாக முன்வரும் எமது பிரதேசத்தில் மக்கள் பிரதிநித்துவத்திற்கான ஆணைகளைக் கோரி நிற்கும் மாற்றுக்கட்சி வேட்பாளர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் நமது பூரண ஆதரவுகளைப் பகிரங்கமாகவே வழங்குவது.

இரண்டாவது, அவ்வாறு மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் இந்தப் பாரதூரமான விடயத்தைக் கையேற்பதற்கு முன்வராத பட்சத்தில், இந்த உருவச்சிலைகளுக்கும், இதனைக் கரிசனையில் எடுக்கத்தவறிய வேட்பாளர்களுக்கும் நூறு வீதம் எதிர்ப்பைத் தெரிவித்து இப்பொதுத்தேர்தலில் சுயேட்சைக்குழுவாக 'வாள்' சின்னத்தில் போட்டியிடும் எமது ஐக்கிய மக்கள் ஒன்றியத்திற்கு வாக்களிப்பது.

இந்த இரண்டு தீர்;மானங்களிலும், நமது மாவட்டத்தில் நமக்குக்கிடைக்கவிருக்கின்ற முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவமொன்று இழக்கப்படக்கூடாது என்பதற்கே நாம் முன்னுரிமையளிக்கின்றோம் என்பதனை இப்பிரதேச வாக்காளப் பெருமக்களும், வேட்பாளர்களும் நன்கு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எமது பிரதேச, மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பலதரப்பட்ட பிரச்சினைகளிலும் பார்க்க, எமது இஸ்லாமிய நகரில் இறைவனின் சாபம் இறங்குவதற்கு ஏதுவாக முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களினால் நிறுவப்பட்டுள்ள இந்த உருவச்சிலைகளை எமது மண்ணிலிருந்தும், எமது மக்களின் மனங்களில் இருந்தும் முற்று முழுதாக அகற்ற வேண்டியதே அதிமுக்கிய தேவையாகும் என்பதனையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எமது அரசியல் நலன்களுக்காகவோ, சுய இலாபங்களுக்காகவோ, எமது மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்யும் குறுகிய மனப்பாங்குடனோ நாம் மேற்சொல்லப்பட்ட இரண்டாவது தீர்;மானத்தை எடுக்கவில்லை. 
எமது மக்களால் வழங்கப்பட்ட அரசியல் அதிகாரத்தைக் கொண்டு, எமது மார்க்கத்தின் வழிகாட்டிகளான உலமாக்களின் ஆலோசனைகளைக் கருத்திற்கொள்ளாது புறந்தள்ளிவிட்டு, எதேச்சதிகாரமான முறையில் இந்த இஸ்லாமிய மணங்கமழும் மண்ணில் உருவச்சிலைகளை நிறுவியது மட்டுமல்லாமல், அவற்றைப் பகிரங்கமாகக் காட்சிப்படுத்துவதற்கும் அந்த அரசியல் அதிகாரத்தை ஆயுதமாகப் பாவித்த முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கு; இன்று எம்மிடம் கையளிக்கப்பட்டிருக்கின்ற, எதிர்வரும் 17ம் திகதியன்று 10 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகக்கூடிய அதே அரசியல் அதிகாரத்தைக் கொண்டு தகுந்த பதிலளிக்க வேண்டிய, படிப்பினை ஊட்ட வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. 

இன்றேல் இந்த மண்ணில் வாழுகின்ற நாம் ஒவ்வொருவரும் நாளை மறுமையில் அழ்ழாஹ்விடம் அவனது மார்க்கத்திற்கு எதிரான, எமது எதிர்கால சந்ததியினரை இணைவைப்பு எனும் கொடிய பாவத்தில் மிகத்தந்திரமாக வீழத்தச் செய்கின்ற இந்தச் சமய, சமூகத் துரோக அரசியலுக்கு அங்கீகாரம் அளித்த பாரிய குற்றச்சாட்டிற்கு நிச்சயம் உள்ளாவோம்.

