Featured Home (TOP)

Recent Comments

Friday, August 28, 2015

avathani Media Network

பதவிகளுக்கான இழுபறியும் நல்லாட்சியும்


இலங்­கையின் எட்­டா­வது பாரா­ளு­மன்ற பொதுத் தேர்தல் நடந்து முடிந்­ததைத் தொடர்ந்து ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைத்­துள்­ளன.

இதற்­க­மை­வாக நாட்டின் பிர­த­ம­ராக ரணில் விக்­ர­ம­சிங்க பத­வி­யேற்றார். இதனைத் தொடர்ந்து அவ­ச­ர­மாக மூவ­ருக்கு அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­பட்­டன. வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக மங்­கள சம­ர­வீ­ரவும் நீதி­ய­மைச்­ச­ராக விஜே­தாச ராஜ­பக்­சவும் புனர்­வாழ்வு மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ராக டி.எம்.சுவா­மி­நா­தனும் ஜனா­தி­பதி முன்­னி­லையில் பத­வி­யேற்றுக் கொண்­டனர்.



இந்­நி­லையில் மீத­முள்ள அமைச்சுப் பத­வி­களை பங்­கி­டு­வதில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சுதந்­திரக் கட்­சிக்­கு­மி­டையே பெரும் இழு­பறி தோன்­றி­யுள்­ள­தா­கவும் அதுவே அமைச்­சர்கள் நியம­னத்தில் தாமதம் ஏற்­படக் காரணம் எனவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

அமையப் பெற்­றுள்ள தேசிய அர­சாங்­கத்தில் 40 அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­களும் 10 இரா­ஜாங்க அமைச்­சர்­களும் 30 பிர­தி­ய­மைச்­சர்­களும் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஆரம்­பக்­கட்ட தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இந்த அமைச்­சுக்­களைப் பங்­கி­டு­வ­தி­லேயே தற்­போது இழு­பறி நிலை தோன்­றி­யுள்­ளது.

19 ஆவது திருத்தத்திற்கமைவாக அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையை 30 ஐ விட அதிகரிப்பதாக இருந்தால் பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும்.

அதற்கமைவாக எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி பாராளுமன்றம் கூடி அமைச்சரவை நியமனத்திற்கான அங்கீகாரத்தை வழங்கிய பின்னரே  புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
எது எப்­ப­டி­யி­ருப்­பினும் அமையப் பெற்­றுள்ள நல்­லாட்சி அர­சாங்­கத்தில் எழுந்­துள்ள அமைச்சுப் பத­விகள் தொடர்­பான இழு­பறி நிலை தேசிய அர­சாங்­கத்தின் வெற்­றி­க­ர­மான நகர்­வுக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக அமை­யலாம் என அர­சியல் அவ­தா­னிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

அது­மாத்­தி­ர­மன்றி தேர்தலில் தோல்வியுற்றவர்களிலிருந்து தேசியப் பட்டியல் மூலம் உள்வாங்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவதானது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு உகந்ததல்ல எனும் விமர்சனங்களும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

தேசியப் பட்டியல் மூலம் தேர்தலில் தோல்வியுற்றவர்களுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கியதற்கு எதிராக வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

ஆக அமைச்சுப் பதவிகளுக்கானதும் தேசியப் பட்டியல் தொடர்பானதுமான இழுபறியும் கருத்து முரண்பாடுகளும் நல்லாட்சி அரசாங்கத்தின் சுமுகமான இயக்கத்திற்கு குந்தகம் விளைவிக்குமானால் அது மக்கள் ஆகஸ்ட் 17 இல் மீள் உறுதிப்படுத்திய ஜனவரி 8 மாற்றத்தை குழிதோண்டிப் புதைப்பதாக அமைந்துவிடும்.

இது தொடர்பில் இரு தரப்பு அரசியல் தலைமைகளும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
Read More
avathani Media Network

மன்னிப்பு கோரிக்கை நீதிவானால் நிராகரிப்பு

கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சின் கட்­ட­டத்­துக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக புகுந்து குழப்பம் விளை­வித்த பொது­ப­ல­சேனா அமைப்பின் பௌத்த குரு­மார்கள் பொலி­ஸாரால் அவர்­க­ளுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கை மன்­னிப்பு கோரி சமா­தா­ன­மாக தீர்த்துக் கொள்ள கொழும்பு நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யிடம் அனு­மதி கோரிய போதும் நீதிவான் அதற்­கான அனு­ம­தியை மறுத்­துள்ளார்.
நேற்றுக் காலை கொழும்பு கோட்டை நீதிவான் நீதி­மன்­றத்தில் குறிப்­பிட்ட வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது பொது­ப­ல­சே­னாவின் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி வழக்கை சமா­தா­ன­மாக தீர்த்துக் கொள்ள விரும்­பு­வ­தா­கவும் அதற்­காக மன்­னிப்பு கோர தயா­ராக இருப்­ப­தா­கவும் நீதி­வா­னிடம் தெரி­வித்தார்.


குறிப்­பிட்ட 6 பௌத்த குரு­மார்­க­ளுக்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களில் ஒன்­றான சட்­ட­வி­ரோ­த­மாக ஒன்று கூடி­யமை மன்­னிக்கக் கூடிய ஒரு குற்றச் செய­லல்ல எனத் தெரி­வித்த நீதிவான் அந்தக் குற்றம் குற்றப் பத்­தி­ரி­கை­யி­லி­ருந்தும் நீக்­கப்­பட்டால் மாத்­தி­ரமே மன்­னிப்புக் கோரி சமா­தா­ன­மாக வழக்­கினைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்று தெரி­வித்தார்.

