Featured Home (TOP)

Recent Comments

Friday, October 16, 2015

avathani Media Network

காரைதீவு சன்முகா மகா வித்தியாலயத்தில் சர்வதேச கைகழுவுதல் தினம் அனுஷ்டிப்பு.

(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)

காரைதீவு சன்முகா மகா வித்தியலயத்தில் சர்வதேச கைகழுவுதல் தினம் இன்று(16) சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
Read More
avathani Media Network

புவியை பாவியாக்க முனைந்த 'கஞ்சா வழக்கு...'

அநீதி, அக்கிரமம், ஊழல், மோசடி போன்றவற்றுக்கு எதிராக கடந்த பத்தாண்டுகளாக 'வார உரைகல்' எனும் பெயரில் வாராந்தப் பத்திரிகை, இணையதளம், டுவீட்டர் குறுஞ்செய்திச் சேவை போன்றுவற்றை நாடாத்தி வந்த செய்தியாசிரியர் புவி றஹ்மத்துல்லாஹ்வுக்கு எதிராக  வீட்டில் கஞ்சா இருந்ததாக குற்றச்சாட்டப்பட்டு மட்டக்களப்பு நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரண்டு வருடங்களின் பின் கடந்த 06ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் அவர் நிரபராதி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்தீர்ப்பின் 16 பக்கங்கள் கொண்ட உறுதிப்படுத்தப்பட்ட பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

















Read More
avathani Media Network

காத்தான்குடி, மீன் பிடி இலாகா வீதியில் கொங்ரீட் மேற்பரப்பு இடப்படுவதற்கான பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.



புதிய காத்தான்குடி மீன் பிடி இலாகா வீதியில் கொங்ரீட் மேற்பரப்பு இடப்படுவதற்கான பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை
முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் அவர்களும் கௌரவ அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களும் கலந்து கொண்டனர்

மீன் பிடி இலாகா வீதியில் மிக நீண்ட காலமாக ABC கல் கலவை இடப்பட்டு காணப்படுவதனால் வாகனங்கள் பயணிக்கின்ற போது அதில் இருந்து எழும் கல் தூசு காரணமாக அவ் வீதி ஓரத்தில் வீடுகளில் வசிக்கும் பெண்கள், பிள்ளைகள் பாதிக்கப்படுவதை கவனத்திற் கொள்ளப்பட்டு முதற்கட்டமாக 18 இலட்சம் ரூபா செலவில் கொங்ரீட் மேற்பரப்பு இடப்படுவதற்கான பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த வீதியில் சுமார் 400 மீட்டர் துாரத்திற்கு மேல் கொங்ரீட் மேற்பரப்பு இட வேண்டியுள்ளதாகவும் ஆனால் தற்போது சுமார் 120 மீட்டர் துாரத்திற்கே தற்போது  கொங்ரீட் மேற்பரப்பு இடப்பட இருப்பதாகவும் இதன் போது அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த வீதியினை முழுமையாக  கொங்ரீட் இட்டு தருமாறு பிரதேச மக்கள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஆகியோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.







Read More
avathani Media Network

கொத்தணி முறையில் உள்ளுராட்சி மன்றங்கள் இணைக்கப்பட்டு சுத்திகரிக்கும் பணி காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கபட்டது.

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

கொத்தணி முறையில் உள்ளுராட்சி மன்றங்கள் இணைக்கப்பட்டு வடிகான்கள் சுத்திகரிக்கும்  பணி காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கபட்டது.  இந் நிகழ்விற்கு பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் அவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களும் கலந்து கொண்டனர்.

கொத்தணி முறையில் உள்ளுராட்சி மன்றங்கள் இணைக்கப்படுவதன் ஊடாக இருக்கின்ற வளங்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் பாரிய வேலைத்திட்டங்களைச் செய்வதற்கு ஏதுவானதாகவும் இனங்களுக்கிடையே பரஸ்பரம் ஒற்மை,புரிந்துணர்வுகளை கட்டி எழுப்புவதற்கும் இக் கொத்தணி முறையிலான சுத்திகரிக்கும் பணி வழிவகுக்கும் என காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கபட்ட இன்நிகழ்வின் போது கிழக்கு மாகாணசபை  உறுப்பினர் ஷிப்லி பாறூக்தெரிவிதார்.

கிழக்கு மாகாணம் முழுவதுமாக அமைக்கப்பட்ட இக் கொத்தணி முறையிலான  துப்பரவு செய்யும் பணிகள் காத்தான்குடி,ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி போன்ற உள்ளுராட்சி மன்றங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு மூன்று பிரதேசங்களையும் துப்பரவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்படத்தக்கது.
இன்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை செயலாளர், அரச அதிகார்கள், உட்பட திணைக்களத்தில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Read More
avathani Media Network

மஹிந்த தரப்பு ஆட்சேபனை ஆணைக்குழுவால் நிராகரிப்பு

பாரிய மோசடி மற்றும் ஊழல் விசாரணை ஜனாதிபதி ஆணைக் குழுவிற்கு எதிராகமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பு சட்டத்தரணிகளால்
Read More
avathani Media Network

சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டத்தின் மாவட்ட நிகழ்வு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வு நேற்றைய
Read More
avathani Media Network

ஜனா­தி­ப­தியை விமர்­சிப்­போரை கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற்றும் காலம் நெருங்­கி­விட்­டது

ஜனா­தி­ப­தியை விமர்­சிக்கும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்­சி­களை சேர்ந்த உறுப்­பி­னர்­களை வெளி­யேற்ற வேண்­டிய காலம் நெருங்­கிவிட்­ட­தாக தெரி­
Read More
avathani Media Network

2016 நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் 23இல் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதோடு வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 20ம் திகதி இடம் பெறவுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரை நவம்பர் 20 ஆம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் மேற்கொள்ளப் படவுள்ளது. அன்று முதல் 14 தினங்கள் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 8 ஆம் திகதி நடத்த தீர்மானிக் கப்பட்டுள்ளது.
குழுநிலை விவாதம் டிசம்பர் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 12 தினங்கள் வரை இடம்பெறும்.
டிசம்பர் 22 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்த அமைச்சவை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் பதில் நிதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவினால் சமர்ப்பிக்கப் பட்டது.
Read More
avathani Media Network

இலங்கைக்கான சர்வதேச கிராமியப் பெண்கள் தினநிகழ்வுகள் இன்று காரைதீவில்;.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்ததௌஸ் )

இலங்கைக்கான சர்வதேச கிராமியப் பெண்கள் தினநிகழ்வுகள் இன்று (15) காரைதீவில் மிகச்சிறப்பாக இடம் பெற்றன.
Read More