அடுத்து, இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து ஆளாகி கல்வியறிவும், மார்க்க அறிவும் பெற்று எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தினதும், மாவட்டத்தினதும் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு ஆணை வழங்குமாறு கேட்டு நிற்கின்ற, சமய விழுமியங்களைப் பேணி எமது முஸ்லிம் சமூகத்தின்மீது அக்கறை கொண்டவர்கள் எனப் பிரச்சாரம் செய்து வருகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இருவரும் இந்த உருவச்சிலைகளை இந்த மண்ணிலிருந்து அகற்றுவதற்கு அயராதும், முழு மூச்சுடனும், தமது அரசியற்கட்சி மற்றும் மக்கள் சக்திகளை ஒன்று திரட்டியும் முயற்சிப்போம் என்ற முடிவுக்கு வந்து அந்த முடிவினை இப்பிரதேச மக்களுக்கு பகிரங்கமாகவும், கூட்டாகவும் மிக அவசரமாக தமது உத்தியோகப்பூர்வ இறுதிப்பிரச்சாரங்கள் முடிவடைவதற்கு முன்னால் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு அவர்களும் இந்த மார்க்கத்தின் சுமையை, எமது மக்கள் மீது முன்னாள் அரசியல் அதிகாரம் பெற்ற நம் சகோதரரால் வலிந்து திணிக்கப்பட்டுள்ள சுமையை ஏற்றுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுவார்களேயானால், மக்களாகிய நாம் எமது சத்திய சன்மார்க்கத்தின் மீதான ஐக்கியத்தையும், பற்றையும், பாசத்தையும், நாளை மறுமையில் அழ்ழாஹ்வின் பேரன்பையும், பெரும் அருளையும் பெற்றுக் கொள்ளும் ஒரே நோக்கத்தோடு எமது கையிலுள்ள வாக்காணைகளை நாம் 'லில்லாஹி - அழ்ழாஹ்வுக்காக' என்ற ஒரே எண்ணத்தோடு எமது (உங்களின்) ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் சின்னமான 'வாள்' சின்னத்திற்கு அளித்து நமது ஒட்டுமொத்த எதிர்ப்பினைத் தெரிவிக்க முன்வர வேண்டும்.

எமது கோரிக்கையானது, காசு பணமோ, பட்டம் பதவிகளோ, சொத்து சுகங்களோ அல்ல. எமது மண்ணில் நடப்பட்டுள்ள 'மூன்றாவது முஸீபத்'தை முற்று முழுதாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதுதான். இதற்காக நாம் இப்போது முன்வைத்துள்ள முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் தவிர்ந்த ஏனைய நமது பிரதேச வேட்பாளர்கள் இருவரும் ஒன்றிணைந்து ஒரே கட்சிச் சின்னத்தில் அரசியல் ஆணைகளைக் கேட்பது போல் இருவரும் ஒன்றிணைந்து எமது மக்களின் கோரிக்கை எனும் முதலாம் தரத்தில் முன்வைக்கும் இச்சுமையை தமது கழுத்துக்களில், தலைகளில் சுமப்பதற்கு முன்வருவார்கள் என்றால் நாமும் எமது முழுப்பலத்தையும், வளத்தையும், இந்த ஊர் மக்களையும் ஒன்று திரட்டி அவர்களுக்கு 'புதிய அரசியல் சக்தி'யை அளித்து எமது பிரதிநிதிகளாக அங்கீகரித்து ஆணைகளை ஆயிரமாயிரமாக மரச்சின்னத்திற்கும், அவர்களின் விருப்பு இலக்கங்களுக்கும் வழங்குவதில் எஞ்சிய இறுதி இரு தினங்களிலும் இராப்பகலாக கண் துஞ்சாது, ஊண் கொள்ளாது, ஓய்வை ஹறாமாக்கிக் கொண்டு ஊர் முழுக்க ஒருங்கிணைத்துச் செயற்பட உழைப்போம் என்பதை இத்தால் அழ்ழாஹ்வின் மாளிகையின் முன்னால் நின்று இப்பிரசுரம் மூலம் பிரகடனம் செய்கின்றோம்.

இன்னமும் நாம் பொய்யர்களின் பேச்சைக் கேட்பதற்குத் தயாரில்லை. ஏமாற்றுக்காரர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு பணிந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. நாம் வழங்கிய அரசியல் அதிகாரத்தை அழ்ழாஹ்வின் மார்க்கத்திலும் துஷ்பிரயோகம் செய்தவர்களுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளவேண்டிய எந்தத் தேவையும் எமக்கில்லை. இந்த உருவச்சிலைகள் விடயத்தில் இன்னமும் அடங்கிப்போக வேண்டிய நிலைமையும் எமக்கில்லை.