நேற்று நீதி­மன்றில் பிர­தி­வா­தி­க­ளான பொது­ப­ல­சேனா அமைப்பின் 6 குரு­மார்­களில் 4 பேர் மாத்­தி­ரமே நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

இவர்­களில் 3 ஆம் 5 ஆம் சந்­தேக நபர்­க­ளான சந்­திஸ்­தர தேரர் மற்றும் பன்­ஞா­ஜோதி தேரரும் நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருக்­க­வில்லை.

சந்­தேக நபர்கள் ஆறு பேரையும் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­து­மாறும் நீதிவான் கொள்­ளுப்­பிட்­டிய பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்டார்.

நீதி­மன்­றுக்கு வருகை தந்­தி­ருந்த குருமார் நால்­வரும் நடந்த சம்­ப­வத்­துக்கு வருத்தம் தெரி­விப்­ப­தா­கவும் அதற்­காக மன்­னிப்பு கோரி சமா­தா­ன­மாக விரும்­பு­வ­தா­கவும் RRT அமைப்பின் சட்­டத்­த­ர­ணிகள் சிராஸ் நூர்தீன், மைத்­திரி குணரத்ன ஆகியோரிடமும் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிபதி பாலிதலியனகே விசாரணையை எதிர்வரும் அக்டோபர் மாதம் 1 ஆம்  திகதிக்கு ஒத்திவைத்தார்.
Source - vidivelli.lk

Read More
avathani Media Network

56 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் பல்வேறு அளெகரியங்களுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட  56 இலங்கை பணிப்பெண்கள் இன்று கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

குறித்த பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றினூடாக சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் அங்கு தகுந்த முறையில் சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு பணியகம் உணவு மற்றும் தத்தமது வீடுகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்து கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
-virakesary-
Read More
avathani Media Network

மைத்திரி,ரணில்,சந்திரிகா நீண்ட நேரம் கலந்துரையாடல்!

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோ­ருக்கு இடையில் நேற்­று முன்தினமி­ரவு முக்­கிய சந்­திப்பு ஒன்று இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்குப் பின்னர் ஏற்­பட்­டுள்ள அர­சியல் சூழல் குறித்தே இந்தச் சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
விசே­ட­மாக அமைச்­சர்கள் நிய­மனம், பத­வி­யேற்பு நிகழ்வு , மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான அமைச்­சுக்கள் ஒதுக்­கீடு குறித்து இந்தச் சந்­திப்பில் ஆரா­யப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­வித்­தன.
பாரா­ளு­மன்றத் தேர்தல் முடிந்து 10 தினங்கள் கடந்­துள்ள நிலை­யிலும் புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்பில் இழு­பறி நிலை ஏற்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் புதிய தேசிய அர­சாங்­கத்தில் 45 பேர் கொண்ட அமைச்­ச­ர­வையை அமைப்­பது என்றும், அதில் 30 அமைச்­சுக்கள் ஐக்­கிய தேசிய கட்­சி­யி­ன­ருக்கும் 15 அமைச்சுப் பத­விகள் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கம் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ககு எவ்­வா­றான அமைச்சுப் பத­வி­களை வழங்­கு­வது என்­பது தொடர்பில் இதன்­போது ஆரா­யப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
எனினும், அமைச்­ச­ரவை பத­வி­யேற்பு அடுத்­த­மாதம் 2ஆம் திகதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இழுபறிகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் நேற்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More
avathani Media Network

A/L எழுதிய மாணவர்களுக்கென 7 நாள் வதிவிடப் பயிற்சி.


ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக மாணவ இளைஞர்களின் கல்வி மற்றும் பண்பாட்டு மறுமலர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

அந்தவகையில் எமது வருடாந்த நிகழ்சி நிரலின் ஓர் அங்கமாக க.பொ.த உயர்தரப் பரீட்சையினை எழுதிய மாணவர்களுத்கென 7 நாள் வதிவிடப் பயிற்சி நெறியாக நடாத்தபப்டபடுகின்ற Youth Development Program (YDP) இவ்வருடமும் செமடம்பர் மாதம் 11ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 06 இடங்களில் நடைபெற ஏற்பாடாகியூள்ளது.

நிகழ்சித் திட்டமானது அடிப்படை மார்க்க அறிவூ, எதிர்கால கல்வி தொடர்பான வழிகாட்டல, திறன் விருத்தி போன்ற பல்வேறு அம்சங்களையூம் உள்ளடக்கியிருப்பதனால் சமூகத்தின் பல மட்டங்களிலும, குறிப்பாக துறைசார்ந்தவர்கள் பெற்ரார்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இப்பயிற்சி நெறியின் முடிவில் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுமதியூடன் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதல் வழங்கப்படும்.

மேலதிக விபரங்களைப் பெற கீழ்வரும் இலக்கங்களை தொடர்புகொள்ள முடியூம்.

சகோ.ஹம்தி அஹமட் - 077 4243159
சகோ.கவ்வாம் - 075 2121413

(ஜுனைட்.எம்.பஹ்த் )
Read More