"இனவாதமும் பிரதேச வாதமுமே நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் சாபக்கேடுகாளகும்": NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்
(ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)
"நமது முன்னேற்றத்திற்கு தடையாக நம்மை பீடித்திருக்கும் இரண்டு சாபக்கேடுகள் இருக்கின்றன. நம் மத்தியில் நிலவும் பிரதேசவாதம் மற்றும் இனவாதம் என்பனவே அந்த சாபக்கேடுகளாகும். இவற்றிலிருந்து மீண்டு வந்தால் மாத்திரமே நமது சமூகங்கள் முன்னேற முடியும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 1 ஆம் திகதி காத்தான்குடியில் நடை பெற்ற NFGGயின் மே தின நிகழ்வின் போது உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.