புறப்பட்டு விட்டோம்! தீர்;மானம் எடுத்து விட்டோம்! சக வேட்பாளர்களின் விருப்பறியக் காத்திருக்கின்றோம். நாளை விடிகின்ற பொழுது, இந்த ஊரில் சத்திய சன்மார்க்கத்தை உறுதிப்படுத்திய நாளாக விடிய வேண்டும்! அந்த உறுதிப்பாட்டுக்காக நாம் ஒவ்வொருவரும் என்ன விலையைக் கொடுப்பதற்கும் தயாராக வேண்டும். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவித்து இச்சமூகத்தை ஏய்த்துப் பிழைத்து அரசியல் ஜாம்பவான் என்ற அதிகார மமதையில் அரசியல் போதையில் ஆடியவர்களை வரும் 17ம் திகதி அதிகாலைப் பொழுதில் மீண்டும் ஒரு முறை இந்த மண்ணிலிருந்து 'காணமல் போனவர்'களாக நாம் பிரகடனம் செய்ய வேண்டும். 

எல்லாம் வல்ல அழ்ழாஹ் எமது தூய நோக்கங்களுக்கும், செயற்பாடுகளுக்கும் இம்மையிலும், மறுமையிலும் நற்கூலியை வழங்கியருள்வானாக என்று மாத்திரம் நாம் ஆதரவு வைக்கின்றோம்! அல்ஹம்துலில்லாஹ்!! அழ்ழாஹு அக்பர்!! வலில்லாஹில்ஹம்து!!




Read More
avathani Media Network

பிரதேசத்தை ஒற்றுமைப்படுத்துவோம் ஒற்றுமையாக இருப்போம் எனக் கூறும் முன்னாள் பிரதியமைச்சர் உள்ளுக்குள் இருந்து கழுத்தறுப்பு வேலைகளில் ஈடுபடுகின்றார்- பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

(எம்.எச்.எம்.அன்வர்)

பிரதேசத்தை ஒற்றுமைப்படுத்துவோம் ஒற்றுமையாக இருப்போம் எனக் கூறும் முன்னாள் பிரதியமைச்சர் உள்ளுக்குள் இருந்து கழுத்தறுப்பு வேலைகளில் ஈடுபடுகின்றார் இவ்வாறு தற்போது காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் சதுக்கத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5ம் இலக்க வேட்பாளர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்

அவர் மெலும் தெரிவிக்கையில்

NFGG+SLMC ஆகிய இரு கட்சிகள் இந்த தேர்தலில் இணைந்து ஒற்றுமையாக செயற்படுகின்றது அதைப் பொறுத்துக்கொள்ளாத சிலர் பிழையாக பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர் நாம் தெளிவாக அந்த விடயங்களைக் கையாளுகின்றோம் பிரதேசத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தி மக்களின் தேவைக்கிணங்க செயலாற்ற எண்ணியுள்ளோம்

காத்தான்குடி ஊர்வீதிக்கு நடுவில் உள்ள பகுதி இன்னும் கொந்தராத்து கொடுக்கப்பட வில்லை அவசரப்பட்டு சுவர்களை உடைத்திருந்தால் எமது நிலை என்ன சகோதரர்களே இது எமது முயற்சியாலேயே சுவர் உடைப்பு தடுக்கப்பட்டது 

இறைவன்தான் யாரை ஆட்சி செய்ய தீர்மானித்தானோ அதன்படி நடக்கும் எமது கையில் ஒன்றும் இல்லை அவ்வாறு எமது கையில்தான் உள்ளது என நம்பியிருந்தால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வென்றிருப்பார் 

எனவே சிறந்;த தலைமைத்துவத்தை தெரிவு செய்ய மரத்திற்கும் 5ம் மற்றும் 2ம் இலக்கத்திற்கும் வாக்களிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்வதாக ஷிப்லி பாறுக் மேலும் தனதுரையில் தெரிவித்தார்

Read More
avathani Media Network

நாம் அதிகாரத்திற்கு வந்ததும் காத்தான்குடியில் அமையப் பெற்றுள்ள நூதனசாலையை உலமாக்களின் வழிகாட்டலின் கீழ் திருத்தியமைக்கவுள்ளோம் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான்

(எம்.எச்.எம்.அன்வர்)

நாம் அதிகாரத்திற்கு வந்ததும் காத்தான்குடியில் அமையப் பெற்றுள்ள நூதனசாலையை உலமாக்களின் வழிகாட்டலின் கீழ் திருத்தியமைக்கவுள்ளோம்  இவ்வாறு தற்போது காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் சதுக்கத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 2ம் இலக்க வேட்பாளர் பொறியியலாளர் எம் எம். அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் 
முன்னாள் பொருளாதார அபிருத்தி பிரதியமைச்சரினால் அமைந்துள்ள நூதனசாலை முற்றிலும் உலமாக்களின் கருத்துக்களை கேட்காது அமைத்துவிட்டு தற்போது வெளிநாட்டு உலமாக்கள் அல்லது கொழும்பு உலமாக்களைக்கொண்டு வந்து பத்வா கேட்டுவிட்டு சிலையை அகற்றுவேன் எனத்தெரிவிக்கிறார் 
இது நடக்க முடியாத ஒரு செயலாகும் ஏனெனில் அங்கே இருக்கும் பொருட்களை அகற்ற முடியாது இன்ஷா அல்லஹ்  நாம் அதிகாரத்திற்கு வந்ததும் உலமாக்களின் வழிகாட்டலின் கீழ் அவற்றினை திருத்தியமைப்போம்

நேற்று நடாத்திய பெண்கள் மாநாடு வரலாறு காணாத பெரு வெற்றியாக மாறியுள்ளது முஸ்லிம் காங்கிரஸ் கூட இதற்கு முன்னர் நடாத்திய பெண்கள் மாநாடு இவ்வாறான சனத்திரள் இல்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முபீன் உறுதியளித்தள்ளார் முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் அவ்வாறான ஒரு மாநாட்டுக்கு சமூகம் தந்ததையிட்டு அல்ஹம்துலில்லாஹ் அவர்களை விழிப்படையச் செய்திருக்கிறோம் அதில் கிட்டத்தட்ட 5000 பெண்கள் கலந்துள்ளனர்

எங்களுக்காக பெண்கள் வீடு வீடாகச் சென்றும் கைக்குழந்தையோடு சென்றும் பிரச்சாரம் செய்கின்றனர் நாங்கள் அவர்களுக்கு எந்த கூலியும் கொடுப்பதில்லை இந்த புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏனைய அரசியல்வாதிகளுக்கும் ஏற்படுத்திக்காட்டியிருக்கிறோம்

நாங்கள்தான் பிழையானவர்களை தெரிவுசெய்கிறோம் பின்னர்தான் சிந்தனை செய்கிறோம் ஹிஸ்புல்லா  வானத்தில் இருந்துவந்தவரா அல்லது மன்னர் பரம்பரையா எனக் கேட்க விரும்புகிறேன் நாங்கள் தான் பிழையானவர்களை தெரிவு செய்தோம்  சகோதரர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்

வருகின்ற பாராளுமன்ரத்தில் ஒரு சிறந்த பாராளுமன்ற உறுப்பினரை தெரிவுசெய்யுங்கள் எமது மானம் மரியாதையை பாதுகாக்க உரிமையை பாதுகாக்க இந்த பிரதேசத்தை பாதுகாக்க சிறந்த தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ள எதிர்வரும் 18ம் திகதி மகிழ்ச்சியான ஒரு தேர்தல் முடிவாக அமைய மரத்திற்கும் 2ம் மற்றும் 5ம்இலக்கத்திற்கும் வாக்களித்து வெற்றிபெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக தனதுரையில் பொறியியலாளர் எம் எம். அப்துர்ரஹ்மான மேலும்  தெரிவித்தார்





Read More
avathani Media Network

பொதுத் தேர்தல் 2015 ஆய்வுக் கணிப்பீடுகள்

நாட்டில் மிகவும் முக்கியமான பொதுத் தேர்தல் ஒன்றை மக்கள் சந்திக்கவுள்ளார்கள். நாடு முழுவதும் இருந்து  196 எம்பிக்களை தெரிவு செய்வதற்கான மிகவும் பலமான போட்டி. 29 எம்பிக்கள் தேசியப்பட்டியல் மூலமாக 225 எம்பிக்கள் கொண்ட நாடாளுமன்றத் தேர்தல்.

இதில் மிகவும் உன்னிப்பாக பார்ககப்படும் விடயம் என்னெவெனில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தோல்வி கண்ட முன்னாள் நிறைவேற்று  ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ச இம்முறை பிரதமர் பதவியை இலக்கு வைத்து குருநாகலையில் போட்டியிடும் விடயமே.

மற்றது தமிழ்  கூட்டமைப்பு ஒரு பேரம் பேசும் சக்தியாக மாறக் கூடிய நிலையொன்று உள்ளது. அமையப் போகின்ற ஆட்சியில் தமிழ் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள்  இரண்டும் சேர்ந்து அல்லது தனித்தனியாக ஆட்சிப்பங்காளியாக உருவெடுக்கும் நிலை வரலாம்.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்னை கிடைக்காது என்று தெரிகிறது.ஆனாலும் ஏராளமான பணப்பட்டுவாடா சில இடங்களில் நடைபெற்று வருகின்றது.

ஐ.தே.க.         93-95 இடங்களையும் போனஷ்  ஆசனம் இல்லாமல்                               ஐ.ம.சு.கூ.        74-76 இடங்களையும் போனஷ்  ஆசனம் இல்லாமல்                             தமிழ் கூட்டமைப்பு  15-16 இடங்களையும் போனஷ்  ஆசனத்துடன்                           ஜே.வி.பி         10-11 இடங்களையும் போனஷ்  ஆசனத்துடன்                                         சரத் பொன்சேககா   2   இடங்களையும்  பெறலாம் என்றுஎதிர்பாக்கப்படுகின்றது.               மிகுதி ஆசனங்கள்  சிறிய கட்சிகளுக்கு  கிடைக்கின்றது. மு.கா. சின் மரச்சின்னம் மற்றும் மயில் சின்னம் போன்ற  சிறிய கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனம் பெறும்.
யாருக்கும் இங்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் தேர்தல் முடிந்தவுடன் மஹிந்த ராஜபக்ச ஆட்சி அமைக்க ஆசைப்பட்டு தமிழ்  கூட்டமைப்புத் தலைவர் சம்மந்தன் மற்றும் ஜே.வி.பி தலைவர் அனுருகுமார திசாநாயகாவுடனும் ஆகியோர்களுடன் மஹிந்தர் தொடர்பு கொண்டு ஆட்சி அமைப்பது சம்மந்தமாகவும் தனக்கு ஆதரவு வேண்டியும் பேசவுள்ளதாக ஒரு இரகசியத் தகவல் தெரிவிக்கின்றது. ஆனாலும் தமிழ் கூட்டமைபப்பைப் பொறுத்த மட்டில் எந்தவொரு நிலையிலும் மஹிந்தருக்கு ஆதரவளிக்காது என்பது மட்டும் உண்மை. 

அம்பாரை மாவட்டம்

எதிர்பார்க்ப்படும் செல்லுபடியான வாக்குகள்.340.000 ஒரு எம்பிக்குத் தேவையான ஆகக் குறைந்த வாக்குகள் சுமார் 57 ஆயிரம்  வாக்குகள் தேவைப்படும். இங்கு 6101ஸ்ரீ7 எம்பிக்கள் கொண்டது.  அந்த வகையில் ஐ.தே.க. ஆகக் கூடுதலாக 115.000 ஆயிரம் வாக்குகள் பெறலாம். காரணம் அம்பாரையில் முஸ்லிம்  காங்கிரஸ் ஐ,தே.கட்சியின் யானைச் சின்னத்தில் இணைந்து போட்டியிடுகின்றது, ஐ.மு.சு.கூ.105.000 வாக்குகள் பெறலாம்.தமிழ் கூட்டமைப்பு 54.000 வாக்குகளும் மயில் சின்னம் 34.000 வாக்குகளையும் பெறும் நிலையுள்ளது.

ஐ.தே.க.2101ஸ்ரீ-3 ,ஐ.மு.சு.கூ -2. ,தமிழ் கூட்டமைப்பு -1 ,மயில் சின்னம் -1 பெறும் நிலை உள்ளது. மயில் சின்னத்திற்கு வாக்களிப்பு வீதம் குறையுமானால் அத்துடன் 5 வீத வெட்டுப்புள்ளியில் பாதிப்பு வருமனால் ஐ.தே.க. 4 ஆசனம் பெறும் .அனால் அம்பாரை மாவட்டத்தில் சிங்கள முஸ்லிம் வேட்பாளர்களிடத்தில் அதிகளவு மனாப்பை போட்டியுள்ளதால் யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களிடத்தில் பாரிய சிக்கல் உள்ளது. இதேவேளை வெற்றிலைச் சின்னத்திக்கு சுமார் 8 ஆயிரம் வாக்குகள் அதிகரித்து மயில் சின்னத்துக்கு வாகக்ளிப்பு வீதம் அதிகரிக்குமானால் வெற்றிலை போனஷ் ஆசனத்தக் கைப்பற்றக் கூடிய நிலையுள்ளது. இங்கு சராசரியாக 70 வீதமான வாக்களிப்பை எதிர்பார்க்கலாம். அதிலும் விசேடமாக அம்பாரை மாவட்ட முஸ்லிம் பகுதிகளில் 70 வீதமான வாக்களிப்பை காணலாம். ஆனால் தமிழ் பகுதிகளில் 56 விதமான வாக்களிப்புதான் நடைபெறலாம். அம்பாரை மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பாக தயாகமகே. தயாரட்ன ஆகியோரும்  வெற்றிலை சார்பாக அதாவுல்லாவும்,விமலவீர திசாநாயகவும்  வெற்றியடையும் நிலையுள்ளது.                

மட்டக்களப்பு மாவட்டம் 

எதிர்பார்க்ப்படும் செல்லுபடியான வாக்குகள். 240.000 ஒரு எம்பிக்குத் தேவையான ஆகக் குறைந்த வாக்குகள் சுமார் 60 ஆயிரம்  வாக்குகள் தேவைப்படும். இங்கு 4101ஸ்ரீ5 எம்பிக்கள் கொண்டது. அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டடைப்பு ஆகக் கூடுதலாக 135.000 ஆயிரம் வாக்குகள் பெறலாம் .ஐ.தே.க. 32.000 ஐ.மு.சு.கூ..30.000 வாக்குகள் பெறலாம்.முஸ்லிம் காங்கிரஸ்-23.000,சுயேட்சைக் குழுக்கள் சுமார் 20.000 ஆயிரம் பெறலம். காரணம் இலங்கையில் மிகவும் நீளமான வாக்கு சீட்டு மட்டக்களப்பில்தான் அமைந்துள்ளது. காரணம் தமிழ் மக்களின் வாக்கைச் சிதறவைக்க வாக்குச் சிதறலை உருவாக்க, தமிழ் வாக்கைப் பிரிக்க, தமிழ் மக்களின் வாக்குகள் தமிழ் கூட்டமைப்புக்கு அளிக்கப்படுவதைத் தடுக்க 32 சுயேட்சக் குழுக்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. அதன் மூலமாக தமிழ் கூட்டமைப்புக்குச் சொந்தமான சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை இந்த சுயேட்சைக் குழுக்கள் பிரிக்கின்றது. அதனால் தமிழ் கூட்டமைப்பின் மட்டக்களப்பில் தனது ஒரு எம்பி ஆசனத்தை இழக்கின்றது. மற்றும் ஐ.தே.க. மற்றும் மஹிந்தர் அணி கொண்ட வெற்றிலைச் சின்னம் (ஐ.ம.சு.கூ) ஆகிய இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் சுமார் 15 ஆயிரம் தமிழ் வாக்குகளைப் பிரிக்கின்றது. இங்கு  பிரதான கட்சிகளாக தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ்.ஐ,தே.க.மற்றும் மஹிந்தர் அணி கொண்ட ஐ.மு.சு.கூ .ஆகிய கட்சிகள் தனித்தனியாக மோதுகின்றன. தமிழ் கூட்டமைப்பு 150.000 க்கும் அதிகமான வாக்குகள் பெறுமானால் கூட்டமைப்பு 4 எம்பிக்கள் பெறலாம். தமிழ் கூட்டமைப்பு 2101ஸ்ரீ3, ஐ.தே.க.-1 ,ஐ.மு.சு.கூ-1 , இங்கும் அம்பாரை போன்று முஸ்லிம் பகுதிகளில் 67 வீதமான வாக்களிப்பையும் தமிழ் பகுதிகளில் 57 வீதமான வாக்களிப்பையும் எதிர்பார்க்கலாம். மட்டக்களப்பில் கூட்டமைப்பு  சார்பாக பொன்.செல்வராஜா மற்றும் புதியவர் ஓய்வு பெற்ற கல்வியதிகாரி ஸ்ரீ.நேசன்  ஆகியோரும்  வெற்றிலை  சார்பாக ஹிஸ்புல்லாவும் .ஐ.தே.க. சார்பாக அமீர் அலியும் வெற்றியடையும் நிலையுள்ளது. பிள்ளயானுக்கு மஹிந்தர் சார்பாக தேசியப் பட்டியல் எம்.பி.வழங்கப்படவுள்ளது. வெற்றிலையில்  ஹிஸ்புல்லா வெற்றியடையவில்லையென்றால் மு.கா சார்பாக அலி ஸாஹீர் மௌலானா வெற்றி பெறலாம்

திருகோணமலை மாவட்டம்

எதிர்பார்க்ப்படும் செல்லுபடியான வாக்குகள்.175.000 ஒரு எம்பிக்குத் தேவையான ஆகக் குறைந்த வாக்குகள் சுமார் 58 ஆயிரம்  வாக்குகள் தேவைப்படும். இங்கு 3101ஸ்ரீ4 எம்பிக்கள் கொண்டது. இங்கு ஐ,தே.க.யும் மு.கா.கட்சியும் இணைந்து யானைச் சின்னத்தில் போடட்டியிடுகின்றன. மற்றும் பிரதான கட்சிகளான தமிழ் கூட்டமைப்பு  ஐ.ம.சு.கூ.ஆகியன போட்டியிடுகின்றன

அந்த வகையில் ஐ.தே.க. ஆகக் கூடுதலாக 70 ஆயிரம் வாக்குகளும் தமிழ் தேசியக் கூட்டடைப்பு ஆகக் கூடுதலாக 51.000 ஆயிரம் வாக்குகள் பெறலாம் ஐ.மு.சு.கூ..40.000 வாக்குகள் பெறலாம். ஜே.வி.பி.கிண்ணியா ஒட்டகம் சரத் பொன்சேகா மற்றும் சுயேட்சைக்  குழுக்கள் 13.000 வாக்குகள் பெறலாம். இங்கு தமிழ் கூட்டமைப்பும் மஹிந்தவின் ஐ.ம.சு.கூ.கட்சியும் தங்களின் வாக்கு வீதத்தை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. அப்படியான  நிலை உருவானால் ஐ.தே.க. யின் 70 ஆயிரம் என்ற வாக்கு அதிகரிக்கலாம். அதாவது இங்கு எதிர்பாா்க்கப்படும் செல்லுபடியான 175.000 வாக்குகள் என்பது 180.000 என்று அமையுமானால் ஐ.தே.க.மற்றும்.வெறறிலைகக்hன வாக்குகள் சற்று அதிகரிக்கலாம். இந்த அதிகரிப்பு என்பது 3 பிரதான கட்சிகளுக்கும் தலா 1000 வாக்குகள் வீதம் அதிகரிக்கலாம்..

ஐ.தே.க.-1101ஸ்ரீ2, தமிழ் தேசியக் கூட்டமைப்பு -1,ஐ.மு.சு.கூ-1 என்ற எம்பிக்களைப் பெறுகின்றது.இங்கு கொள்கை ரீதியாக தமிழ் முஸ்லிம் இனஉறவை முன்நோக்கி முஸ்லிம் மக்களின் 8000 வாக்குகள் தமிழ் கூட்டமைப்புக்கு  கிடைக்குமானால் கூட்டமைப்பு 2 எம்பியைப் பெறலாம் .அதற்கான நல்ல அருமையான வாய்ப்பொன்று மூதூரில் இருந்து வந்த போதும் அந்த வாய்ப்பு கைநழுவிப் போய் விட்டது.

இங்கு வாக்களிப்பு வீதம் குறையுமனால் ஐ.தே.க.யின் 70 ஆயிரம் வாக்குகள் என்பது சற்றுக் குறையலாம்.அதே போன்று தமிழ் கூட்டமைப்பின் 52000 வாக்குகள் சற்றுக் குறையலாம்.மற்றும் ஐ.ம.சு.கூட்டமை;பின் வெற்றிலைச் சின்னத்தின்  40.000 வாக்குகள் இன்னும் 2000 வாக்குளாக அதிகரிக்கலாம்.காரணம் திருகோணமலை.கந்தளாய்.சேருவில ஆகிய பகுதிச் சிங்கள மக்களின்  மஹிந்தவுக்கான ஆதரவு இன்னும் குறையவில்லை.இங்கு 70 வீதமான முஸ்லிம் மக்களின் வாக்களிப்பையும் 52 வீதமான தமிழ் மக்களின் வாக்குப் பதிவையும் எதிர்பார்க்கலாம்.எப்பொழுதும் தமிழ் பகுதிகளில் எந்தத் தேர்தல் நடந்தாலும்  வாக்களிப்பு வீதம் என்பது சற்று மந்த நிலைதான் காணப்படுவது வழமையான செயல்தான்.திருமலையில் கூட்டமைப்பு சார்பாக சம்மந்தன்.வெற்றிலை சார்பாக சுசந்த புஞ்சிநிலமேவும்.யானையில் போட்டியிட்ட கிண்ணியா சின்ன மஹ்றூப் வெற்றி பெறும் நிலையுள்ளது. யானை சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிட்ட ஐ.தே.க வேட்பாளர் இம்ரானுக்கும் மு.கா வேட்பாளர் தௌபீக் ஆகிய இருவருக்கும் கடும் மனாப்பை போட்டி இடம்பெறும்.இருவரில் ஒருவர்  இரண்டாவது ஆசனத்தை பெற்று வெற்றி பெறுவார். இங்கு வெற்றி என்பது பெரிய இடைவெளி  இல்லாது சுமார் 1000-2000 மனாப்பை வித்தியாசத்தில் போட்டியும் வெற்றியும்  அமையும்.

வடக்கு மாகாணம்

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் பிரிவுகளைக் கொண்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 எம்பிக்களையும் வன்னி வாவட்டத்தில் 6 எம்பிக்களுமாக 13 எம்பிக்கள் கொண்டது.இதில் முஸ்லிம் எம்பி என்று 1 அல்லது 2 மற்றும் தமிழ் கூட்டமைப்பு இல்லாத ஆசனம் என்று ஆகக் கூடியது 2 ஆசனம் போக 9-10 எம்பிக்கள் தமிழ் கூட்டமைப்பு சார்பாக கிடைக்கலாம்.கிழக்கில்-5  ஆசனம் கிடைக்கும்.

கிழக்கில்  திருகோணமலை-1,மட்டக்களப்பு-3.அம்பாரை-1 அடங்கலாக  5 ஆசனங்கள்தான் கிடைக்கும்.மற்றும் கூட்டமைப்பின்  வட கிழக்கு தழுவிய தேசியப் பட்டில் -1 (இதில் தமிழ் மக்களின்  வாக்குகள் அதிகரிக்குமானால் 2 எம்பி  கிடைக்கவும்  வாப்புள்ளது.)  அப்படியான  ஒரு  வாய்ப்பு  2004 ஆம் ஆண்டு  வந்தது. மொத்தமாக 15-16 எம்பிக்களைப் பெற்ற மூன்றாவது சக்தியாக தழிழ் கூட்டமைப்பு  அமையும்.அமையப் போகின்ற நாடாளுமன்றத்தில் தமிழ் கூட்டமைப்பு ஒரு பேரம் பேசுகின்ற சக்தியாக ஆட்சிப் பங்காளியாக மாறக் கூடிய மிக அதிக வாய்ப்புள்ளது.

சிலவேளை ஐ.தே.க. வுக்கு ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்பு அல்லது ஜே.வி.பி.அல்லது கூட்டமைப்பின் ஆதரவு அல்லது இந்த இரண்டு கட்சிகளின் ஆதரவு தேவைப்படலாம்.ஆட்சிக்கு தமிழ் கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்பட்டால் அமையப் போகின்ற அரசுக்கு வெயியில் இருந்து கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்று வைக்;கப்படலாம். 

இந்த பொதுத் தேர்தலின் பின்னர் தமிழர் தரப்புக்கு ஒரு சிறிய தீர்வையாவது பெற்றுத் தரலாம் என்று பரவலாக எதிர்பார்கப்படுகின்றது.
-எம்.எம்.நிலாம்டீன்-                                                                                                               mmnilamuk@gmail.com


Read More
avathani Media Network

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைய மாட்டோம் என்கின்ற செய்தி மிகவும் கவலையளிக்கின்றது. ஐ.ம.சு.கூ முதன்மை வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைய மாட்டோம் என்கின்ற செய்தி மிகவும் கவலையளிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நேற்று 12 புதன்கிழமை மட்டக்களப்பு ஆயித்தியமலை கிறிஸ்தவ தேவாலயத்தில் அதன் பாதிரியார் தலைமையில் இடம்பெற்ற விஷேட சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் ஊடாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று கடந்த காலங்களில் பேசப்பட்ட விடயத்தை அறிந்து நாங்கள் மிகவும் சந்தோஷமடைந்திருந்தோம்.

ஏனென்றால் அவர்கள் அரசாங்கத்துடன் இணைகின்ற போது குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியிலே கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பாத்திருந்தோம்.

ஆனால் இன்று மீண்டும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணுகின்ற வரை அரசாங்கத்துடன் இணைய மாட்டோம் என்ற செய்தியையிட்டு நாங்கள் மிகவும் கவலையடைகின்றோம்.

இதன் மூலமாக தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியலை செய்கின்ற பொழுது தமிழ் பிரதேசங்களும் தமிழ் மக்களும் அபிவிருத்தியில் முற்றாக புறக்கணிக்கப்படலாம்.

எனவே தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்ற அதே நேரம் அரசாங்கத்திற்கும் வாக்களித்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவு செய்;யப்படுவதன் ஊடாக இந்த மாவட்டத்தை கட்டியெழுப்புவதற்கு உதவி செய்ய வேண்டுமென்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.

மேற்படி விஷேட சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட ஆயித்தியமலை கிறிஸ்தவ தேவாலயத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.










Read More